உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




எம்.எல்.ஏ.வேல்முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எல்.ஏ.வேல்முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 05, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரண பணிகளை துரிதப்படுத்த கோரி தி.வேல்முருகன் உண்ணாவிரதம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/f8ff4e6d-90ad-4734-93cf-ad1184c84672_S_secvpf.gif
 
நெய்வேலி:

            கடந்த 30-ந் தேதி வீசிய தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை விரைவுபடுத்த கோரியும், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி உண்ணாவிரதம் நடை பெறும் என முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அறிவித்திருந்தார்.

            அதன்படி நேற்று நெய்வேலி புதுநகர் தெர்மல் பஸ் நிலையம் அருகே வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் உண்ணாவிரதமிருந்தனர். இதில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் அன்பழகன், தேவராஜன் உள்பட ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணா விரதத்தை தொடர்வது என வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், நவம்பர் 22, 2011

கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்: சார் ஆட்சியர் விசாரணை

கடலூர்:

            கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை தொடர்பாக, கடலூர் சார் ஆட்சியர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.  பா.ம.க. இணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் புதிய கட்சி தொடங்க உத்தேசித்து வருவதாக தெரிகிறது. அதுகுறித்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனது பலத்தை நிரூபிக்க முயன்று வருகிறார்.

             இந்த நிலையில் கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை எழுந்துள்ளது. வேல்முருகன், பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் ப.சண்முகம் மற்றும் முத்தையப் படையாச்சி, அமராவதி என்று மூன்று தரப்பினர் இந்த கடலூர் அலுவலகத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். இதுதொடர்பாக மூன்று தரப்பினரும் போலீசாரி டமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தனர். இதையடுத்து, கடலூர் சார் ஆட்சியர் விசாரணைக்கு, காவல் துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் பா.ம.க. தரப்பினருக்கும் வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடும் என்பதால், கடந்த 12-ம் தேதி, கடலூர் பா.ம.க. அலுவலகத்தை சார் ஆட்சியர் பூட்டி சீல் வைத்தார். 

           இதுகுறித்த விசாரணை கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. சார் ஆட்சியர் கிரண்குராலா விசாரணை நடத்தினார். அப்போது மூன்று தரப்பினரும் ஆதாரங்களை முறையாக அளிக்கவில்லை. இந்த நிலையில் பா.ம.க. அலுவலகம் உள்ள நிலம் நகராட்சிக்குச் சொந்தமானது என்றும், ராஜலட்சுமி என்பவருக்கு நீண்டகால குத்தகைக்கு அளிக்கப்பட்டு இருந்தது என்றும் மற்றொரு தகவல் கிடைத்து உள்ளது. எனவே, இப்பிரச்னையில் கடலூர் நகராட்சி நிர்வாகத்தை 4-வது தரப்பாக விசாரணையில் சேர்க்க முடிவு செய்து சம்மன் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.     இதையடுத்து, விசாரணையை சார் ஆட்சியர் டிசம்பர் 9-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.









Read more »

புதன், நவம்பர் 09, 2011

Pattali Makkal Katchi seeks official help to evict ‘rebels' from building

 http://www.thehindu.com/multimedia/dynamic/00829/06THSANGAM_829102e.jpg
 The Vanniyar Sangham building in Cuddalore which is under dispute

         As a sequel to the expulsion of joint general secretary T. Velmurugan from the Pattali Makkal Katchi now efforts are on to drive out the ‘rebels' and take possession of the Vanniyar Sangham building located in the heart of Cuddalore town..

        District secretary P. Shanmugam on Friday gave a memorandum to Incharge Revenue Divisional Officer Ilango and the Additional Superintendent of Police Ramakrishnan stating that the Vanniyar Sangham building was illegally occupied by the Velmurugan supporters. He expressed apprehension that certain outsiders, carrying weapons, must be staying in the building to foment trouble. He stated that the building belonged to the Vanniyar Sangham founded by S. Ramadoss. Therefore, the authorities should evict the illegal occupants and hand it over to the Vanniyar Sangham.
 
Velmuguran' stand

           Mr. Velmuguran had gone public stating that if either PMK president G.K. Mani or Vanniyar Sangham leader Guru came over here he would hand over the keys to the building, but would thwart any attempt to take forcible possession of the building. He further said that because of his initiative the building had come up and the present office-bearers of the district unit did not have any role in it. Police personnel were posted there to avert any law and order problem. 









Read more »

புதன், நவம்பர் 02, 2011

தி.வேல்முருகன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கம்: சிதம்பரத்தில் பா.ம.க.வினர் 200 பேர் விலகுவதாக அறிவிப்பு

சிதம்பரம்:

     முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதை அடுத்து சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

           முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் முடிவண்ணன், மாவட்ட கவுன்சிலர் கர்ணா, கோபு, ரவிச்சந்திரன், தமிழரசன், சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

            வேல்முருகனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதை கண்டித்தும், கட்சியின் நிறுவனர் ராமதாசை கண்டித்தும், கட்சிக்காகவும், வன்னியர் சமுதாயத்திற்காகவும் பாடுபட்டு சிறைத்தண்டனை அனுபவித்த பொறுப்பாளர்களை எவ்வித காரணமும் இல்லாமல் வெளியேற்றியதை கண்டித்தும் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட சுமார் 200 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவது என்று முடிவு செய்தனர்.

            மேலும் வேல்முருகன் எடுக்கும் எந்த முடிவிற்கும் ஆதரவு தெரிவிப்பது என்றும் முடிவு செய்தனர். இதில் சிதம்பரம் பொறுப்பாளர்கள் அமைப்பு செயலாளர் கோவி.தில்லைநாயகம், தொண்டரணி தலைவர் குமார், பாலு, தமிழ்மணி, சுதாகர், ராமகிருஷ் ணன், சிவா, செந்தில், குணா, சுகுமார், சண்முகம், கார்த்தி, கணேஷ், மாரியப்பன், திருமுட்டம் பொறுப்பாளர்கள் சுப்பிரமணி, எழிலரசன், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், நாகேஷ்வரன், பாலமுருகன், காட்டு மன்னார்கோயில் பொறுப்பாளர்கள் ஆளவந்தான், சங்கர், பிரகாசு, புவனகிரி பொறுப்பாளர்கள் மனோகரன், சுரேஷ், பிரபு,காசிநாதன், பரங்கிபேட்டை சேர்ந்த பொறுப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், பாலக்கிருஷ்ணன், அருள், குமரன் உள்பட பலர் கலது கொண்டனர்.
















Read more »

செவ்வாய், நவம்பர் 01, 2011

தி.வேல்முருகன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கம்: நெய்வேலியில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/31080ad4-d350-45bd-a954-e922845a652c_S_secvpf.gif
 
நெய்வேலி:

         முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

              இந்தநிலையில் நெய்வேலி 19-வது வட்டம் கே.என்.சுப்புராயர் சாலையில் உள்ள பா.ம.க.வின் என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு சிலர் வந்தனர். வாசலில் நின்ற காவலாளி கோவிந்தராஜை தாக்கினார்கள். பின்னர் அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த டி.வி. மற்றும் டெலிபோனை உடைத்து நொறுக்கினார்கள். நாற்காலிகள், மேஜைகள், டியூப்லைட்டுகள் உடைக்கப்பட்டன. பீரோவை தள்ளி விடடு அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

             மேலும் நெய்வேலி 1-வது வட்டத்தில் இருந்து 30-வது வட்டம் வரை இருந்த பா.ம.க.கொடிக்கம்பங்கள் நள்ளிரவில் வெட்டி சாய்க்கப்பட்டன. சூறையாடிப்பட்ட பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திற்கு என்.எல்.சி. பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜோதி பிரகாசம், பொது செயலாளர் திலகர் பொருளாளர் ஏஞ்சலின் மோனிகா, அலுவலக செயலாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் சூறையாடப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டார்கள்.

நெய்வேலி பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி கூறியது:-

               பாட்டாளி மக்கள் கட்சியின் அடித்தள பணியிலிருந்து தொடங்கி முற்றிலுமாக பாடுபட்டவர் வேல்முருகன். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இதனால் நெய்வேலி பா.ம.க. தொண்டர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர்களது உணர்வுக்கு மதிப்பு அளிக்கிறேன். கட்சியில் வேல்முருகனின் சீரிய பணிகளை நினைவில் கொண்டு மீண்டும் அவரை கட்சி பணியில் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கம்: கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.கலைக்கப்பட்டது

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/3b22320c-edc7-4f49-8362-5ada6e6277c1_S_secvpf.gif
கடலூர்:
            பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ம.க.வின் மாநில இணை பொது செயலாளருமான வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் வேல்முருகனின் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

          கடலூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் நேற்று இரவு அவர்கள் திரண்டனர். கட்சி அலுவலகம் முன்பு இருந்த பா.ம.க. கொடிகம்பத்தை உடைத்து எறிந்தனர். டாக்டர் ராமதாசின் கட்அவுட்டை உடைத்து ரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பா.ம.க. அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

            பண்ருட்டியிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கன் குப்பம் மெயின் ரோட்டில் இருந்த பா.ம.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்தனர். இதேபோல் காடாம்புலியூர் முத்தாண்டிக்குப்பம், கீழக்குப்பம், கீழ்மாம்பட்டு, மருங்கூர், காட்டாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கட்சி கொடிகம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.

            நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள வேப்பங்குறிச்சி பஸ்நிலையம், ஜெயப்பிரியா பஸ்நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பா.ம.க. கொடிகளையும் அகற்றினார்கள்.  

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. தலைவர் இரா.கோதண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

            முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் நீக்கப்பட்டதை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. கூண்டோடு கலைக்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு ராஜினாமா செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிற்சங்கத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். வேல்முருகன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சங்கத்தின் பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் சங்கத்தை கூண்டோடு கலைத்து விடுவதாக பாட்டாளி தொழிற்சங்க பேரவைக்கு தகவல் அனுப்பி உள்ளார்.  

வேல்முருகனை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

              வேல்முருகன் சமீப காலமாக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தார். கட்சிக்கு எதிரான கருத்துக்களை பரப்பினார். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் பேசிய பேச்சுக்கள் கட்சிக்கு விரோதமாக இருந்தது. இதனுடைய டேப் எங்களிடம் இருக்கிறது. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம். உயர் மட்ட குழு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அவர் சரியாக முறையான பதில் சொல்லவில்லை. எனவே கட்சியில் உள்ள 24 உறுப்பினர் கொண்ட உயர்மட்டக்குழு அவரை நீக்குவது என்று முடிவெடுத்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.  

கட்சியில் இருந்து நீக்கியது பற்றி வேல்முருகனிடம் கேட்டபோது அவர் கூறியது:-

          நான் 15 வயதிலேயே வன்னியர் சங்கத்தில் சேர்ந்தேன். இயக்க நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டேன். எனது கடின உழைப்பால் நான் படிப்படியாக முன்னேறினேன். நான் கட்சி விரோத செயலில் ஈடுபடவில்லை. என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமலேயே நீக்கி விட்டனர். தற்போது இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.  தனது அடுத்தகட்ட முடிவுபற்றி இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டியளிக்க போவதாக அவர் கூறியுள்ளார். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior