உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 28, 2011

சிதம்பரம் குமராட்சி ஒன்றியத்தில் பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்

பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்.
சிதம்பரம்:
         புதிதாக கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கும் புதிய ஊரக நூலகம் திறக்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
              சிதம்பரம் நகரை ஓட்டி அமைந்துள்ளது நான் முனிசிபல் ஊராட்சி. குமராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்முனிசிபல் ஊராட்சிப் பகுதியில் உள்ள சிவசக்திநகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் (2010-11) ரூ. 30 லட்சம் செலவில் ஊரக நூலகம் அமைக்க புதிய கட்டடம் கட்டப்பட்டது. 
           கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இதுபோன்ற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயன்பாடின்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளது வேதனையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் இந்த ஊரக நூலக கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

வெள்ளி, டிசம்பர் 31, 2010

கடலூர் மாவட்டத்தில் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள்


பெண்ணாடத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு நூலகம்
கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு நூலகங்கள் வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றன. ஆனால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் நூலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் திறக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கின்றன.

             வளர்க்கும் இடங்களாக கருதப்படும் நூலகம் இன்று அவசியத் தேவையான ஒன்று. நூலகங்களை மாணவர்கள் மட்டுமின்றி, பெரியோர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்துகின்றனர். இன்று தொலைக்காட்சி ஆக்கிரமித்திருந்தாலும் நூலகத்துக்கான மவுசு இன்னும் குறையவில்லை. ஒவ்வொரு நூலகத்திலும் வாசகர் வட்டம் இருக்கத்தான் செய்கிறது. நூலகத்துக்குச் செல்லும் அங்கு நிலவும் அமைதியான சூழ்நிலை படிக்காத ஒருவரையும் புத்தகங்களை புரட்டச் செய்யும். அத்தகைய பெருமை நூலகங்களுக்கு உண்டு.

               மாவட்டத்தில் அரசின் சார்பில் 18 நூலங்கள் இயங்குகின்றன. இவற்றில் மூன்றில் 2 பங்கு நூலகங்கள் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகின்றன.அவ்வாறு வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள் போதிய பராமரிப்பின்றியும், மழைகாலத்தில் ஒழுகிக் கொண்டும், வருகிற வாசகர்கள் அமர்ந்தபடி படிக்க முடியாத சூழலில் இயங்குகின்றன.சில நூலகங்களில் புத்தகங்கள் அடுக்கி வைக்கக் கூட போதிய அலமாரிகள் இல்லாமல் அவை சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

                ஒரு சில நூலகர்கள் ஆங்காங்கே நூலகப் புரவலர்களை உருவாக்கி, புரவலர்களின் உதவியுடன், நூலகத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி வாசகர்கள் குறையாத வண்ணம் செயல்படுகின்றனர்.ஏழை எளியவரும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஓய்வுபெற்றவர்களும்தான் இன்று அதிகஅளவில் நூலகங்களை பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் விஞ்ஞான வளர்ச்சி என்பது கைக்கு எட்டாத தூரத்துக்கு வளர்ந்து விட்டபோதிலும், அரசு நூலக வளர்ச்சியில் போதிய பங்காற்றவில்லை என்பது கண்கூட தெரிகிறது.

          நூற்றாண்டு பழமைவாய்ந்த கன்னிமாரா நூலகத்தை புதுப்பித்து, அவற்றின் பெருமையை எடுத்துக்கூறும் அரசு, மாநிலம் முழுவதும் அரசுத்துறையால் நடத்தப்படுகிற நூலகத்தில் போதிய கவனம் செலுத்தாது ஏன் என்பது தெரியவில்லை.காலத்தால் அழியாத பல வரலாற்று உண்மைகள் உள்ளடக்கி, அவற்றை காலங்காலமாக போற்றிப் பாதுகாக்கப்படுவது இந்த நூலங்களில்தான்.அத்தகைய நூலகங்களுக்கு சொந்தக் கட்டடம் அவசியம் என்பதை ஏன் அரசு இன்னும் உணரவில்லை. 

               அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமம்தோறும் | 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டடங்கள் மட்டும் கட்டப்பட்டுள்ளன.இதன் மூலம் அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒப்பந்ததாரரும் மட்டும் பயன்பெற்றுள்ளனர். நூலகக் கட்டடம் எதற்காக கட்டப்பட்டதோ அதற்கான நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகள் இதுபோன்று வெறும் கட்டடங்களுக்கு செல்லாமல், தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்குகிற நூலகங்களுக்கு பயன்படுத்தியாவது, நூலகங்களுக்கென சொந்தக் கட்டடத்தை ஏற்படுத்த, அரசு முயற்சிக்குமா?

Read more »

வெள்ளி, நவம்பர் 12, 2010

நெய்வேலி அருகே திறக்கப்படாமல் உள்ள நூலகங்கள்

மந்தாரக்குப்பம் குடியிருப்புப் பகுதியில் ஓட்டுக் கொட்டகையில் உள்ள கெங்கைகொண்டான் அரசுக் கிளை நூலகம். (வலது) கம்மாபுரம் ஒன்றியம் வடக்கு வெள்ளூர் கிராமத்தில் உள்ள நூலகம் 
நெய்வேலி:
                   நெய்வேலியை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட நூலகங்கள் திறக்கப்படாமலேயே உள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டின்கீழ் செயல்படும் கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகம் போதிய இடவசதியின்றியும், மழைக் காலங்களில் மழை நீர் நூலகத்தினுள் புகுவதால் புத்தகங்ளை பாதுகாக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
                    கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பழைய நெய்வேலி, வடக்குவெள்ளூர், சேப்ளாநத்தம், முதனை உள்ளிட்ட கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் தலா 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் கட்டப்பட்டு ஒராண்டுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் அவை எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டதோ அது நிறைவேற்றப்படாமல் உள்ளது.
                அதே வேளையில் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட, மந்தாரக்குப்பத்தில், என்எல்சியின் பழங்கால கட்டடத்தில் கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகத்தில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த நூலகத்தில் புரவலர்களாகவும், அங்கத்தினர்களாகவும் உள்ளனர். நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிவைக்கக் கூட போதிய இடவசதியில்லை. 
                           மேலும் மழைக் காலங்களில் ஆங்காங்கே ஒழுகுவதால் மழைநீர் உள்ளே புகுந்து, புத்தகங்கள் நனைந்து விடுகின்றன.  இங்குள்ள நூலகரும், புரவலர்களின் உதவியுடன் புத்தகங்களின் ஸ்டாண்டு நனையாதவாறு பாலிதீன் பைகளைக் கொண்டு புத்தகங்களை பாதுகாத்து வருகிறார். பல லட்சம் செலவு செய்து, நூலகத்துக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் வெற்றிடமாக தூங்குகின்றன. ஆனால், பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மழையில் நனைந்த வண்ணம் ஓட்டுக் கொட்டகையில் மிதக்கின்றன. அரசும் நூலகத் துறையும் கவனிக்குமா?

Read more »

ஞாயிறு, மே 16, 2010

பூட்டியே கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள்


தே.கோபுராபுரம் கிராமத்தில் எப்போதும் மூடியே கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம்.
விருத்தாசலம்:
 
                 கிராமப்புற மக்களின் நலனுக்காக பல கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் பல கிராமங்களில் பூட்டியே கிடக்கின்றன. இவை முறையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஓர் அம்சமாக கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வொரு கிராமத்திலும் கட்டாயமாக அரசு நூலகங்களை அமைத்து வருகிறது.அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், அனைத்து கிராமங்களுக்கும் தலா ரூ.3,80,000 முதல் ரூ.3,90,000 வரை நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்படுகிறது. பின்னர் அரசு சார்பில் தளவாட பொருள்கள் மற்றும் புத்தகங்களுக்காக ரூ.1,00,000 ஒதுக்கப்படுகிறது.இந்திய விடுதலை வீரர்களின் சிறப்புகள், விடுதலைப் போராட்ட வரலாற்றை கூறும் நூல்கள், பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, அம்பேத்கர், பெரியார் பற்றிய நூல்கள் மற்றும் அவர்களது படைப்புகள், திருக்குறள் போன்ற அற இலக்கிய நூல்கள் நூலகத்துக்கு வழங்கப்படுகின்றன. அரசு நிர்வாகத் தேர்வுகளுக்கு பயன்படும் நூல்களும் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் உள்ளன. செய்தி நாளேடுகளும் நூலகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும், ஓய்வு நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் அரசு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.இந் நூலகத்தைப் பராமரிக்கவும், நூல்களை பாதுகாக்கவும் அப் பகுதிகளில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.750 ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. ஆனால், பல கிராமங்களில் இத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இன்னும் சில நூலகத்தில் புத்தகங்களே வந்து சேரவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. நூலகம் பூட்டியே கிடப்பதால் மாணவர்கள் மற்றும் நூல் வாசிப்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த நிலை விருத்தாசலம், கம்மாபுரம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது.ஓர் உதாரணம்விருத்தாசலம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட 51 கிராமங்களில் இதுவரை 31 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2010 ஆண்டில் மேலும் 10 நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது. நூலகம் அமைக்கப்பட்ட கிராமங்கள் சிலவற்றில் நூலகம் மூடியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பயன்பாடின்றி கிடக்கும் நூலகங்கள் சிலவற்றில் சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.  கிராம ஊராட்சித் தலைவர்கள் நூலகங்களுக்கு முக்கியத்துவம் தராததும், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நூலகப் பராமரிப்பு குறித்து ஊராட்சித் தலைவர்களிடம் கண்டிப்போடு அறிவுறுத்தாததும் இதற்கு முக்கியக் காரணம்.கருத்துப் புதையல்கள் குவிந்து கிடக்கும் புத்தகங்களை கிராமத்து மாணவர்கள் எளிதாகப் படித்து மகிழ உதவிய அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் மீது அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 30, 2010

வளர்ச்சிப்பணிகள் கலந்தாய்வு

சிறுபாக்கம்:

                     நல்லூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஊராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் ரவிசங்கர்நாத் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் சுலோசனா முன்னிலை வகித்தார். துணை ஆணையர் வீரபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளான குளம் தூர்வாருதல், நீர்வரத்து வாய்க்கால் சீரமைத்தல், புதிய குளம் வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பணிகளை தேர்வு செய்தல், பணிகள் நடைபெறாத ஊராட்சிகளில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், ஏப்ரல் 29, 2010

அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு


விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணியிடங்களை மாவட்ட திட்ட இயக்குனர் பார்வையிட்டார்.
 
                    விருத்தாசலம் ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜேந்திரபட்டினம், டி.வி.புத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, எடச்சித்தூர் ஆகிய ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது. பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை மாவட்ட திட்ட இயக்குனர் ராஜஸ்ரீ பார்வையிட்டார். பின்னர் காட்டுப் பரூர், சத்தியவாடி, விசலூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளையும், பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் ராஜேந்திரபட்டினத்தில் இருந்து கொக்கரசம் பேட்டை வரை அமைக்கப்படும் தார்சாலை பணியையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். பி.டி.ஓ., ஆதிலட்சுமி, கலியபெருமாள், பொறியாளர் காமராஜ், பணி பார்வையாளர்கள் செந்தில்நாதன், வீரப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior