உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கல்வி கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 27, 2011

கடலூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ரூ.1400 கோடி கடன்

திட்டக்குடி:
 
            திட்டக்குடி, ராமநத்தம் இந்தியன் வங்கி கிளைகளில் சிறப்பு கடன் வசூல் முகாம் நடந்தது. முகாமிற்கு திட்டக்குடி வங்கி மேலாளர் அனில்குமார் தலைமை தாங்கினார். 
 
            முதுநிலை மேலாளர் ராமச்சந்திரன், மண்டல அலுவல் அதிகாரி சுந்தர், ராமநத்தம் வங்கி கிளை மேலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி மேலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.   மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் இதில் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டித்தொகையை தள்ளுபடி செய்து பேசினார்

அப்போது மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் கூறியது:-

            கடலூர் மாவட்டத்தில் மட்டும் முன்னோடி வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர், கார், உழவு எந்திரங்கள் வாங்கவும், பாசன வசதிகள் பெறவும், ஆழ்துளை கிணறு அமைக்கவும், சுயதொழில் மற்றும் கல்வி கடனாகவும் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வழங்கி உள்ளோம்.   வரா கடன் வசூல் என திட்டமிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 43 கிளைகளில் 10 சிறப்பு முகாம்கள் நடத்தி கடனை வசூலித்து வருகிறோம். இதில் வாடிக்கையாளர்கள் எளிதாக கடனை திருப்பி செலுத்தும் வகையில் வட்டியில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்து கடனை வசூல் செய்து வருகிறோம்,

                இதனால் விவசாயிகள், சுயதொழில் தொடங்கியவர்கள் தங்கள் கடனை திருப்பி செலுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சேமிக்க உதவும். சிறப்பு கடன் வசூல் முகாம் மூலம் இதுவரை ரூ.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.  வங்கியில் வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிராமங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகவர்கள் மூலம் சம்மந்தப்பட்ட கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் அவரவர்வங்கி கணக்கில் இருந்து ரூ 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கவும், பணம் கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                 இதனால் பணம் எடுக்க சேமிக்க வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் அவர்கள் வீட்டிலேயே பணம் எடுக்கவும் சேமிக்கவும் முடியும். இவ்வாறு மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் பேசினார். 
 
 
 
 
 

Read more »

சனி, ஜூன் 26, 2010

கல்விக் கடனை வசூலிக்க புதிய திட்டம்


        கல்விக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.மாணவரின் பட்டத்துக்கான சான்றிதழில் "பார் கோட்' போன்ற முத்திரை பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
                எனவே, மாணவர் வேலைக்கு சேர்ந்துவிட்டதை வங்கிகள் இனி அறிந்து கொள்ள முடியும். இதனால் கடன் வசூலும் எளிதாகிவிடும் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, கல்விக் கடனுக்கு வட்டியை மத்திய அரசே ஏற்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வங்கிக் கடன் வாங்கிப் படிப்பவர்களில் சிலர், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் போய் விடுவதால் சிக்கல் ஏற்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறிவந்தனர். புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், மாணவர் வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாகவே கடனை வசூல் செய்வதற்கான நடைமுறைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
               கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே செலுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டில் அறிவிப்பு வெளியானது. இருந்தபோதிலும் இது தொடர்பான ஆணை எதுவும் வரவில்லை என்று கூறி, வட்டிச் சலுகையை அளிக்க வங்கி அதிகாரிகள் மறுத்து வந்தனர்.அ டுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கவுள்ள சூழ்நிலையில், இதுகுறித்த சுற்றறிக்கையை இந்திய வங்கிகள் சங்கம், எல்லா வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது.குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அந்த மாணவர் அல்லது மாணவிக்கு வட்டிச் சலுகை கிடைக்கும். பிளஸ் 2 முடித்த பிறகு, மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப, தொழிற் கல்விக்கு இச் சலுகை வழங்கப்படும்.
 
                  நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு மட்டும் இது கிடைக்கும்.பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தினர் எவரும் இச் சலுகையைப் பெறலாம். குடும்ப வருமானம் மட்டுமே அடிப்படையாகக் கருதப்படும், சமூக பின்னணி எதுவும் கருத்தில் கொள்ளப்படாது. மாணவரின் படிப்பு காலம் முடிந்து ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டு வரையிலான (இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை) வட்டியை மத்திய அரசே செலுத்தும். அதற்குப் பிந்தைய காலத்துக்கு மாணவர்தான் வட்டியைச் செலுத்த வேண்டும். 
 
                   தகுதியுடைய மாணவருக்கு ஒரு முறை மட்டுமே, அதாவது இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயத்துக்கான (டிப்ளமோ) கல்விக்கு மட்டுமே வட்டி வழங்கப்படும். இருந்தாலும், ஒருங்கிணைந்த பட்டத்துக்கான (இளநிலையும், முதுநிலையும் சேர்ந்தது) கல்விக்கும் கடனுக்கு வட்டியை அரசே ஏற்கும்.படிப்பை பாதியில் நிறுத்தினாலோ அல்லது கல்வி நிலையத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை அல்லது கல்வி காரணங்களுக்காக நீக்கப்பட்டாலோ வட்டி மானியம் கிடைக்காது. இருந்தாலும் மருத்துவ காரணங்களுக்காக கல்வியைத் தொடர முடியாமல் போனால் அதற்கு வட்டி மானியம் உண்டு. அதற்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
 
 
              என்.எம்.டி.எப்.சி., என்.எஸ்.கே.எப்.டி.சி., என்.பி.சி.எப்.டி.சி., என்.எஸ்.சி.எப்.டி.சி. மற்றும் என்.எச்.எப்.டி.சி. ஆகிய அமைப்புகளும் அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. இந்தக் கடன்களுக்கும் வட்டி மானியத் திட்டம் பொருந்தும்.2009 ஏப்ரல் 1-ம் தேதியில் தொடங்கிய 2009-2010 கல்வி ஆண்டில் இருந்து இத் திட்டம் செயல்படுத்தப்படும். அந்த தேதிக்குப் பிறகு பெறப்பட்ட கல்விக் கடன்களுக்கு வட்டி மானியம் அளிக்கப்படும். அதற்கு முன்பாக பெறப்பட்ட கடன்கள் மானியத் திட்டத்துக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது. இத் திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் என சமூகத்தில் பல்வேறு பிரிவினரில் பலன் அடைந்தவர்கள் குறித்து கண்காணிக்க மனிதவள மேம்பாட்டுத் துறை ஓர் அமைப்பை ஏற்படுத்தும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

சனி, மே 29, 2010

நடப்பு ஆண்டில் ரூ.3,000 கோடி கல்விக்கடன்: இந்தியன் வங்கி இயக்குநர் தகவல்

                 இந்தியன் வங்கிக் கிளைகளில் நடப்பு ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்த வங்கியின் முதன்மை நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின் கூறினார். இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் 1,759 கிளைகள் உள்ளன. தென்மாநிலங்களில் மட்டும் 1,186 கிளைகள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது 757 கிளைகள் உள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 28 கிளைகள் திறக்கப்படும்.  தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் ரூ.58 ஆயிரத்து 669 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.78 ஆயிரத்து 834 கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    கடந்த நிதி ஆண்டில் நாடு முழுவதும் ரூ.2 ஆயிரத்து 300 கோடிக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க தனியாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அதில் புகார் செய்தால் வாடிக்கையாளர்களின் குறைகள் உடனடியாகக் களையப்படும் என்றார்.

Read more »

வெள்ளி, அக்டோபர் 09, 2009

கடலூர் கல்வி கடன் முகாம்

கடலூர்:

              கடலூர் மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக சுகாதாரதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு கல்வி கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

             பின்னர் கல்வி கடனுக்காக தேர்வு செய்யப்பட்ட 291 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் கடன் தொகையை ப.சிதம்பரம் வழங்கினார்.  இதையடுத்து மாணவர்களுக்கான கடன் வழங்கும் முகாமில் அமைக்கப்பட்டு இருந்த இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி. வங்கி உள்ளிட்ட 25 வங்கி ஸ்டால்களில் கல்வி கடனுக்கான விண்ணப் பங்களை மாணவர்கள் கொடுத்தனர். அனைத்து வங்கிகளிலும் கல்வி கடன் கேட்டு மொத்தம் 10 ஆயிரத்து 404 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

              இதில் 3571 மாணவர்களின் கடன் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.41 கோடியே 60 லட்சம் கடனுக்கான முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது கடலூரில் நடந்த விழாவில்தான். மேலும் இங்குதான் கல்வி கடனுக்கு அதிக தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கே.எஸ். அழகிரி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior