உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




காவல் அலுவலர்கள் நல சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவல் அலுவலர்கள் நல சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 15, 2010

ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள்நல சங்கம் கடலூரில் துவங்கியது

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. ஓய்வு பெற்ற போலீசாருக்கு மட்டுமின்றி பணியிலிருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மன்றத்தை அணுகினால் ஆதரவாக குரல் கொடுப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் நேற்று துவங்கியது. மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் காசிநாதன் சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

               சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவராக பாலுசாமி, செயலாளராக வடிவேல், இணை செயலாளராக பாலு, பொருளாளராக மணி, செய்தித் தொடர்பு அதிகாரியாக நூருல்லாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று 60க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

Read more »

சனி, பிப்ரவரி 13, 2010

கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் உதயம்

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் மாநில தலைவர் அந்தோணி தலைமையில் இயங்கி வருகிறது. கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் சங்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலும் சங்கம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 14ம் தேதி கடலூர் டவுன்ஹாலில் ஓய்வு பெற்ற காவலர் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் மாவட்டத் தலைவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் நடக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior