உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி பிரிவு

கடலூர்:

      பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

      தமிழகத்தின் பல பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவிவருகிறது. இந்நிலையில் பல மாவட்டங்களில் பன்றி காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது: 

       தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி உடன் மூச்சு திணறல் இருந்தால் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். மேற்கண்ட வகையில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் வந்து பரிசோதனை செய்துகொள்ளலாம் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.



Read more »

செவ்வாய், மார்ச் 13, 2012

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கணினி மயமாகிறது

கடலூர் :

       கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் நிர்வாக சிக்கலைத் தவிர்க்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக புறநோயாளிகள் விவரம் நேற்று முதல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துங்கியது.

      கடலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 4,000 பேர் புறநோயாளிகளாகவும், 2,000 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மருத்துவமனை தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகிறது. மேலும், நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு அளித்த சிகிச்சை குறிப்புகள் அடங்கிய பதிவேடுகளை பராமரிப்பதிலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளுக்கான டோக்கன்களை பதிவு செய்வதில் நிர்வாக ரீதியாக சிக்கல் நிலவி வந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தை முழுமையாக கம்ப்யூட்டர் மையமாக்க அரசு உத்தரவிட்டு அதற்கான பூர்வாங்கப் பணி நடந்து வருகிறது.

           இதற்காக தகவல் தொழில் நுட்ப பட்டதாரி பிரகாஷ் என்பவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்குவது, அதில் நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வது குறித்து சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் கடந்த வாரம் பயிற்சி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது புறநோயாளிகளுக்கு சீட் வழங்குவதை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. புறநோயாளியின் முகவரி மற்றும் அவரது நோய் பற்றிய விவரங்களை பதிவு செய்ததும், நோயாளிக்கு 10 இலக்க எண் கொண்ட பிரத்யேக டோக்கன் கொடுக்கப்படும். அந்த டோக்கனைக் கொண்டு சம்மந்தப்பட்ட டாக்டரிடம் அணுக வேண்டும். அவர் நோயாளியை பரிசோதித்து அவருக்கு அளிக்கும் சிகிச்சை மற்றும் அவருக்கு அளிக்க வேண்டிய மருந்து, மாத்திரை மற்றும் ஊசி விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விடுவார்.

         அதன்பிறகு நோயாளி தனது டோக்கனை கொண்டு சென்று, மருந்தக பிரிவிற்கு கொண்டு சென்றதும், கம்ப்யூட்டரில் பார்த்து அவருக்குரிய மருந்து மாத்திரைகளை வழங்குவார். நோயாளி இந்த டோக்கனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுமுறை மருத்துவமனைக்கு வரும் போது நேரடியாக டாக்டரிடம் சென்று டோக்கனை காண்பித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேப்போன்று அனைத்து அரசு மருத்துவமனைகளும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு வருவதால், இதே டோக்கனைக் கொண்டு தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனைக்கும் சென்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும், நோயாளி இதுவரை மேற்கொண்ட சிகிச்சை விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், தொடர் சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக இருக்கும்.

         தற்போது புறநோயாளிகள் பிரிவு மட்டும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனைக் கூடங்கள், மருந்தக சேமிப்பு கிடங்குகளும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட உள்ளது.














Read more »

புதன், பிப்ரவரி 08, 2012

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பில்குழந்தைகள் மருத்துவமனை

கடலூர் :

        கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
 

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், தினமும் வெளி நோயாளிகளாக 4,000 பேரும், உள்நோயாளிகளாக 600 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கென மருத்துவமனை புதியதாக அமைக்க நேஷனல் ரூரல் ஹெல்த் மானிட்டரிங் (என்.ஆர்.எச்.எம்.,) திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பிரேம்சந்தர், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கட்டடப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.













Read more »

திங்கள், அக்டோபர் 24, 2011

கடலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/db2cb794-bbe8-42ce-b30d-0247629ef49c_S_secvpf.gif
 
கடலூர்:

         கடலூர் அருகே உள்ள வானமாதேவி விலங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பாகூரில் உள்ள 4 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தனுசுக்கும் கடலூர் அருகே உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்த தேவிகா (21) என்ப வருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

            இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தேவிகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவவார்டில் உறவினர்கள் சேர்த்தனர். அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவிகாவுக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படாததால் அவருக்கு வார்டிலேயே தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

        தேவிகாவுக்கு மீண்டும் பிரசவவலி ஏற்பட்டத்தை அடுத்து அவரை உடனடியாக பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை சுகமாக பிறந்தது. இதை அடுத்து தேவிகாவையும், பெண் குழந்தையையும் வார்டுக்கு அழைத்து செல்லலாம் என்று இருந்தபோது, மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது.

               இதனால் தேவிகாவுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்து ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன.   ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை பிறந்ததை பார்த்து டாக்டர்களும், நர்சு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் சராசரி எடை(3கிலோ)- யை விட குறைவாக இருந்தன.

              ஒரு பெண் குழந்தை 2 கிலோ 400 கிராம் எடையும், இன்னொரு பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையும், ஆண் குழந்தை 1 கிலோ 600 கிராம் எடையும் இருந்தன. இதில் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள பெண் குழந்தை சிசு தீவிர சிகிச்சை கண்காணிப்பு பகுதியில் ‘இன்குபெட்டர்‘ கருவியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  3 குழந்தைகளும், தாயும், நல முடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்   இது குறித்து தனுஷ் கூறும்போது இது எனது மனைவிக்கு தலைப்பிரசவம். அவளுடைய வயிறு பெரிதாக இருந்ததால் 2 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து இருக்கிறது என தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், அக்டோபர் 20, 2011

கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியம் : நோயாளி இறந்ததால் மருத்துவமனை சூறை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/1ee4a85d-bc68-4108-9bd5-fd1167de57dc_S_secvpf.gif
 
கடலூர்:

          கடலூர் முதுநகர் அருகே உள்ள சுத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு (வயது 40) இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவரது உறவினர்கள் பரமகுருவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

             அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பரமகுருவுக்கு அங்கு பணியில் இருந்த டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். பின்னர் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் பரமகுரு அனுமதிக்கப்பட்டார். டாக்டர் தம்பையா சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் பரமகுரு இறந்து போனார். பரமகுருவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்காததால்தான் இறந்ததாக கருதி ஆத்திரம் அடைந்த பரமகுருவின் உறவினர்கள் நோயாளிகள் பரிசோதனை அறை மற்றும் மருந்து-மாத்திரை வழங்கப்படும் அறை ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

              மேலும் டாக்டர் அறையில் இருந்த மேஜை-நாற்காலிகளை தூக்கி வீசி சூறையாடினார்கள். மேலும் டாக்டர் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பையும் பிடுங்கி வீசினர்.   இதனால் டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.  இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. வன்முறை கும்பல் ஆஸ்பத்திரி கண்ணாடிகளை கைகளால் உடைத்ததால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு ஆங்காங்கே ரத்தம் வழிந்தோடியது.  

              இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  மேலும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.    மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
 

Read more »

திங்கள், மே 02, 2011

கடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நல்லபாம்பு

கடலூர்:
            கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காணப்பட்டது. இன்று காலையில் அந்த செடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர். 
               
                   அந்த வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது புதருக்குள் புஸ்... என்ற சத்தத்துடன் ஒரு நல்லபாம்பு படமெடுத்தது. 31/2 அடி நீளமுள்ள அந்த பாம்பை கண்டு கை, கால்கள் வெடவெடத்துப்போன ஊழியர்கள் துப்புரவு பணியை நிறுத்தி விட்டு மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் ராமச்சந்திரனிடம் தெரிவித்தனர். பாம்புகளை உயிருடன் பிடிப்பதில் கில்லாடியான கடலூரை சேர்ந்த வாலிபர் பூனம்சந்துக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

           அவர் பாம்பு பிடிப்பதற்காக கம்பினால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவியுடன் விரைந்து வந்தார். புதருக்குள் இருந்து கொண்டு “வாலாட்டிய” அந்த நல்ல பாம்பை பூனம்சந்த் லாகவமாக பிடித்தார். அவரது கையில் உள்ள கம்பில் இருந்தவாறு படமெடுத்த பாம்பை கண்டவுடன் திரண்டிருந்த நர்சுகள், பெண்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பிறகு அந்த நல்லபாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior