உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஈஷா அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈஷா அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 27, 2010

சிதம்பரம் நடராஜர் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்ள சத்குரு வேண்டுகோள்


 
சிதம்பரம்:

            சிதம்பரத்தில் கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாசத்சங்கம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு ஜகி வாசுதேவ் பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

தாங்கள் நடராஜர் கோயிலுக்கு சென்ற நோக்கம் என்ன? 

                      பூமியை நாம் உருவாக்கவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடியாத அளவில் படைத்தல் நடந்துள்ளது. படைத்தல் மூலமாக எதுவும் புரிந்து கொள்ள முடியாததால் அதற்கு நாம் கடவுள் என்ற பெயர் கொடுத்தோம். நாம் பல்வேறு வடிவில் கடவுள்களை வணங்குகிறோம். உலகத்தில் 33 லட்சம் கடவுள் உள்ளனர். அவை போதாது என நான் நினைக்கிறேன். நம்நாட்டில் 120 கோடி மக்கள் உள்ளனர். பெற்ற தாயைப் பிடித்தால் தாயை கடவுளாக வைத்துக் கொள்ளுங்கள். எதன்மீது ஈடுபாடு உள்ளதோ அதனை கடவுளாக எடுத்துக் கொள்ளுங்கள். கோயில் என்பது பிராத்தனை செய்யும் இடம் மட்டும் என சொல்லவில்லை. குடும்ப வாழ்க்கையை தொடங்குபவர்கள் குளித்துவிட்டு முதன்முதலில் கோயிலுக்கு சென்று உட்கார்ந்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது கோயிலுக்கு போய் உட்கார முடியவில்லை. வேகமாக சென்று சுற்றிவிட்டு, சுவாமியிடம் விண்ணப்பத்தை கொடுத்து விட்டு வந்துவிடுகிறோம்.

                       கோயிலை அழகாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் தினமும் கோயிலுக்கு போக வேண்டும். ஆன்மிக வாழ்க்கையில் உள்ளவர்கள் கோயிலுக்கு போகத் தேவையில்லை. சிதம்பரம் கோயில் என்பது புராதனமாக பார்த்தால் பிரமாதமான விஷயம். அந்த காலத்தில் எந்தவித தொழில்நுட்பமும் இன்றி, கருவிகள் இன்றி வெறும் மனிதர்களின் திறமை மற்றும் தைரியத்தால் உருவாக்கப்பட்டது இக் கோயில். தினமும் கோயிலுக்கு செல்லும் போது இந்த தைரியமும், திறமையும் தூண்டப்படும். நம்மால் இது போன்ற ஒரு கோயிலை உருவாக்க முடியாது. முன்னோர் உருவாக்கி வைத்த கோயிலை பாதுகாக்க முடியவில்லை. பௌர்ணமிக்கு, அமாவாசைக்கு ஒருநாள் ஈஷா யோகா தொண்டர்களும், பொதுமக்களும் சேர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Read more »

வெள்ளி, அக்டோபர் 22, 2010

பசுமை கரங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது:ஈஷா யோகா பி.ஆர்.ஓ., பேட்டி

சிதம்பரம்:

                ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராம புத்துணர்வு, பசுமை கரங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மக்கள் தொடர்பு அதிகாரி சுவாமி ஏகா கூறினார்.

ஈஷா அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி சுவாமி ஏகா கூறியதாவது:

                   மக்கள் மனதில் ஆன்மிக அலை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் "ஆனந்த அலை மகா சத்சங்கங்கள்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 16 நகரங்களில் நடத்த திட்டமிட்டு கடந்த மாதம் 26ம் தேதி மதுரையில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் 24ம் தேதி மாலை 6மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அருளுரை வழங்குகிறார். அப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். சிதம்பரம் நகரை பசுமையாக்கும் விதத்தில் "பசுமை சிதம்பரம்' இயக்கத்தை மரக்கன்று நட்டு சத்குரு துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவசமாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

                      புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனை கிராமங்கள் என கணக்கிட்டு அவர்களுக்கு தேவையான அளவில் மரக்கன்றுகள் கொடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மரக்கன்று கொடுக்கும் போது அவர்களின் இருப்பிடம் மற்றும் விலாசம் எழுதிக்கொண்டு கொடுக்கிறோம். அவ்வப்போது எங்களின் தன்னார்வ தொண்டர்கள் கண்காணித்து உதவி செய்வார்கள். பட்டு போகும் சில மரங்களுக்கு மாற்று மரக்கன்றுகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.இந்தியாவில் 200 ஈஷா யோகா மையங்களும், தமிழகத்தில் மட்டும் 120 மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கிராம புத்துணர்வு திட்டம், பசுமை கரங்கள் திட்டம், ஈஷா வித்யா பள்ளிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

                       குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கும் விதமாக தமிழகத்தில் 7 பள்ளிகள் செயல்படுகிறது. மேலும் இவை விரிவுபடுத்தப்படும்.மகா சத்சங்கங்கள் நிகழ்ச்சியையொட்டி 23ம் தேதி சிதம்பரம் கீழவீதியில் இருந்து பல்கலைகழக மைதானம் வரை 2500 பேர் பங்கேற்கும் மாபெரும் பசுமை பேரணி நடக்கிறது. 25ம் தேதி காலை சிதம்பரம் அடுத்த மடவாப்பள்ளம் பகுதியில் உள்ள ஈஷா பள்ளியில் சத்குரு நேரடியாக சென்று மாணவர்களிடம் உரையாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட அமைப்பாளர் பொன்னுதுரை, வெளிச்சம் சேகர், முத்து, தளபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior