உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 11, 2011

தமிழ்நாடு முழுவதும் வரும் கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பில் ஒரே பாடத்திட்டம்

           தமிழ்நாடு முழுவதும் அடுத்த கல்வி ஆண்டு முதல் பி.எட்.படிப்பில் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பத்மநாபன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பத்மநாபன்  கூறியது:-

           தமிழ்நாட்டில் அரசு பி.எட். (கல்வியியல் கல்லூரிகள்) கல்லூரிகள், அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், சுயநிதி பி.எட். கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கும் மேலாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் தபால் வழியில் பி.எட். படிப்பு உள்ளன.. ஆனால் பாடத்திட்டத்தில் மாற்றம் உள்ளது. இதை சரியாக ஒரே பாடத்திட்டமாக கொண்டு வர தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

            அதன்படி வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பி.எட். படிப்பிலும் ஒரே கல்விதிட்டம் கொண்டுவரப்படுகிறது மேலும் பிளஸ்-2 படித்துவிட்டு அந்த மாணவர்கள் பட்டப்படிப்புடன் பி.எட். படிப்பும் சேர்த்து படிக்கும் ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட். படிப்புகள் தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த படிப்பு கல்லூரிகளில் தான் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த படிப்பு 4 வருட படிப்பாகும். நல்ல கட்டமைப்பு வசதி உள்ள கல்லூரிகளில் தான் இந்த படிப்புக்கு அனுமதி கொடுக்கப்படும். இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல் மற்றும் 2-வது செமஸ்டர் படிப்புக்கு பாடத்திட்டம் எழுதப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளோம். அனுமதி கிடைத்த உடன் படிப்பு தொடங்கப்படும்.
            பி.எட். படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதியில் எந்த வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவித்தபடி மே மாதம் 25-ந்தேதி தேர்வு தொடங்குகிறது. இந்த பல்கலைக்கழகம் தொடங்கிய பின்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்தார். 

Read more »

சனி, ஜூன் 26, 2010

ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அறிவிப்பு


 
             ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு திருச்சியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.இதையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது வழி படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குநர் இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

                  ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி திருச்சியில் 3 மையங்களில் நடைபெறுகிறது.

மையத்தின் பெயர்    பிரிவு 

1. ஆர்.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,         

1. சிறப்பு பிரிவு மற்றும் தெலுங்குரயில் நிலையம் அருகில், 

திருச்சி.              மலையாளம், உருது மொழிப் பிரிவுகள்.

2. தொழிற்கல்விப் பிரிவு. (ஆண்-பெண்).

 2. நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,      

றிவியல் பிரிவு (இரு பாலர்).

பெரியார் நூற்றாண்டு கல்வியியல் கட்டடம், கே.கே. நகர், திருச்சி.          

 3. ஆக்ஸ்ஃபோர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,    கலைப்பிரிவு (இரு பாலர்) பிராட்டியூர் மேற்கு, திருச்சி.16,285 விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

                (தமிழ் வழி -16,128, உருது வழி - 58, தெலுங்கு வழி - 89, மலையாள வழி - 10). கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்களுடைய விவரங்கள், கலந்தாய்வு நடைபெறும் தேதி, கலந்தாய்வு மையம் போன்ற விவரங்கள் பள்ளிக்கல்வி இணையதளத்தில் www.pallikalvi.in/ வெளியிடப்பட்டுள்ளன. 

ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு:

                தமிழ் வழி: அறிவியல் பிரிவு, தொழில்கல்வி பிரிவு விண்ணப்பித்த ஆண்-பெண் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் பெண் விண்ணப்பதாரர்களில் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior