உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

தமிழகம் முழுவதும் இடுபொருட்கள் பெற விவசாயிகளுக்கு அரசு அடையாள அட்டை அறிமுகம்

நெல்லிக்குப்பம் : 

            தமிழக அரசு மூலம் வழங்கப்படும் இடுபொருட்களை எளிதாக பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

             தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு "ராஜராஜன் 1000' நெல் நடவு, பயிறு வகை பயிர்களுக்கு இலவசம் மற்றும் மானிய விலையில் இடுபொருட்களும், சொட்டு நீர் உட்பட பல திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவற்றை பெற ஒவ்வொரு முறையும் பல்வேறு விவரங்களை விவசாயிகள் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக செலவு அதிகமாவதுடன், நேரமும் விரயமாகிறது. 
            இதனைத் தவிர்க்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள அட்டை வழங்கி அதில் விவசாயி பெயர், வங்கி கணக்கு எண், நிலத்தின் சர்வே எண் போன்ற விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டால் போதும், அதன் பிறகு விவசாயிகள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விவசாய டெப்போவில் இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம். 

              இதற்காக ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை பார்க்கத் தேவையில்லை. எளிதாக இடுபொருட்களை பெறமுடியும். மானிய தொகைகள் மற்றும் நிவாரண நிதிகளை இனி விவசாயிகள் வங்கிகளில் நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அண்ணாகிராமம் வட்டாரத்தில் 5,600 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை உதவி இயக்குனர் சம்பத்குமார் செய்து வருகிறார்.

Read more »

புதன், ஜூலை 14, 2010

உயிரி இடுபொருள் உற்பத்தி மையம் : கடலூர் வட்டாரத்தில் துவக்க விழா

கடலூர்:

                  கடலூரில் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் துவக்க விழா நடந்தது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் துறை மூலம் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட 2.5 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கடலூர் வட்டத்தில் இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட காரணப் பட்டு டான்வெப் பண்ணை மகளிர் குழு தேர்வு செய்யப்பட்டு, இக் குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் பயிற்சி பெற்று குழு மூலம் உற்பத்தியை துவக்கி உள்ளனர்.

                தூக்கணாம்பாக்கத்தில் அமைந்துள்ள உயிரியல் காரணி உற்பத்தி மையத் தைத் துவக்கி வைத்த வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், மையத்தில் தயாரான "சூடோமோனாஸ்' மற்றும் உற்பத்திக்கு பயன்படுத் தப்படும் இடுபொருட்கள், இயந்திரங் களை பார்வையிட்டார். பின்னர் "சூடோமோனாஸ்' உற்பத்தி மற்றும் அதனைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகளை விளக்கினார். தரமான உயிரியல் காரணி உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து வேளண் துணை இயக்குனர் பாபுவும், சுற்றுச் சூழல் பாதிக்காமல் நோய்களை கட்டுப்படுத்த உயிரியல் காரணிகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை உதவி இயக்குனர் இளவரசனும் விளக்கினர்.விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளர் புத்ததாசன், வேளாண் அலுவலர்கள் சின்னக்கண்ணு, உதவி வேளாண் அலுவலர் ஜெயராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior