உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 29, 2010

கடலூர் புதுப்பாளையத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இலவச டியூஷன்மையம் திறப்பு விழா

கடலூர்: 

            கடலூர் புதுப்பாளையத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இலவச டியூஷன் மையம் திறப்பு மற்றும் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.

             வாலிபர் சங்க நகரக்குழு ரமேஷ் தலைமை தாங் கினார். சந்திரகுமார், சரவணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ஆனந்த் வரவேற்றார். மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன் இலவச டியூஷன் சென்டரை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை வழங்கி பேசினார்.விழாவில் மா.கம்யூ., நகர செயலாளர் சுப்ராயன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன், நகர செயலாளர் அமர்நாதன் பங்கேற்றனர்.

Read more »

செவ்வாய், ஜூன் 15, 2010

மயூரா ஆற்றின் மணல் குவாரியை ரத்து செய்ய கலெக்டரிடம் மனு


கடலூர் : 

                  விருத்தாசலம் அடுத்த நகர் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் அனுமதி வழங்கிய மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தள்ளனர். 

மனுவின் விவரம் வருமாறு:

                        விருத்தாசலம் அடுத்த நகர் கிராமத்தில் 4,000க்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு தேவையான குடிநீர் மயூரா ஆற்றிலிருந்து போர்வெல் மூலம் வழங்கப்படுகிறது. இருந்தும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக் குறை ஏற்படுகிறது. இந்நிலையில் கடந் தாண்டு மயூரா ஆற்றில் லாரி மூலம் மணல் எடுப்பதை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று மணல் குவாரி ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் எடுத்து செல்கின்றன. இதனால் நிலத்தடி நீர் குறைகிறது. மேலும் அருகில் உள்ள நிலங்கள் மழைக் காலத் தில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அருகில் உள்ள நல்லூர் அரசு பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் லாரியின் மூலம் மணல் எடுக்கும் குவாரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Read more »

சனி, பிப்ரவரி 13, 2010

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:
 
               மங்கலம்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
 
                 ஓய்வு பெற்ற அலுவலர்களை பணியில் அமர்த்துவதற்கான அரசாணையைக் கண்டித்து பிப்ரவரி 3-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகை மற்றும் கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்தும் மங்கலம்பேட்டை கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் அசோகன், வழக்கறிஞர் சங்க மாநில க் குழு சந்திரசேகரன், விஜி, சிவஞானம், ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior