உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கலெக்டர் வி.அமுதவல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலெக்டர் வி.அமுதவல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 24, 2011

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் நாள்: 260மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/d7b9a7b9-fe23-41ad-971f-3f1d0e514ba1_S_secvpf.gif
 
கடலூர் மாவட்ட  ஆட்சியர் அமுதவல்லி
 
கடலூர்:

                கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.   இதில் கலெக்டர் அமுதவல்லி பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, பட்டா வழங்க கோருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட 260மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

               கூட்டத்தில் கலெக்டர் அமுதவல்லி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்ப்பில் 3 பேருக்கு இலவச சலவைப் பெட்டிகளை வழங்கினார். வருவாய்துறை மூலம் கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நாணமேடு கிராமத்தை சேர்ந்த தையல்நாயகியின் கணவர் சாமிதுரைக்கும், வடுகபாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது கணவர் கலியமூர்த்திக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியாக தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திருவேங்கடம், மாவட்ட பிற்ப்படுத்தப்பட்ட நல அலுவலர் கணபதி, மாவட்ட சமூகநல அலுவலர் புவனேஸ்வரி, செய்தி மகக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், செப்டம்பர் 26, 2011

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/1a379a7d-4ede-4beb-bb45-2c955fa8c363_S_secvpf.gif
கடலூர்:
 
         கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றை எதிர் கொள்ள வேண்டி உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுததல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

              கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குட்டை, வாய்க்கால் ஆகிய நீர் நிலைகளை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகு நீர் தாங்கும் பலகைகளில் உள்ள பழுதுகளை நீக்கியும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தேவையான அளவிற்கு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை இருப்பில் வைக்க வேண்டும்.

              மேலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேஷன் செய்தல் வேண்டும். குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாய் அருகே சாக்கடை நீர் தேங்குவதை தடுத்து, சாக்கடைகளில் மற்றும் சாக்கடை நீர் தேங்கும் இடங்களில் கொசு மற்றும் கிருமிகளை அழிக்க முருந்து தெளிக்க வேண்டும் என்றார்.

             பருவமழையின் காரணமாக பாலங்கள், சிறு பாலங்களில் பழுதுகள் ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் உடனடியாக சீர் செய்வதற்கு ஜல்லி, மணல், சாக்குகள், சவுக்கு கட்டைகளை ஆங்காங்கே இருப்பு வைக்க வேண்டும். சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேவையான மின் அறுப்பான கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளில் மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். 
            நடமாடும் மருத்துவக்குழு அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். மேலும் இயற்கை சீற்றங் களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதயாக புயல், பாதுகாப்பு மையங்கள், சமூக கூடம், கல்லூரிகள், பள்ளிகள், கல்யாண மண்டபம் ஆகியவை அனைத்து வசதிகளுடன் தரமான முறையில் வைத்திருக்க வேண்டும்.

            பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதற்கு தேவையான வாகனங்கள் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் பொதுமக் களுக்கு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அமுத வல்லி, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

               கூட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், துணைப்பதிவாளர், கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலர், இணை இயக்குனர், நலப்பணிகள், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர், கண்காணிப்பு பொறியாளர், மின்சார வாரியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர், இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, இணை இயக்குனர் (விவசாயம்), துணை இயக்குனர் (தோட்டக் கலை), அனைத்து நகராட்சி ஆணையர்கள் அனைத்து வருவாய் கோட்டாட்சி யர்கள், அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Read more »

செவ்வாய், ஜூன் 21, 2011

கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க பொதுமக்கள் உற்சாகம்

கடலூர் : 

         கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றிருக்கும் புதிய கலெக்டரை சந்தித்து தமது குறைகளை எடுத்துக் கூறி பயன் பெறலாம் என்ற நோக்கத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த மக்களால் நேற்று முகாம் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் "களை' கட்டியது. 

       தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் ஏற்கனவே கலெக்டராக இருந்த சீத்தாராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்ட கலெக்டராக அமுதவல்லி பொறுப்பேற்றார். சாதாரண ஏழை மக்கள் கூட கலெக்டரை சந்தித்து தமது மனக்குறையை எடுத்துக்கூற வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து வாரம் தோறும் திங்கட்கிழமை பொது மக்கள் குறைகேட்பு நாள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டரை சந்தித்து கொடுத்து வருகின்றனர்.

       புதிய கலெக்டர் பொறுப்பேற்றது முதல் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் பங்கேற்க சென்று விட்டதால் அதிகாரிகள் மட்டுமே மனுவை பெற்று அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த பொது மக்கள் மனுக்கள் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. நேற்று கலெக்டர் அமுதவல்லி பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் முதல்முறையாக பங்கேற்று மனுக்களை பெற உள்ளார் என அறிந்தவுடன் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக கூடினர். 

        கலெக்டர் இல்லாத நாட்களில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தவர்கள் கூட திருப்தியடையாமல் புதிய கலெக்டரை சந்தித்து தமது குறைகளை எடுத்துக் கூறினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் நேற்று மீண்டும் ஒரு மனுவோடு வருகை தந்தனர். அதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து முகாம் அலுவலகம் "களை' கட்டியது. நேற்று காலை மட்டும் பொது மக்களிடமிருந்து 490 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது கலெக்டர் அமுதவல்லி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். 

பெருமை மிகு கட்டடத்தில் மனுக்கள் பெறப்படுமா: 

          மாவட்ட கலெக்டர் அலுவலகம் ராபர்ட் கிளைவ் காலத்தில் கட்டப்பட்ட வானுயர்ந்த கட்டடமாகும். இக்கட்டடம் இன்றளவும் உறுதியோடு விளங்கி வருகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்த கிளைவ் பணிக்காலத்தின் போது கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் ராபர்ட் கிளைவால் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம், முகாம் அலுவலகம் ஆகியவற்றை பார்த்து வியந்தார். இத்தனை ஆண்டுகளை கடந்தும் இக்கட்டிடம் பழுதில்லாமல் கம்பீரமாக இருக்கிறதே என பெருமைப்பட்டார். வரலாற்று புகழ்வாய்ந்த கட்டடத்தில் பணியாற்றுவதே பல கலெக்டர்கள் பெருமையாக கருதினர். 

        ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறுவதை நிறுத்தி விட்டு அதிகாரிகள் கூட்டம், மனுக்கள் பெறுதல், ஃபைல் பார்ப்பது என அனைத்து பணிகளையும் வீட்டிலேயே இருந்து பார்த்து வருகின்றனர். அதற்காகவே வளர்ச்சிமன்ற கூடம் அமைத்துக்கொண்டனர். தேர்தலின்போது வேட்பு மனுக்கள் பெறுவதற்காகவும், தேர்தல் முடிவை அறிந்து கொள்வதற்காகவும் தான் கலெக்டர்கள் அலுவலகத்திற்கு வரும் நிலை இருந்து வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதென்பது அரிதான விஷயமாகி வருகிறது. 

           புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அமுதவல்லி பொது மக்களின் குறைகேட்பு மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வாங்குவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.





Read more »

சனி, ஜூன் 11, 2011

பிளஸ் 1 பயில அரசு உதவித் தொகை

கடலூர்:

            அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் பயில, உதவித் தொகை பெறுவதற்கு அணுகலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வி.அமுதவல்லி அறிவித்து உள்ளார். 

ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இச்சலுகையைப் பெறலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 2 மாணவர்கள், 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவர்கள் இச்சலுகையைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

                    தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் தமிழகத்தில் தலைசிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயில நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவிபெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு, ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் 2 ஆண்டுகளுக்கு, மொத்தம் ரூ.56 ஆயிரம் நிதிஉதவி அளிக்கப்படும். தகுதி உள்ள மாணவ மாணவியர் கடலூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது



.

Read more »

சனி, ஜூன் 04, 2011

கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வி. அமுதவல்லி பொறுப்பேற்பு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பு ஏற்ற வி. அமுதவல்லி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், சொல்வதைவிட செயல்படுவதே சிறந்தது என்று குறிப்பிட்டார். 
                 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பெ. சீதாராமன் சுனாமி மறுவாழ்வுத் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய மாவட்ட ஆட்சியராக வி.அமுதவல்லி நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார். மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இருந்து அவர் பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார். 

 பின்னர் கடலூர் ஆட்சியர் அமுதவல்லி  கூறியது:  

                      அரசின் திட்டங்களை மக்களிடம் விரைவில் கொண்டு செல்வதே மாவட்ட ஆட்சியரின் பணி. அந்தப் பணியை சிறப்பாக செய்ய இருக்கிறேன். எனது செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பத்திரிகைகளில் எழுதலாம், நேரில் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வு காணப்படும். சொல்வதை விட செயல்படுவதே சிறந்தது.  கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு என்ன காரணம் தடைக்கல் என்ன என்று கண்டறிந்து, திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

              கடலூர் நகர போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.  அதைத் தொடர்ந்து அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டு பேசினார். 


              புதிய ஆட்சியர் அமுதவல்லி மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி. (வேளாண்மை) எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.பி.ஏ. பட்டங்கள் பெற்றவர்.  1990- 91ல் கடலூர் வேளாண்துறையில் மண்ஆய்வு நிலையத்தில் வேளாண் அலுவலராகப் பணிபுரிந்தார். 1997-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு எழுதி துணை ஆட்சியர் ஆனார். 2003-ல் மாவட்ட வருவாய் அதிகாரியானார். 2007-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்றார். கூட்டுறவுத் துறையில் கூடுதல் பதிவாளராக இருந்த அமுதவல்லி, கடலூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு ஏற்றுள்ளார். 









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior