உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 28, 2010

பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுசத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர்: 

               பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய 7வது மாநாடு கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பாவாடை வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் ஞானக்கண் செல்லப்பா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய துணைத் தலைவர்கள் சம்சுதீன், கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகனசுந்தரம் 2 ஆண்டு வேலை அறிக்கையினையும், பொருளாளர் கதிர்வேல் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்து பேசினார்.

               மாநாட்டில் ராமசாமி தலைவராகவும், மோகனசுந்தரம் செயலாளராகவும், பாவாடை பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பிறப்பித்த அரசாணையில் ஆண், பெண், பாகுபாட்டுடன் உள்ள முரண்பாடுகளை நீக்கி கல்வி தகுதி, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்துவது. 10, 20 ஆண்டுகள் பணிமுடித்த அமைப்பாளர்களுக்கு பணி மூப்பு ஊதியம் வழங்குவது போல சமையலர் உதவியளர்களுக்கும், பணி மூப்பு ஊதியம் வழங்கிட அரசை கேட்டுக் கொள்வது. பணிக்காலத்தில் இறந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க அரசு பிறப்பித்த அரசாணை ஏட்டளவிலேயே உள்ளது. இதை அமல்படுத்தி வாரிசு பணிக் காக காத்திருப்போருக்கு மேலும் தாமதப்படுத்தாமல் பணி வழங்கிட அரசு மற்றும் கலெக்டரை கேட்டுக் கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

செவ்வாய், ஜூன் 22, 2010

வனத்துறையிடம் மதிப்பீடு கோரப்படும் பழமை வாய்ந்த கட்டடம்

கடலூர்:

                  முதல் முறை டெண்டர் விடப்பட்டு அது ரத்தான பிறகு,​​ தொன்மை வாய்ந்த கட்டடத்துக்கு வனத்துறையிடம் இருந்து மதிப்பீடு கோரப்பட்டு உள்ளது. 

                கடலூர் நெல்லிக்குப்பம்,  சாலையில் பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றியக் கட்டடம்.​ ஆங்கிலேயர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாக விளங்கும் இக் கட்டடம்,​​ ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்,​​ கிழக்கு இந்தியக் கம்பெனியின் நிர்வாக அலுவலகமாக விளங்கியது. சுதந்திரத்துக்குப் பின் இக்கட்டடத்தில் பலவேறு அலுவலகங்கள் இயங்கி இருக்கின்றன.​ கடந்த 30 ஆண்டுகளாக கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகமாக இருந்து வந்தது.​ முறையான பராமரிப்பு இல்லாததால்,​​ இக்கட்டடத்தின் ஒருபகுதி 12-16-2009 அன்று இடிந்து விழுந்தது. 

                அதன் கட்டடக்கலை அம்சத்துக்காக,​​ தொன்மை வாய்ந்த இக்கட்டடத்தை பழுது பார்த்து,​​ பயன்படுத்தலாம் என்பது பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.​ எனினும் இக்ககட்டடத்தை இடித்துவிட வேண்டும் என்பதில் ஊராட்சி ஒன்றியம் உறுதியாக உள்ளது.​ கட்டடத்தில் விலை உயர்ந்த பர்மா தேக்கு மரஉத்திரங்கள்,​​ தூண்கள்,​​ சட்டங்கள்,​​ ஜன்னல்கள்,​​ இரும்புப் பொருள்கள்,​​ செங்கற்கள் உள்ளன.மேலும் இக்கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதில் ரூ.​ 1.5 கோடியில் புதிய கட்டடம் கட்டவும் ஊராட்சி ஒன்றியம் திட்டமிட்டு உள்ளது.​ எனவே இக்கட்டடத்தை இடித்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ள,​​ கடந்த 7-ம் தேதி டெண்டர் விடப்பட்டது.குறைந்தபட்சத் தொகையாக ரூ.14,21,183 அறிவிக்கப்பட்டு இருந்தது.​ 

                விழுப்புரத்தைச் சேர்ந்த மாப்பிளை மைதீன்,​​ ரூ.​ 14.5 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாகவும் அவர் உரிய நேரத்தில் பணம் செலுத்தத் தவறியதால்,​​ டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப் பட்டது.இந்நிலையில் இக்கட்டடத்தில் உள்ள தேக்கு மர உத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களின் தற்போதைய மதிப்பு என்ன என்று கண்டறிய வனத்துறைக்கு கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்து உள்ளார். மறு மதிப்பீடு வந்த பிறகு மீண்டும் டெண்டர் விடப்படும் என்று தெரிகிறது.​ இதற்கிடையே இக்கட்டடத்தை இடிக்காமல் அதன் தொன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று,​​ சமூக அக்கறை கொண்ட நடுநிலையாளர்கள் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன்,​​ தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன் ஆகியோர் கூறியது:

                 கடலூர் மாவட்டத்தில் பல பழமை வாய்ந்த கட்டடங்கள்,​​ அவற்றின் தொன்மைக் கட்டடக் கலையைக் கருத்தில் கொண்டு,​​ பெரும் பொருள் செலவில் பழுதுபார்த்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.அதைப் போல இக்கட்டடத்தையும் பழுதுபார்த்து,​​ வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் அருங்காட்சியகத்தை இங்கு அமைக்கலாம்.ஊராட்சி ஒன்றிய அலவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட,​​ இதே வளாகத்தில் போதிய இடம் உள்ளது.​ மேலும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த எந்த ஒரு கட்டடத்தையும் இடிப்பதற்குத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அனுமதி பெறப்பட வேண்டும். அவ்வாறு இக்கட்ட ​டத்தை இடிக்க,​​ அனுமதி பெறப்பட்டதா என்று தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Read more »

வெள்ளி, ஜூன் 11, 2010

ஒன்றிய அலுவலக மரத்தூண்கள் ஏலம்பணம் செலுத்தாததால் மீண்டும் ரத்து

கடலூர் : 

                      கடலூரில் இடிந்து விழுந்த ஒன்றிய அலுவலகத்தில் பழைய மரத்தூண்கள் விடப்பட்ட ஏலம் நேற்று முன்தினம் மாலை ரத்து செய்யப்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் கனமழையில் இடிந்து விழுந்தது. 105 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் இருந்த பிரமாண்டமான பர்மா தேக்கு தூண்கள் மற்றும் இரும்புகள் கடந்த 7ம் தேதி ஏலம் விடப்பட்டது. டெண்டர் எடுப்பதற்காக ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டதால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் நடந்தது.

                        அதில் அலுவலக கட்டடத்தில் உள்ள மரங்கள் மற்றும் இரும்புகளுக்கு அரசு 14 லட்சத்து 21 ஆயிரத்து 180 ரூபாய் நிர்ணயம் செய்தது. இந்த டெண்டரை விழுப்புரத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை மொய்தீன் என்பவர் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கு எடுத்தார். இதற்கான தொகையை 24 மணி நேரத்தில் அலுவலகத்தில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. விதிமுறைப்படி நேற்று மாலை 4 மணிவரை டெண்டர் எடுத்த தொகையை செலுத்தவில்லை. இதன் காரணமாக விடப்பட்ட டெண் டர் ரத்து செய்யப்பட்டது.

Read more »

புதன், ஜூன் 09, 2010

400 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் ரூ. 14.50 லட்சத்துக்கு ஏலம்


சிதைந்து கிடக்கும் பழமை வாய்ந்த கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்.
கடலூர்:
 
               400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசுக் கட்டடத்தை உடைத்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ள, ரூ.14.50 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது.
 
                      கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் 400 ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்டது. இப்பொழுதும் இக்கட்டடம் பயன்பாட்டில் உள்ளது. பராமரிக்கப்பட்டு நினைவுச் சின்னமாகவும் காட்சி அளிக்கிறது. இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வசித்ததாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடந்த போர்களில் வெற்றி வாகைசூடி, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நிறுவப்பட காரணமாக இருந்தவர் ராபர்ட் கிளைவ்.  மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு எதிரில் சற்று தொலைவில் அமைந்து இருக்கும் பழமை வாய்ந்த கட்டடத்தில், கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்தது. இதுவும் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிழக்கு இந்திய கம்பெனியினர் இக்கட்டடத்தை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்ததாகக் கடலூர் மாவட்ட வரலாற்று ஆவண  சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.  
 
                      இவ்வளவு பழமை வாய்ந்த கட்டடம் தமிழக பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. கட்டடத்தின் மொட்டை மாடியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. தொட்டி தொடர்ந்து ஒழுகி வந்ததன் காரணமாக அப்பகுதியில் செடி, கொடிகள் முளைத்து, கட்டடம் பழுதானதாகக் கூறப்படுகிறது.  மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இதில் இயங்கி வந்ததால், பொதுப்பணித் துறையினர் இக்கட்டடத்தை முறையாகப் பராமரிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது .இதனால் கடந்த ஆண்டு இக்கட்டடத்தின் படிக்கட்டுகள் இருந்த பகுதி, இடிந்து விழுந்து விட்டது. அதைத் தொடர்ந்து இங்கு இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்துக்கு மாற்றப்பட்டது. பழமை வாய்ந்த இக்கட்டடத்தை இடித்துவிட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. சுட்ட செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்டு அழகுடனும் கம்பீரமாகவும் விளங்கிய இக் கட்டடம் 2 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்டது. இதில், விலை உயர்ந்த தேக்கு மரங்கள் ஏராளமாக உள்ளன. எனவே கட்டடத்தை இடித்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்ள ஏலம் விடப்பட்டது. ரூ.14 லட்சம் அடிப்படை கேள்வித் தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏலம் கேட்க சுமார் 25 பேர் டெண்டர் படிவங்களை வாங்கிச் சென்று இருந்தனர். இறுதியாக ராமலிங்கம், மாப்பிளை மைதீன் என்ற இருவர் மட்டும் டெண்டர் படிவத்தை அளித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் அதிகத் தொகையாக ரூ.14.50 லட்சத்துக்கு ஏலம் கேட்டு இருந்த மாப்பிளை மைதீனுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஊராட்சி ஒன்றிய அலவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உண்மையிலேயே அதன் மதிப்பு ரூ.14.50 லட்சம் தானா?400 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டு இருந்த கட்டடம், விரைவில் இடித்துத் தரை மட்டமாக்கப்பட உள்ளது. ரூ.14.50 லட்சத்துக்கு இடித்துவிட ஏலம் விடப்பட்டபோதிலும், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கட்டடமும் அதில் உள்ள பொருள்களும் உண்மையில் விலை மதிப்பிட முடியாதவை என்பதை, தேசப்பற்று மிக்க சரித்திர ஆர்வலர்கள் அறிந்து இருப்பார்கள், அதை வெறும் கட்டடமாகப் பார்க்கும் மற்றவர்கள் அறிந்து இருக்க நியாயம் இல்லைதான்.

Read more »

செவ்வாய், ஜூன் 08, 2010

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பழைய மரத்தூண்கள் இன்று ஏலம்

கடலூர் : 

                 கடலூர் பி.டி.ஓ., அலுவலக கட்டடத்தில் பிரித்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த மரத் தூண்கள் ஏலம் மீண்டும் இன்று நடக்கிறது. 

                      கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கனமழையின் போது இடிந்து விழுந்தது. அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த மரத்தூண்கள், இரும்பு கம்பிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி நேர்முக உதவியாளர் தர்மசிவம் தலைமையில் டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுப்பதற்காக ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்கள், தி.மு.க., சேர்ந் தவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக டெண்டர் விடுவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பழைய மரங்கள் ஏலம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior