உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் கல்வி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் கல்வி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 23, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் விபரம்

கடலூர்: 
 கடலூர் வருவாய் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர். 

தமிழை முதன்மைப் பாடமாக கொண்டு படித்த கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஃபெனிட்டாஷெர்லி 1180 மதிப்பெண்களும், 

அதே பள்ளி மாணவி எஸ்.ஏ.சாஜிதாபானு 1179 மதிப்பெண்களும்,

 நெய்வேலி செயின்ட் குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ,கே.கவிப்பிரியா 1178 மதிப்பெண்களையும் பெற்று கடலூர் வருவாய் மாவட்ட அளவில் மூதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். 

இதில் கடலூர் புனித மேரி மெட்ரிக் பள்ளி மாணவிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கடலூர் கல்வி மாவட்ட அளவில் 

முதல் மூன்று இடங்களை

 எஸ்.ஃபெனிட்டா ஷெர்லி, 
எஸ்.ஏ.சாஜிதாபானு, 
ஏ.கே.கவிப்பிரியா ஆகியோர் பெற்றுள்ளனர். 

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்

 ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.பிரேம்குமார் 1170 மதிப்பெண்களும்,

 காட்டுமன்னார்கோயில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ஜெசிகா 1154 மதிப்பெண்களும்,

 காட்டுமன்னார்கோயில் கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரிச்வானாபேகம் 1148 மதிப்பெண்களை

 பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.


அரசுப் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் விவரம்

கடலூர் கல்வி மாவட்டத்தில் 

புவனகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.முல்லைகொடி 1142 மதிப்பெண்ணும், 

சிதம்பரம் என்.தமிழ்ச்செல்வி 1139 மதிப்பெண்ணும்,

 வடலூர் ஆர்.உதயராணி 1120 மதிப்பெண்ணும்,

 விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 

ஸ்ரீநெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஏழிலரசி 1139 மதிப்பெண்ணும்,

 திட்டகுடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே.புவனேஸ்வரி 1088 மதிப்பெண்ணும்,

 லால்பேட்டை பள்ளி மாணவன் எம்.இம்தியாஸ்ஹமீது 1069 மதிப்பெண்ணும் பெற்றும் கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.


நிதிஉதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள்: 

கடலூர் கல்வி மாவட்ட அளவில் 

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.மகேஷ் 1176 மதிப்பெண்ணும், 

கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஏ.வைத்தீஸ்வரி 1150 மதிப்பெண்ணும்,

ஆர்.கீத்துஅபிநயா 1149 மதிப்பெண்ணும் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.


விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில்

 காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.எம்.விக்னேஸ்வரன் 1140 மதிப்பெண்ணும்,

 எறுமனூர் வி.ஈ.டி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.மனோகரன் 1135, 

பி.அபிநயா 1132 மதிப்பெண்களை பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.



Read more »

பிளஸ் 2 தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


கடலூர்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது.

கடலூர் கல்வி மாவட்டத்தில் 

சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி,
 கடலூர் சி.கே.ப்ராட்டிகல் நாலெட்ஜ், 
புனித அந்தோனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் டொமினிக் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் பள்ளி,
 தட்டாஞ்சாவடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி, 
மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 பூதங்குடி எஸ்.டி. சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும், 

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 

மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, 
பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
லால்பேட்டை இமாம் கஜலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.



 40 சதவீதத்துக்கும் குறைவாகத் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள்



 கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
கானூர் அரசு மேல்நிலைப் பள்ளி, 
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.






Read more »

வியாழன், ஜூலை 28, 2011

கடலூர் கல்வி மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக இளம் வயதில் உடல் உறுப்புக் கோளாறுகளை சரிசெய்யும் முன்னோடி திட்டம்

கடலூர்:

                  இளம் வயதில் மாணவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை, ஃபிசியோதெரபி மூலம் சரிசெய்யும் வகையில் முன்னோடி திட்டம், இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.  

                ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் புதன்கிழமை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இத் திட்டத்தில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.  சிறுவயது மாணவர்களுக்கு விளையாடும்போதும், ஏனையச் செயல்பாடுகளின் போதும், தசைப் பிடிப்பு, தசை சுருக்கம், மூட்டு பாதிப்பு, ஏதேனும் காயங்கள் ஏற்பட்ட பின், தசைப் பிடிப்பால் ஏற்படும் பாதிப்புகள், முதுகு கூன் விழுதல், கைகால்கள் வலுவிழத்தல், உடல் பருமன், தட்டைக்கால் போன்ற பல உடற்கோளாறுகள் ஏற்படுகின்றன.  இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் நிரந்த உடற் கோளாறுகளாக மாறிவிடுன்றன. 

               இளம் வயதிலேயே இவற்றைக் கண்டுபிடித்து ஃபிசியோதெரப்பி மற்றும் முறையான பயிற்சி செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.  இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளான மாணவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலத்தில் கல்வி மாவட்டத்தல் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், உடல் உறுப்புகளில் கோளாறு உள்ள மாணவர்களைக் கண்டறியும் முகாம் புதன்கிழமை நடந்தது. கடலூரில் நடந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தொடங்கி வைத்தார். 

              மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, மாவட்டக் கல்விó அலுவலர் பாரதமணி, பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் 15 ஃபிசியோதெரபி மருத்துவர்கள், மாணவர்களிடையே உடல் உறுப்புக் கோளாறுகள் தொடர்பான பல்வேறு மருத்துவச் சோதனைகளை மேற்கொண்டனர்.   455 மாணவர்களைப் பரிசோதித்ததில், 300 மாணவர்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. விருத்தாசலத்தில் நடந்த முகாமில் 561 மாணவர்கள் பரிசோதிக்கப் பட்டதில் 126 மானவர்களுக்குக் குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  


                இதுகுறித்த அறிக்கை கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அறிக்கையைப் பரிசீலித்து, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, உடல் உறுப்புக் கோளாறுகள் தொடர்பாக, முறையான பிசியோதெரபி சிகிச்சை அளிப்பது குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.







Read more »

சனி, மே 28, 2011

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 55 பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி

கடலூர்:
   
         கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் தேர்வுகளில் 55 பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெறச் செய்து, சதம் அடித்து உள்ளன.  

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளிகள்: 

              என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி மந்தாரக்குப்பம், கடலூர் சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, வடலூர் புனித ஜான் மேல்நிலைப் பள்ளி, சாத்தங்குப்பம் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி, கன்னித் தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி, பி.மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, கே.மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆபத்தாரணபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, வடலூர் புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி.  

விருத்தாசலம் கல்வி மாவட்டம்:  

              கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி, புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, மோவூர் அரசு உயர்நிலைப் பள்ளி, எறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, நாட்டார் மங்கலம் உயர்நிலைப் பள்ளி, தொழுதூர் உயர்நிலைப் பள்ளி, எறுமனூர் வி.இ.டி. உயர்நிலைப் பள்ளி, கீழக்கல்பூண்டி அன்னை தெரசா உயர்நிலைப் பள்ளி,  மெட்ரிக் பள்ளிகள் 

 கடலூர் கல்வி மாவட்டம்: 

               சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி, நெய்வேலி ஜான் ஜோசப் குளூனி மேல்நிலைப் பள்ளி, கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி பாலவிகார் மேல்நிலைப் பள்ளி, கடலூர் சி.கே. மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி ராதிகா மெட்ரிக் பள்ளி, கடலூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி,  குறிஞ்சிப்பாடி செயின்ட் பால்ஸ், நெல்லிக்குப்பம் புனித டொமினிக் பள்ளி, குள்ளஞ்சாவடி கண்ணன் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி செயின்ட் ஜான்ஸ், சுப்பிரமணியபுரம் சீவா மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் சரசு மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் ஸ்ரீ வித்யா கலா கேந்திரா, சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி, நெய்வேலி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சூரக்குப்பம் மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி, தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மெட்ரிக் பள்ளி, கடலூர் புனித அந்தோனி மெட்ரிக் பள்ளி, நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி அருணாச்சலா மெட்ரிக் பள்ளி, திருப்பாப்புலியூர் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி, ஆணையம்பேசட்டை அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி.  

விருத்தாசலம் கல்வி மாவட்டம்: 

               திட்டக்குடி இந்தியன் மெட்ரிக் பள்ளி, நாட்டார் மங்கலம் அருள் மெட்ரிக் பள்ளி, லால்பேட்டை இமாம் கஜாலி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் தேவஅமுதம் மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளி, வேப்பூர் அய்யனார் மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோயில் ஜி.கே.எம். மெட்ரிக் பள்ளி, பூதங்குடி செயின்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி, பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் ஆக்சீலியம் மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் செந்தில் மெட்ரிக் பள்ளி.

அனைவரும் தோல்வி: 

           ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தோல்வியுற்றனர்.  கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் தேர்வில் 31 பள்ளிகள் மட்டுமே சதம் அடித்தன. இந்த ஆண்டு 55 பள்ளிகள் சதம் அடித்து உள்ளன. 


Read more »

செவ்வாய், மே 10, 2011

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவிகளே சாதனை

 கடலூர் : 

                மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 26,204 மாணவ, மாணவிகளில் 40 பேர் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர். 

             பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்டத்தில் 165 பள்ளிகளில் இருந்து 26,204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 21,394 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
                
                 கடலூர் கல்வி மாவட்டத்தில் 8,452 மாணவர்கள், 10,362 மாணவிகள் என மொத்தம் 18,814பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 6,640 மாணவர்கள், 8,882 மாணவிகள் என மொத்தம் 15,522 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 78.56 சதவீதமும், மாணவிகள் 85.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

               விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை விட மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. 3,877 மாணவர்கள், 3,513 மாணவிகள் என மொத்தம் 7,390 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 3,140 மாணவர்கள், 2,732 மாணவிகள் என மொத்தம் 5,872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 77.76 சதவீதமும், மாணவர்கள் 80.99 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக மதிப்பெண்: 

                        நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர் ரேவந்த், நெய்வேலி குளூனி பள்ளி மாணவி கங்கா ஆகியோர் 1,182, நெய்வேலி குளூனி பள்ளி மாணவி சுவாதி 1,181, அதே பள்ளியை சேர்ந்த மாணவிகள் கிருத்திகா, நந்தினி ஆகியோர் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களிலும், தனியார் பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

கல்வி மாவட்டம்: 

                 கடலூர் கல்வி மாவட்டத்தில் நெய்வேலி குளூனி பள்ளி மாணவி நந்தினி 1180, சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் முனீஸ்வரன் 1,177, நெய்வேலி குளூனி பள்ளி மாணவி செரின் சல்மா, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் 1174 மதிப்பெண் பெற்று மாவட்டம் மற்றும் கல்வி மாவட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 

                விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அசோக்குமார் 1,159, அந்தோபாஸ்டின் 1,156, எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவர் அமுதன் 1,153 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 

அரசு பள்ளியில் முதலிடம்: 

              அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிதம்பரம், அபிராமி 1,137, கடலூர் துறைமுகம் பிரியா 1,134, புதுப்பேட்டை கோமதி 1,125 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், கடலூர் கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். நல்லூர் மாணவர் விஜயகுமார் 1,101, காட்டுமன்னார்கோவில் காவேரி 1,087, நல்லூர் கொளஞ்சிநாதன் 1,083 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலிடம்: 

              கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ராஜபிரியா 1,157, நஸ்ரீன் பானு, 1,154, கலைவாணி 1,153 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், கடலூர் கல்வி மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அமுதன் 1,153, சவுந்தர்யா 1,151, காட்டுமன்னார்கோவில் பி.ஆர்.ஜி., பள்ளி முத்து 1,139 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 

40 பேர் வாஷ் அவுட்: 

         மாவட்டத்தில் 12,329 மாணவர்கள், 13, 875 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 9780 மாணவர்கள், 11,614 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2549 மாணவர்கள், 2261 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். அதில் 2135 பேர் ஒரு பாடத்திலும், 1504 பேர் இரண்டு பாடத்திலும், 750 பேர் மூன்று பாடத்திலும், 289 பேர் நான்கு பாடத்திலும், 93 பேர் ஐந்து பாடத்திலும், 6 பாடத்தில் 40 பேர் தோல்வி அடைந்துள்ளனர். 

தோல்வியில் மாணவர்கள் அதிகம்: 

              தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை மாணவிகளைவிட 1546 குறைவாக இருந்தது. ஆனால், தோல்வி அடைந்தவர்களில் பெண்களை விட மாணவர்கள் 288 பேர் அதிகமாக உள்ளனர். 

செஞ்சுரியில் சாதனை: 

                ஒரு பாடத்தில் 99 பேரும், இரண்டு பாடங்களில் 39 பேரும், மூன்று பாடத்தில் ஒரு மாணவர் நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

Read more »

கடலூர் கல்வி மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி

கடலூர் : 

               கடலூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

                கடந்த ஆண்டு மோசமான தேர்ச்சி சதவீதத்தில் இருந்த ஆதி திராவிடர் நலப்பள்ளிகளான சேப்பாக்கம், தர்மநல்லூர் பள்ளிகள் இந்த ஆண்டு நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பூஜ்ஜியம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளும், 35 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எதுவும் இல்லை. ஆனால் கடலூர் கல்வி மாவட்டத்தில் அதற்கு எதிர்மாறாக அமைந்துள்ளது. சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 35 சதவீதத்திற்கும் கீழ் உள்ளன. மேலும் பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பூஜ்ஜியம் சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior