உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 25, 2012

நாம் தமிழர் கட்சி சார்பில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/df9fef58-2096-4210-8c23-da8d5eebdb99_S_secvpf.gif
 
கடலூர்:

         தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலதாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும், கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
 
         இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சாகுல்அமீது, அய்யநாதன், அன்பு தென்னரசன், அமுதாநம்பி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது:-  

            தானே புயல் தாக்கி 25 நாட்கள் ஆகியும், எந்த நிவாரணமும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் இல்லை. 50 ஆண்டுகளாக கட்டி காத்து வந்த தென்னை மரங்கள், 30, 40 ஆண்டுகால மா, பலா, முந்திரி மரங்கள் மற்றும் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன. சுனாமியை விட பன்மடங்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.  புதுச்சேரியில் சுமார் ரூ.2,500 கோடிக்கும், கடலூர் மாவட்டத்தில் ரூ.5,149 கோடியும் சேதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.125 கோடியும், கடலூருக்கு ரூ.500 கோடியும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

            பாதிக்கப்பட்ட மக்களை மத்திய வேளாண்துறை அமைச்சர் நேரில் சந்தித்து குறைகளை கேட்கவில்லை. தமிழர்களை தமிழர்களாகவே மதிக்கவில்லை. குஜராத்தில் நிலநடுக்கம், ஆந்திராவில் வெள்ளம் ஏற்பட்டபோது மத்திய அரசு உடனடி நிவாரண உதவிகளை செய்கிறது. ஆக, மற்ற மாநிலங்களில் இப்படி ஒரு இயற்கை சீற்றம் ஏற்படுகிறபோது எப்படி துடித்துப்போகிறார்கள். ஆனால் இங்கே ஒரு மாவட்டமே காடாக அழிந்து கிடக்கிறது. யாரும் வந்து பார்க்கவில்லை. அடுத்தமாதம் தேர்தல் வருவதாக இருந்தால் வந்து பார்த்து இருப்பார்கள். அப்படியானால் ஓட்டுக்கு மட்டும் மக்கள் வேண்டும்.  

           கூடங்குளத்துக்கு வந்து செல்லும் மத்திய மந்திரி நாராயணசாமி கடலூருக்கு ஏன் வரவில்லை. கூடங்குளத்தில் அணுஉலை பாதுகாப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். இங்கே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து பார்க்காதவர்கள் எப்படி அணு உலை வெடித்தால் வந்து பார்ப்பார்கள். இங்குள்ள மக்களுக்கு நேர்ந்த கதிதானே அங்குள்ள மக்களுக்கும் ஏற்படும். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எங்களை சக மனிதர்களாக மதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் பகுதியாக அறிவித்து மத்திய அரசு ரூ.2,500 கோடி நிவாரண உதவியையாவது வழங்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ச்சியாக மக்களை திரட்டி பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்களை நடத்துவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

சனி, நவம்பர் 12, 2011

கடலூர் மத்திய சிறையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் ஸ்டாலின்சந்திப்பு


கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடியை சந்தித்து விட்டு வெளியே வரும், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடலூர்:

           அ.தி.மு.க. அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று, முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடலூரில் தெரிவித்தார்.

          நிலம் பறிப்பு புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். அவரை வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

பின்னர் சிறை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் கூறியது: 

           புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவேன், உலகத்தில் 2-வது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவேன் என்று பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார்.போயஸ் தோட்டத்தையும் மனநல மருத்துவமனையாக மாற்றி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை, அடியோடு நிறுத்தி விட்டார்.துக்ளக் ஆட்சியைப் போல் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

           ஹிட்லர் ஆட்சிபோல் 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.அவர்களின் குடும்பங்கள் கண்ணீரும் கம்பளையுமாக உள்ளன. கடந்த முறை மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, 70 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மீண்டும் அந்த அவலம் உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எல்லோருக்கும் எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது. இந்த ஆட்சியின் அவலங்களைக் கண்டித்து பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

              தி.மு.க. இளைஞரணி சார்பில் வருகிற 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.அதைத் தொடர்ந்து கட்சித் தலைமையின் அனுமதி பெற்று உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த ஆலோசித்து வருகிறோம் என்றார் ஸ்டாலின்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினர் ஆதி.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, முன்னாள் நகராட்சித் தலைவர்கள் ஏ.ஜி.ராஜேந்திரன், து.தங்கராசு உள்ளிட்டோர் வந்து இருந்தனர்







Read more »

திங்கள், மே 30, 2011

என்.எல்.சியில். சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி:

                  என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

* என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியத்தை அமுல்படுத்த வேண்டும்.

* அலுவலக பணி நேரம் மாற்றத் திட்டத்தை நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.

* இரவு பணியில் வேலை பார்க்கும் தொழி லாளர்களுக்கு, அதிகாரி களுக்கு இணையாக ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தி தர வேண்டும்.

* இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 15 ஆண்டு கள் பணி முடித்தவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்.

* போனஸ்- இன்சென்டிவ் அலவன்ஸ்களில் வித்தி யாசம் இல்லாமல் அதிகாரி களுக்கு இணையாக வழங்க வேண்டும்.

* உணவக தொழிலாளர்களின் பதவி உயர்வை சரி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
 
 
 

Read more »

சனி, நவம்பர் 20, 2010

பாதாள சாக்கடை திட்ட பணி: பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் நடத்த வேண்டாம்; கடலூர் கலெக்டர் அறிக்கை

கடலூர்:

Read more »

திங்கள், அக்டோபர் 11, 2010

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                   விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணிகளுக்கு முன்பு இவ் வழியே 30 ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப்பூலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. தற்போது 15 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டாலும் விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை. 

                  இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், தற்போது கடலூர் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி பயணிகள் ரயிலை திருப்பாதிரிப்புலியூரில் இருந்து இயக்க வேண்டும், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

                     திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொதுச் செயலர் நிஜாமுதீன் தலைமை வகித்தார். தனியார் பேருந்து தொழிற்சங்க செயலர் பண்டரிநாதன், குடியிருப்போர் நலச்சங்க பொதுச்செயலர் எம்.மருதவாணன், தமிழ் தேசிய விடுதலை இயக்க மாநில பொறுப்பாளர் திருமார்பன், வெள்ளி கடற்கரை சிறுவணிக சங்கத் தலைவர் பரிதிவாணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

கூடுதல் கட்டணம் வசூல்: பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

         கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து கடலூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

             கடலூர் தனியார் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயலும் மாணவ மாணவியர் சுமார் 200 பேர், கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:

             இந்த தனியார் பொறியியல் கல்லூரியில் இ-லேர்னிங் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 8 ஆயிரம் வசூலித்து இருக்கிறார்கள். இக்கட்டணம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குக் கிடையாது என்று திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறியது:

           மாணவர்களைத் துறைத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். கல்லூரிக்குள் நுழைய விடாமல் கல்லூரி அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். போராட்டத்தில் பங்கேற்க வெளியேற முயன்ற சில மாணவிகளை, கல்லூரி விடுதியில் தனி அறையில் அடைத்தனர். அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு மாணவியை அடிக்க முயன்றனர். மாணவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரிடம் தவறாகப் பேசியுள்ளனர். புகார்களுக்கு நிர்வாகத்திடம் பேசி, எங்களின் படிப்புக்கு எவ்வித இடையூறும் பின்விளைவும் இல்லாத நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் மனுவில் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.

                மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இயக்குநர் சி.ஏ.தாஸ்,  கடலூர் வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior