உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கீரப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீரப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 12, 2011

கடலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்


 முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை 

             கடலூர் மேற்கு மாவட்டம் கீரப்பாளையம் துணை செயலாளர் கர்ணன், ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி சுகந்தி, கே ஆடூர் காலனி கிளை செயலாளர் ஆசைத்தம்பி, ஒன்றிய மாணவரணி துணை தலைவர் ஜெயச்சந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பிச்சாவரம் ஊராட்சி செயலாளர் பால்ராஜ், மடுவன்கரை காலனி கிளை செயலாளர் ஜெயபால், மஞ்சக்குழி ஊராட்சி செயலாளர் மாலிக், 6-வது வார்டு பாலையா, குமாராட்சி கிளை செயலாளர் ராஜேந்திரன், நந்திமங்கலம் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், வல்லம்படுகை மெயின்ரோடு காலனி கிளை செயலாளர் ராஜேந்திரன், மங்களூர் ஆ.களத்தூர் கிளை செயலாளர் ராமலிங்கம், பரங்கிபேட்டை பேரூராட்சி 8-வது வார்டு செயலாளர் ஜெயசங்கர், 14-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன்.  அண்ணாமலை நகர் பேரூராட்சி அவை தலைவர் குஞ்சுபாண்டியன்,         பேரூராட்சி இணை செயலாளர் கலாவதி, 11-வது வார்டு செயலாளர் நடராஜன், பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், பொருளாளர் லோகநாதன், 12-வது வார்டு செயலாளர் ஜெயராமன். பெண்ணாடம் பேரூராட்சி பாபு ராஜேந்திரன், கெங்கைகொண்டான் பேரூராட்சி அவை தலைவர் பிரபு. ஆகியோர் இன்று முதல் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் அ.தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, செப்டம்பர் 17, 2011

சிதம்பரத்தில் 100 பேருக்கு சுயஉதவிக் கடன்

சிதம்பரம்:

            சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு விஜயவாசம் பொது நல அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டு சிண்டிகேட் வங்கி மூலமாக தொழில் தொடங்க தலா ரூ. 15 ஆயிரம் வீதம் சுயஉதவிக்கடன் வழங்கப்பட்டது. கீரப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை மேலாளர் திருப்பணிநத்தம் எஸ்.சகாதேவன் தலைமை வகித்தார்.  அறக்கட்டளைத் தலைவர் எஸ்.கவிதா நிகழ்ச்சியில் பங்கேற்று மகளிருக்கு சுயஉதவிக்கடன்களை வழங்கினார்.







Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிய ஊராட்சி தொடக்கப்பள்ளி திறப்பு விழா

சிதம்பரம் : 

              சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார்  துவக்கி வைத்தார்.  

               புவனகிரி ஒன்றியம் அம்பாள்புரத்தில்  தொடக்கப் பள்ளி இல்லாததால்  இளங் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து கல்விக்குழு உறுப்பினர் துரைமணிராஜன், அமைச்சர்  பன்னீர் செல்வத்திற்கு கோரிக்கை வைத்தார். அப்பகுதிக்கு புதிய பள்ளி அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து புதிதாக ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி துவக்க விழாவில் புவனகிரி சேர்மன் தனலட்சுமி கலை வாணன் தலைமை தாங்கினார். 

                   கல்வித்துறை அதிகாரிகள் சவரிமுத்து, பிரான்சிஸ்ஜெயராஜ், குணபாரி முன்னிலை வகித்தனர்.  கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து முதல் வகுப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  முன்னாள் சேர்மன் மதியழகன், ஆசிரியர் மன்ற மாநில துணைத் தலைவர் வரதராஜன், செல்வராசு,சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஊராட்சித் தலைவர் ஆனந்திகுமார் நன்றி கூறினார்.

Read more »

புதன், ஜூலை 28, 2010

சிதம்பரம் அருகே சுகாதார சீர்கேட்டுடன் ஊர் பொதுக்குளம்


சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் ஊர் பொதுக்குளம் தூர் வாரப்படாமல் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டி சுகாதார சீர்கேட்டுடன் உள்ளதை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

            சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளம் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலாளர்கள் அதிகமாக உள்ள இப்பகுதி  மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், கால்நடை கழுவுவதற்கும் பயன்படுத்தும் விதமாக மூன்றரை ஏக்கர் பரப்பளவில் ஊர் பொதுக்குளம் உள்ளது.

             இக்குளம் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் தூர்ந்தும், ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியும் சுகாதார சீர்கேட்டுடன் அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசி வருகிறது. இருந்தும் வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் குளத்து நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்த்து பிற உபயோகங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி குளத்தை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Read more »

வியாழன், ஜூலை 15, 2010

சிதம்பரம் அம்பலத்தடி மடம் தெரு நகராட்சி பள்ளியில் இலவச காஸ் அடுப்பு வழங்கல்

சிதம்பரம்: 

                சிதம்பரம் அம்பலத்தடி மடம் தெரு நகராட்சி பள்ளியில் அரசு இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இலவச காஸ் அடுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, நகர அவைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் பன்னீர் செல்வம், பாலசுப்ரமணியன், பிரதிநிதிகள் ராஜ், ரமேஷ், புரு‌ஷோத்தமன், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், ஜூலை 01, 2010

அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நிலை பரிதாபம்! படிக்கும் நேரத்தில் மாடுகள் விரட்டும் அவலம்

புவனகிரி : 

                 கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அடிப்படை வசதியில்லை, பாதுகாப்பின்றி திறந்த வெளி மைதானமாக இருப்பதால் கால்நடைகள் உள்ளே வந்து மாணவர்களை மிரட்டுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறி விடுகிறது.

                 சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் கீரப்பாளையம், வயலூர், சிலுவைபுரம், எண்ணாநகரம், செட்டிக்குளம், கண்ணங்குடி, வடஹரிராஜபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களிலிருந்து விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப் பள்ளியில் கடந்த எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர் வில் 75 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். கல்வித்தரம் உயர்ந்துவரும் நிலையில் பாதுகாப் பாற்ற நிலையில் பள்ளி வளாகம் உள்ளது. பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் எந்த நேரத்திலும் மாடுகள் மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு கூட்டம், கூட் டமாக வருவதால் மாணவர்கள் புத்தக பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடிப்பதே வேலையாக உள்ளது. மாடுகள் மட்டுமின்றி நாய்கள் கூட்டம் கூட்டாக பள்ளிகளில் புகுந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வருகின்றன. தினமும் காலையில் மரத்தடியில் சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர். மாடுகள் வருவதால், அந்த மாணவர்கள் எந்த நேரத்திலும் ஓட்டம் பிடிக்கும் நிலையில் உஷாராக உட்கார்ந்து படிக்கின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட பலான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

                     காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களும், ஆசிரியர்களும் பிராந்தி பாட்டில்களை பார்த்து முகம் சுளித்து அவற்றை அவர்களே அப்புறப்படுத்துவதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். மாணவர்கள் சிறுநீர் கழிக்கவும், இயற்கை உபாதைக்காகவும் ஊராட்சி நிர்வாகம் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது. காலப் போக்கில் தண்ணீர் பிரச்னை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளிக்குள் குடித்து விட்டு கும்மாளமிடும் சமூக விரோதிகள் கழிவறையை நாசம் செய்ததோடு சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைக்காக முட்புதர்கள் போன்ற மறைவிடங்களை தேடிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதில் மாணவிகள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. 2007-08ம் ஆண்டு அரசு மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளியில் பல லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.

                  கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட தனித்தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு தளங்கள் அமைக்கப்பட்டன. அவைகளை பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் தற்போது விளையாட்டு மைதானத்தை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூடைப்பந்து மைதானம் காட்டாமணக்கு செடிகள் வளர்ந்த காட்டிற்கு நடுவே வெறும் கம்பி மட்டுமே தெரியும் நிலையில் உள்ளது. மற்ற விளையாட்டு இடங்கள் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. சுடுகாட்டிற்கு பாதுகாப்பான சுற்றுச் சுவர், தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசு மாணவர்களின் நலன் கருதி கீரப்பாளையம் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் தான் பதில் சொல்ல வேண்டும்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior