உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 30, 2010

குறிஞ்சிப்பாடியில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

நெய்வேலி:

            குறிஞ்சிப்பாடி வட்டம் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.தேவராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் நுகர்வோர் கூறிய குறைகள்: 

              தொலைபேசி மூலம் பதிவு செய்யும்போது, முகவர் அலுவலக ஊழியர்கள் மரியாதைக் குறைவாக பேசுகின்றனர், ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டோக்கன் முறைக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர், 21 நாள்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்யவேண்டும் என்று கெடுபிடி செய்கின்றனர், அவ்வாறு பதிவுசெய்தாலும் குறைந்தபட்சம் 50 நாள்களுக்குப் பிறகே சிலிண்டர் சப்ளை செய்கின்றனர் என்று கூறினர்.

இவற்றை கேட்டுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் கூறுகையில், 

               ""சிலிண்டர் பதிவுக்கு 21 நாள் காலஅவகாசம் தேவை என்று எந்த உத்தரவும் கிடையாது. டோக்கன் முறை உங்களது வசதிக்காவே கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் சரியாக நடந்துகொண்டால் தவறு நடக்க வாய்ப்பில்லை. மேலும் முகவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனினும் முகவர்கள் நுகர்வோரிடம் மரியாதையாக நடந்துகொள்வது அவசியம்'' என்று கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டார். வாடிக்கையாளர் அதிருப்தி: இந்நிலையில் கூட்டத்துக்கு வந்திருந்த நுகர்வோர், இக் கூட்டம் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டுள்ளது என்று குறைகூறினர். 

                 ""இவ்வுளவு குறைகளை நாங்கள் கூறிய பின்னரும், முகவருக்காக வக்காலத்து வாங்குகிறார். அரசு விதித்துள்ள நடைமுறைகளை செயல்படுத்தாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் முகவர்களை எச்சரிக்கவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவரிடம் நீங்களே போய் கேளுங்கள், அப்போது தான் விமோசனம் பிறக்கும் என்கிறார். டோர் டெலிவரி செய்யாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கத் தயங்கும் அலுவலரின் செயல் முகவர்களுக்கு ஆதரவான நிலையையே காட்டுகிறது'' என்று விரக்தியுடன் கூறிவிட்டுச் சென்றனர். 

                       இக் கூட்டம் 150 சதுரஅடி பரப்பளவு அறைக்குள் நடத்தப்பட்டதால் பெரும்பாலான நுகர்வோர் அறைக்கு வெளியிலேயே நிற்கவேண்டியிருந்தது.

Read more »

திங்கள், ஜூன் 28, 2010

வீட்டு சிலிண்டர்களை ஓட்டல்களில் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை: டி.ஆர்.ஓ., எச்சரிக்கை

சிதம்பரம்: 

               காஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது என காஸ் ஏஜன்சிகளுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் தற்போது வட்ட அளவில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிதம்பரம் தாசில்தார் அலுவலககத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டது. வட்ட வழங்கல் தாசில்தார் மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், காஸ் நிறுவனத்தினர், நுகர்வோர் குழும செயலாளர் அப்பாவு உள்ளிட்ட பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குறிப்பிட்ட காலத் திற்குள் காஸ் சிலிண்டர் கிடைப்பதில்லை, வீட்டு உபயோக சிலிண் டர் ஓட்டல், டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. கூடுதல் பணம் கேட்கின்றனர் என பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் பேசுகையில், 

                   "சிதம்பரம் வட்ட அளவில் காஸ் நுகர்வோர்கள் பிரச்னை தொடர்பாக மாதத்தில் கடைசி சனிக்கிழமை குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். காஸ் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் களிடம் கனிவுடன் பேசினாலும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் கூறினாலும் நுகர் வோர் முழு திருப்தி அடைந்து விடுவார்கள். காஸ் எப்போது கிடைக்கும் என் றால், தெளிவாக பதில் கூறுங்கள், கூடுமான வரை காலதாமதம் செய்யக் கூடாது. காஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது. நுகர் வோருக்கு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்வது குறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவித்தால் வசதியாக இருக்கும். ஓட்டல்கள், விடுதிகளில் வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அப்படி யாரேனும் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். மீண்டும் அதே செயலில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior