உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 18, 2011

இந்தியாவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு - ஒரு அலசல்

India now ruled by..

Amma in South


Didi in East 
Bhenji in North


Aunty in the Capital
 

Madam in Center  



Grand ma on top (the President)
 

 & 

WIFE AT HOME 

 And yet people say.. It’s a Man's World !?

Read more »

செவ்வாய், டிசம்பர் 28, 2010

திட்டக்குடி தொகுதியை மகளிருக்கு ஒதுக்க வேண்டும்: ராகுலுக்கு மனு

திட்டக்குடி : 

         திட்டக்குடி தொகுதியை இளைஞர் காங்., மகளிர் நிர்வாகிக்கு ஒதுக்க மனு அளிக்கப்பட்டது. 

திட்டக்குடி சட்டசபை தனி தொகுதி இளைஞர் காங்., பொதுச் செயலர் இறையூர் காவேரி பிரியங்கா, இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுல்காந்தியிடம் நேரில் அளித்துள்ள மனு:

                  திட்டக்குடி தொகுதியினை இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு மகளிர் நலனில் அதிகளவு அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் திட்டக்குடி தொகுதி சார்பில் இளைஞர் காங்., மகளிர் நிர்வாகி போட்டியிட்டால் 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே இளைஞர் காங்., சார்பில் போட்டியிட மகளிருக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

Read more »

வெள்ளி, மார்ச் 12, 2010

சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழு

சிதம்பரம்:

                    சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது.நிறுவனத் தலைவர் மணிவண்ணன், மாநில தலைவர் குபேந்திரகுணபாலன், வக்கீல் அணித்தலைவர் செல்வபதி, சாக் ரட்டீஸ், செந்தில், செந்தில்குமார், கணேசன், பரிமளம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெண்ணகரம் இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரை ஆதரித்து பிரசாரம் செய்வது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று 1986 முதல் 1998 வரை 50 ஆயிரம் வழக்குகளில் சிக்கி சிறைபட்ட வன்னியர்களை மிகவும்  பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர்களை அரசு இட ஒதுக்கீடு தியாகிகளாக அறிவித்து மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் மற்றும் அரசு பஸ்களில் இலவச பாஸ் வழங்கவும்,  நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடு துறையை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும், சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி, கடலூர் வரையும், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரை புதிய ரயில் பாதை அமைக்கவும்  2010ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்க அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

புதன், மார்ச் 10, 2010

பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சாதனங்களை புறக்கணிக்க வேண்டும்: நீதிபதி ராமபத்திரன் பேச்சு

கடலூர் : 

                 பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சினிமா, "டிவி' தொடர்கள் மற்றும் விளம்பரங்களை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி பேசினார். கடலூரில் பவ்டா மகளிர் சுய உதவிக்குழு சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஒன்று கூடல் விழா நடந்தது. பவ்டா இயக்குனர் ஜாஸ்மின் தம்பி தலைமை தாங்கினார். முதுநிலை மேலாளர் பிரேம்குமார் வரவேற்றார். உதவிப் பொதுமேலாளர் கோவிந்தராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராமபத் திரன், மா, வட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாகீர்உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பவ்டா கிளை மேலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

விழாவில் நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது: 

                       சுய உதவிக்குழுக்களின் பெண்கள் ஒன்று கூடி நடத்தப்படும் விழாவில் பாட்டுப்போட்டி, அதிக சாப்பாடு சாப்பிடும் போட்டி என நடத்தப்படுகிறது. இது போன்று போட்டிகளை நடத்துவதை தவிர்த்து பெண்கள் சமூகத்தில் வளர்ச்சி அடையக்கூடிய வகையில் போட் டிகள் நடத்த வேண்டும். அதன் மூலம் பெண்களின் அணுகு முறையும், பார்வையும் மாற வேண்டும். கிராமத்தில் உள்ள ஒரு பெண் கல்வி கற்றால் ஊரே படித்தது போல் என்பார்கள். பெண்கள் ஒரு செய்தியை தெரிந்துக் கொண்டால் அதை மற்றவர்களுக்கு சொல்லாமல் அவர் களால் இருக்க முடியாது. எனவேதான் பெண்களின் கல்வி வலியுறுத்தப்படுகிறது. மேலும் இது போன்ற கூட்டங்களில் பங்கேற்கும் பெண்கள், தங்கள் உரிமைகளை பற்றி தெரிந்துக் கொண்டு மற்றவர்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும். தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது போல் லோக்சபா, சட்டசபையிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.மேலும் சமூகத்தில் பெண்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படும்போது உரிமைகளை கேட்டு பெறவேண்டும்.
                பெண்கள் தொட்டாச் சிணுங்கிகளாக இல்லாமல், தங்களது உரிமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை விழாவிற்கு வரும் போது உங்களின் பார்வை மாறியிருக்க வேண்டும். நாட்டிற்காக போராடிய ஜான்சிராணி உள்ளிட்டவர்களை முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டு போராடும் திறன் படைத்தவர்களாக திகழவேண்டும். பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களை போகப் பொருட்களாக சித்தரிக்கப்படும் விளம்பரம், சினிமாக்கள், 'டிவி' தொடர்களை புறக்கணிக்க வேண்டும் எனப் பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior