உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஈச்சங்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈச்சங்காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 04, 2011

விருத்தாசலம் அருகே என்ஜின் கோளாறால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் நடு வழியில் நின்றது

விருத்தாசலம்:
 
             மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அதிகாலை 2 மணியளவில் ரெயில் விருத்தாசலம் அருகே ஈச்சங்காடு என்ற இடத்தில் வந்தபோது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டு நின்று போனது.  

               இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் விருத்தாசலத்தில் இருந்து மாற்று என்ஜினை வரவழைத்து அதன் மூலம் ரெயிலை இயக்கினர்.  ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு 3 மணிக்கு ரெயில் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் புறப்பட்டு வந்த கன்னியாகுமரி, பொதிகை, ராமேஸ்வரம், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட அனைத்து ரெயில்களும் அந்தந்த ரெயில் நிலையங்களில் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.  

               இதேபோல் சென்னையில் இருந்து சேலத்துக்கு நேற்று இரவு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இரவு 11.45 மணியளவில் மதுராந்தகத்துக்கும், திண்டிவனத்துக்கும் இடையே தொழுப்பேடு என்ற இடத்தில் வந்தபோது என்ஜின் கோளாறால் ரெயில் நின்று போனது. உடனடியாக இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் கோளாறை சரிசெய்தனர். சுமார் 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 
 
 
 
 
 

Read more »

திங்கள், மார்ச் 29, 2010

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. குழு 31-ல் பார்வையிடுகிறது

கடலூர்:
        கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்புக் கண்காணிப்பாளர் குழு 31-ம் தேதி பார்வையிடுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியற்றின் பிரதிநிதிகளையும் இக்குழு சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிகிறது. ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆலிவர் ஷட்டர் மற்றும் அவரது குழுவினர் 31-ம் தேதி கடலூர் வருகிறார்கள். அவர்களது நிகழ்ச்சிகளை இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் த.குருசாமி தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள்.
              31-ம் தேதி காலை 8-30 மணி முதல் 9 மணி வரை கடலூர் டவுன்ஹாலில், ஐ.நா. சபைக் குழுவிடம் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பாதுகாப்பில் ஏற்பட்டு உள்ள பின்னடைவு குறித்து இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு விளக்கம் அளிக்கிறது. பகல் 12 மணி வரை, சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகிலிருக்கும்   குடிகாடு, ஈச்சங்காடு, காரைக்காடு, சங்கொலிக்குப்பம், செம்மங்குப்பம் கிராமங்களில் மக்களைச் சந்தித்து கருத்துக்களை கேட்டறிகிறது. பகல் 12-30 முதல் மாலை 4-30 வரை, கடலூர் டவுன்ஹாலில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள், சிப்காட் முகவர்கள் ஒப்பந்ததாரர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள் ஆகியோரை இக்குழு சந்திக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகிய உணவு, தண்ணீருக்கான உரிமை, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகள் தொழில்மயம் என்ற பெயரால் எவ்வாறெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை களப்பார்வையிடல் மூலம் அறிந்து ஐ.நா.சபைக்கு தெரிவிக்கும் முயற்சி இதுவாகும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior