உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஐ.ஐ.டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.ஐ.டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 20, 2012

நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி.க்கு தகுதி

நெய்வேலி :

ஐ.ஐ.டி.,க்கு தேர்வு பெற்ற நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்களை என்.எல்.சி., சேர்மன் பாராட்டி பரிசு வழங்கினார். நெய்வேலி தெலுங்கு சமிதியின் ஆதரவுடன் கடந்த 2005ம் ஆண்டு முதல்  என்.எல்.சி., கட்டுப்பாட்டில் செயல்படும் ஜவகர் சி.பி. எஸ்.இ., மேல்நிலைப்  பள்ளியில் ஐ.ஐ.டி., நிறுவனங்களில் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்  தேர்வுக்கு ஒருங்கிணைந்த முறையில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் டில்லி, விஜயவாடா, கோட்டா, ஐதராபாத் ஆகிய நகரங்களில்  ஐ.ஐ.டி.,நுழைவுத் தேர்வு பயிற்சிக்கான நிபுணர்கள் பயிற்சி வழங்குகின்றனர்.  ஆண்டுதோறும் இப்பள்ளியிலிருந்து 15 முதல் 20 மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் பயில இடம் பெறுகின்றனர். இந்த ஆண்டு 63 பேரில் 25 பேர்கள் ஐ.ஐ.டி.,க்கு தகுதி பெற்றனர். எஞ்சிய மாணவ, மாணவிகள் பிட்ஸ் பிலானி மற்றும் என். ஐ.டி., போன்ற நாட்டின் உயர்ந்த பிற கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்த சாதனை மாணவ, மாணவிகளுக்கு நெய்வேலி தெலுங்கு சமிதியில் பாராட்டு விழாநடந்தது. என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை தாங்கினார். சேர்மன் சுரேந்தர் மோகன் துணைவியார் சொர்ணகுமாரி, யோகமாயா  ஆச்சார்யா முன்னிலை வகித்தனர். முதன்மை பொது மேலாளர் மற்றும் தெலுங்கு  சமிதி தலைவர் வீரபிரசாத் வரவேற்றார்.


என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் பரிசு வழங்கிப் பேசுகையில்,

தமிழகத்தில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் அதிகபட்சமாணவர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளது பராட்டுக்குரியதாகும் என்றார். ஏற்பாடுகளை தெலுங்கு சமிதி தலைமை நிர்வாகிகள் சுப்பாராவ், ரகுமான் உட்பட பலர் செய்திருந்தனர்.



Read more »

திங்கள், ஏப்ரல் 11, 2011

ஐஐடி நுழைவுத் தேர்வு: நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் பங்கேற்ப்பு

            ஐஐடி-க்களில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  

              புவனேசுவரம், சென்னை, தில்லி, காந்தி நகர், குவாஹாட்டி, ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், கரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ரோப்பர், ரூர்க்கி உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஐஐடி-ஜீ நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.  நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடாகம் உள்ளிட்டப் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரத்து 650 பேர் தேர்வு எழுதினர்.  

            நாடு முழுவதும் 130 நகரங்கள், துபையில் ஒரு மையம் என மொத்தம் 1,051 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.  நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி வெளியிடப்படும். எந்த ஐஐடி நிறுவனத்தில் படிக்க விருப்பம் உள்ளது என்பதை மே 30-ம் தேதியிலிருந்து ஜூன் 13-ம் தேதிக்குள் மாணவர்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Read more »

வியாழன், மே 27, 2010

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டல மாணவர் முதலிடம்


                 நாடு முழுவதும் உள்ள மத்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.) சேருவதற்கு நடைபெற்ற ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு 2010-ன் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது.  நுழைவுத் தேர்வில் சென்னை ஐ.ஐ.,டி. மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் அனுமுலா ஜிதேந்தர் ரெட்டி முதலிடம் பெற்றுள்ளார். புவனேசுரம், சென்னை, தில்லி, காந்திநகர், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கான்பூர், காரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ராஜஸ்தான், ரோபர், ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள 15 ஐ.ஐ.டி.கள் உள்பட 17 கல்வி நிறுவனங்களில் 2010-11-ம் கல்வி ஆண்டில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஏப்ரல் 4-ம் தேதி கூட்டு நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

                  நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தேர்வில் சென்னை ஐ.ஐ.டி. மண்டலத்தில் இருந்து 65,557  மாணவர்கள் உள்பட மொத்தம் 4,55,571 பேர் தேர்வு எழுதினார்கள்.  ஐ.ஐ.டி.களில் உள்ள 9,509 இடங்களுக்கு சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 2,619 மாணவர்கள் உள்பட 13,104 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 1,13,127 மாணவிகளில் 1,476 பேர் தகுதி பெற்றுள்ளனர்.  1,27,760 ஓ.பி.சி. மாணவர்களில் 2,357 பேரும்,  42,800 எஸ்.சி., பிரிவு மாணவர்களில் 1,773 பேரும், 15,975 எஸ்.டி. மாணவர்களில் 517 பேரும் கல்வி நிறுவனங்ளில் சேர தகுதி பெற்றுள்ளனர். ஐ.ஐ.டி.களில் ஆன்லைன் மூலம் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யும் பணி மே 30-ம் தேதி முதல் தொடங்கும். பொதுப் பிரிவு மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஐ.ஐ.டி.-யின் கலந்தாய்வில் பங்கேற்க நேரில் செல்ல வேண்டியதில்லை.  ஆனால், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க நேரில் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்கள் மாணவர்களுக்கு அனுப்பப்படும் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் தேர்வு முடிவுகளை அனைத்து ஐ.ஐ.டி.களின் இணையதளங்களிலும் பார்வையிடலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior