உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

திட்டக்குடியில் மாவட்ட நிர்வாகிகள் தலையீட்டால் ஆர்ப்பாட்டம் ரத்து


திட்டக்குடி:

            திட்டக்குடியில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வருகையின் போது வாசன் கோஷ்டியினரை கண்டித்து சிதம்பரம் கோஷ்டியினர் நடத்த இருந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலையீட்டால் ரத்தானது.
 
             திட்டக்குடி பகுதியில் இளைஞர் காங்கிரசில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன் கோஷ்டியினர் என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குறிஞ் சிப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞர் காங்., மாநிலத் தலைவர் யுவராஜ் ராமநத்தம், திட்டக் குடி, விருத்தாசலம் வழியாக செல்வதாக இருந்தது. அப்போது திட்டக்குடி எல்லையான இளமங்கலத்தில் கொடியேற்றம் மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு வாசன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

             இதனையறிந்த சிதம்பரம் ஆதரவாளர்கள் மாநிலத் தலைவர் வருகையை தங்களுக்கு தெரிவிக்கவில்லை. தன்னிச்சையாக வாசன் ஆதரவாளர்கள் செயல்படுவதை கண்டித்து மாநிலத் தலைவர் வருகையின் போது கருப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். நேற்று காலை இளைஞர் காங்., மாநிலத் தலைவரை வரவேற்க வாசன் கோஷ்டியினரும், கருப்புக் கொடிகாட்ட சிதம்பரம் கோஷ்டியினரும் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திட்டக்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

            இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சிதம்பரம் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மாநிலத் தலைவருக்கு வாசன் கோஷ்டியினர் இள மங்கலத்திலும், சிதம்பரம் கோஷ்டியினர் திட்டக்குடி பஸ் நிலையத்திலும் வரவேற்பு அளித்தனர். மேலும் இளமங்கலத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது

Read more »

புதன், ஜூன் 09, 2010

ராஜபட்ச வருகையை கண்டித்து தடையை மீறி கருப்புக் கொடி:108 பேர் கைது

சிதம்பரம்:

                 இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்தியா வருகையைக் கண்டித்து சிதம்பரத்தில் தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 108 பேரை நகர  போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

                    இலங்கை அதிபர் ராஜபட்சவின் வருகையைக் கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே மதிமுக. தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இதற்கு  போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை போலீஸ் தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மதிமுக மாவட்டச் செயலாளர் சௌ.பத்மநாபன், அரசியல் ஆய்வு மையத் தலைவர் மு.செந்திலதிபன், வெளியீட்டு அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், நகரச் செயலாளர் க.சீனுவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், நகரச் செயலாளர் வி.எம்.சேகர், தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.எஸ்.லோகநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 பேரை நகர  போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior