உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




குறிஞ்சிப்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறிஞ்சிப்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 24, 2012

பிளஸ் 2 தேர்வில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி.மேல்நிலைப்பள்ளியில் 97 சதவீதம் தேர்ச்சி

குறிஞ்சிப்பாடி : 

குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வில் 389 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 378 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி சவுமியா

தமிழ் பாடத்தில் 188 மதிப்பெண்கள், 
ஆங்கிலம் 174, 
இயற்பியல்192, 
வேதியியல் 189,
உயிரியல் 166, 
கணிதம் 197 
மதிப்பெண்களுடன்1200க்கு 1106 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

மாணவர் நிர்மல் 
வேதியியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண், 
கணிதம் 199, 
இயற்பியல் 195 மதிப்பெண்களுடன்
1200க்கு 1098 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.


மாணவர் யுவராஜ் 1200க்கு 1082 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார்.

வணிகவியல் பாடத்தில் மாணவி பாக்கியலட்சுமி 200க்கு 200 பெற்றார். 
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர், பெற்றோருக்கு பள்ளி செயலர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.



Read more »

வியாழன், ஏப்ரல் 05, 2012

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா

குறிஞ்சிப்பாடி :

      குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது.

       தமிழ்த்துறைத் தலைவர் சிவபாலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாக அதிகாரி பேராசிரியர் முத்துக்குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் முனைவர் அகரமுதல்வன் கட்டுரை, கவிதை, கையெழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், துறைவாரியாக முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கினார். கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினர். விளையாட்டு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் முனைவர் ரவீந்திரன் சிறப்புரையாற்றி கல்லூரில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

       விளையாட்டுப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பி.பி. எ., பிரிவு மாணவர்களும், இரண்டாவது இடத்தை பி.காம்., பிரிவு மாணவர்களும் பெற்றனர். விழா ஏற்பாடுகளை மேலாளர் சிவராஜ், உதவிப் பேராசிரியர் வேல்முருகன், கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர்.





Read more »

வியாழன், பிப்ரவரி 09, 2012

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/6b576a00-aa1b-42bb-927f-547ccadfd448_S_secvpf.gif
 
குறிஞ்சிப்பாடி:
 
          குறிஞ்சிப்பாடி வட்டம் பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் சகோதரர் பாலமுருகனுக்கும், வசனாங்குப்பம் கனகசெல்வராசு மகள் சுதா ஆகியோருக்கு, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில் திருமணம் அண்மையில்  நடைபெற்றது.
 
        தே.மு.தி.க. அவைதலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.  
 
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசியது:-
 
         இந்த திருமணம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைதலைவர், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி ஆவார். மணமகன் தி.மு.க. கிளை கழக செயலாளர் விவேகானந்தன் சகோதரர் ஆவார். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் இணைகிறது.
 
         இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்டு செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவதாக தெரிகிறது. தர்மம் வெல்லும், என்னதான் தானே தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும். இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
 
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது 
 
          தனக்கே உரிய பாணியில் அரசியலை தவிர்த்துவிட்டு, தனது உறவினர்களான மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
             மணவிழாவில் தி.மு.க. மாவட்ட அவைதலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர் சிவகுமார், மாவட்ட இலக்கிய அணி அகரம் நாராயணசாமி, நகர இளைஞரணி ராஜா, சின்னதானங்குப்பம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். குள்ளஞ்சாவடி தி.மு.க. செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, ஆகஸ்ட் 13, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி : 

             குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். முகாமில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மற்றும் படிப்பை முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி 14 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கியது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சேரமான், வணிகவியல் துறைத் தலைவர் சிவசங்கரன், பேராசிரியர் தினேஷ்பாபு செய்திருந்தனர்.



Read more »

புதன், ஜூலை 27, 2011

கடலூர் புலியூர் காட்டுசாகையில் பா.ம.க - தே.மு.தி.கவினர் மோதல்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/92c9f6d1-b114-42ed-8426-055f70799da5_S_secvpf.gif
 
கடலூர்:

             குறிஞ்சிப்பாடி அருகே புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் அருள்ஜோதி (வயது 38). தே.மு.தி.க. மாவட்ட தொண்டரணி தலைவராக உள்ளார். 
 
             இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரான திருமால்வளவனுக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அருள்ஜோதியின் தந்தை ரங்கநாதன் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு கும்பல் தகராறு செய்து ரங்கநாதனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தடுக்க முயன்ற தே.மு.தி.க.வை சேர்ந்த குமார், முருகன் ஆகியோரையும் அவர்கள் கத்தியால் குத்தினார்கள்.

             இதில் காயமடைந்த ரங்கநாதன், குமார், முருகன் ஆகியோர் கடலூர் அர2 மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தொகுதி எம்.எல். ஏ. சிவக்கொழுந்து நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது கடலூர் நகர செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா, ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் வைத்திய நாதன், கடலூர் நகர துணை செயலாளர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 
 

 

Read more »

செவ்வாய், ஜூலை 19, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

குறிஞ்சிப்பாடி : 

           குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது. 

              கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் வணங்காமுடி, அரசு கல்லூரி பேராசிரியர் தமிழ்செல்வன், அறிவழகன், முன்னாள் மாணவர் விஷ்ணுதாஸ் அகியோர் பேசினர். கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாக உறுப்பினர் ராமலிங்கம், வைத்தியலிங்கம், சுந்தரமூர்த்தி, மோகன் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.








Read more »

வெள்ளி, ஜூலை 15, 2011

குறிஞ்சிப்பாடியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி

கடலூர்:

             பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி, 17-7-2011 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             பள்ளி, கல்லூரி மாணவ, மாணவரிடையே தமிழ் பற்றை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில், கடலூர் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி இப்போட்டியை நடத்துகிறது. குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் 17-ம் தேதி காலை 10 மணிக்கு போட்டிகள் நடைபெறும். 

               பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-வது பரிசு ரூ. 3 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 2 ஆயிரம், ஆறுதல் பரிசு 5 பேருக்கு தலா ரூ. 1,500 வழங்கப்படும். போட்டிக்கு, உரிய கடிதம் மற்றும் ஒப்பிக்க வேண்டிய பாடல் வரிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.






Read more »

புதன், ஜூலை 13, 2011

குறிஞ்சிப்பாடி அருகே தீ விபத்து: எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன் நிவாரண உதவி

  http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/a9ba3f76-4d36-4db2-8c94-af5ad01200e4_S_secvpf.gif


 
 
கடலூர்:

            குறிஞ்சிப்பாடி தொகுதியில் உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம், சதானந்தம் ஆகியோர் வீடுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

               இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினார். இவருடன் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், ஊராட்சி செயலாளர் மாயவேல், வெள்ளகரை நாகப்பன், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், கிளை கழக செயலாளர்கள் மோகன், சடகோபன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 

Read more »

புதன், ஏப்ரல் 06, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா

குறிஞ்சிப்பாடி : 

            குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா நடந்தது. 

            கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் சிவபாலன் வரவேற்றார். நிர்வாகக்குழுத் தலைவர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்ச் சங்க செயலர் பேராசிரியர் குழந்தைவேலனார் சிறப்புரையாற்றினார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மோகன், ராமலிங்கம், சுந்தரமூர்த்தி, ராஜாமணி, ராஜாராம், வைத்தியநாதன், கணேசன், கிருபாகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் முனவர் ஜான், மோகன் பரிசு வழங்கினர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் ஆறுமுகம், ஸ்டாலின், உடற்கல்வி இயக்குனர் பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.

Read more »

புதன், மார்ச் 09, 2011

குறிஞ்சிப்பாடி கோட்டத்தில் ஏப்ரல் முதல் மின் கட்டணம் வசூல் முறையில் மாற்றம்

குறிஞ்சிப்பாடி : 

                  வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டணம் வசூல் செய்யும் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. 

குறிஞ்சிப்பாடி கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற் பொறியாளர் ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   குறிஞ்சிப்பாடி கோட்டத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் குறைந்த மின்னழுத்த மின் இணைப்புக்கான மின்கட்டண கணக்கீடு மற்றும் வசூல் பணியை மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் கணக்கீடு மற்றும் வசூல் பணியை புதிய செயல் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இத்திட்டம் வரும் 2011 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. 

             தற்போது நடைமுறையில் உள்ள மின் கணக்கிடும் பணி பிரதி மாதம் 16ம் தேதி தொடங்கி கணக்கு எடுத்த பின் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வசூல் பணி நடைபெறுகிறது. இம்முறையை மாற்றி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாத கடைசி வரை கணக்கீட்டு பணியும், மின் கணக்கு முடிந்த இரண்டாம் நாள் முதல் பணம் செலுத்தும் புதிய செயல் திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகம் செய்துள்ளது. 

              மின் கணக்கீடு செய்த 20 நாட்களுக்குள் பணம் செலுத்த தவறினால் மின் துண்டிப்பு, அபராத தொகை வசூல் செய்யப்படும். மேலும், இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான www.tneb.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு செயற் பொறியாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

ஞாயிறு, மார்ச் 06, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் தன்சுத்தம் விழிப்புணர்வு கலந்துரையாடல்


குறிஞ்சிப்பாடி : 

        குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எச்.ஐ.வி., ரத்த தானம், தன் சுத்தம் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் எழிலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மோகன், செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். கடலூர் அரசு மருத்துவமனை ஆற்றுப்படுத்துனர் செந்தில்முருகன், திருநங்கை ரம்பா ஆகியோர் மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். பத்மநாபன் நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், ஜனவரி 04, 2011

கடலூரில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் லாரி பறிமுதல்: 2 பேருக்கு வலை



கடலூர் : 

           குள்ளஞ்சாவடியிலிருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றியினர், மினி லாரியை பறிமுதல் செய்தனர். 

           கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து, வடலூர் நோக்கி மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குள்ளஞ்சாவடிலியிருந்து அரிசி கடத்திச் சென்ற லாரியை விரட்டிச் சென்று குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலையில் மடக்கிப் பிடித்தனர். 

           லாரியில் இருந்த இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். லாரியை சோதனை செய்ததில் 40 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. கடலூர் உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 40மூட்டை ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.

Read more »

சனி, டிசம்பர் 18, 2010

குறிஞ்சிப்பாடியில் மோதல்; 2 பேர் படுகாயம் 3 பேர் கைது

நெய்வேலி:

             குறிஞ்சிப்பாடி மேல விநாயககுப்பம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 34) விவசாயி. இவரும் இவரது நண்பர் வீராசாமியும் ஒரு மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி காலனி எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த சிவசக்திவேல், ராமராஜன், ரத்தினவேல் ஆகியோர் வேனுக்கு வழிவிடும்படி கூறினார்கள். இதையொட்டி அவர்களுக்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

             அப்போது சிவசக்திவேல் உள்பட 3 பேர் ஆத்திரம் அடைந்த நடராஜனையும், வீராசாமியையும் கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். வீராசாமி, குறிஞ்சிப்பாடி ஆஸ்பத்திரியிலும், நடராஜன், கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 

          இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த மோதல் தொடர்பாக சிவசக்திவேல், ராமராஜன், ரத்தினவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read more »

செவ்வாய், டிசம்பர் 07, 2010

கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஹெக்டேர் பயிர் நீரில் மூழ்கின; மு.க. ஸ்டாலின்

 கடலூர்
 
               கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டம், மறுவாய் கிராமத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                 அதன் பிறகு, குறிஞ்சிப்பாடியில் உயிரிழந்த 3 குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையும், மழை வெள்ளத்தால் உயிரிழந்த 5 கால்நடைகளுக்கு ரூ.45 ஆயிரம் நிவாரண உதவிகளையும், முழுவதும் சேதமடைந்த 271 வீடுகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 13 லட்சத்து 55 ஆயிரத்துக்கான காசோலையும், தலா 5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்எண்ணை, வேட்டி, சேலை ஆகிய உதவிகளை வழங்கினார். 
பின்னர் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது:-

               தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் அமைச்சர்களும், மாவட்ட கலெக்டர்களும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

               தமிழக முதல்-அமைச்சர் வெள்ளச்சேத விவரங்களை சேகரிக்க, அரசு உயர் அதிகாரிகளை அனுப்பி 2 நாட்களாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.  கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 1000 கிலோ மீட்டர் சேதம் அடைந்துள்ளது. இதுவரை 90 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. மழையின் காரணமாக 10 பேரும், 120 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

                இம்மாவட்டம் முழுவதும், 2000 குடிசைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 8 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சேதம் குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

             குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மு.க. ஸ்டாலினிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் ஆகியோர் கடலூர் மாவட்ட வெள்ள சேதங்கள் குறித்து புகைப்படங்களுடன் விளக்கினர்.
 
              உயர் கல்வித்துறை, கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, சிறப்பு அலுவலர் ககன்தீப் சிங்பேடி, மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், துரை.ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

வியாழன், டிசம்பர் 02, 2010

சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடியில் 13 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின




சேத்தியாத்தோப்பு : 

               கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கனமழை காரணமாக. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கரும்பு மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளன. 

               கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. வாரச் சந்தை தினமான நேற்று சந்தை மைதானம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள கத்தாழை, கரிவெட்டி, சோழத்தரம் குடிகாடு ஆகிய கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

                எரும்பூர், வளையமாதேவி, ஆனைவாரி, பின்னலூர், மிராளூர், மஞ்சக்கொல்லை, வாண்டையாங்குப்பம், ஓடாக்கநல்லூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழை நீருடன், என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரும் சேர்ந்து பரவனாறு வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதால், சேத்தியாத்தோப்பை அடுத்த நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

                   வீராணம் ஏரி, பெலாந்துறை அணை, மேமாத்தூர் அணை ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் குறைந்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் மீண்டும் மழை துவங்கியுள்ளதால் மக்கள் எந்த நேரத்திலும், வெள்ளம் வரக்கூடும் என்ற அச்சத்துடன் உள்ளனர்.

குறிஞ்சிப்பாடி:

                      கடந்த இரண்டு நாட்களாக நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கனமழையாலும், நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து அளவிற்கு அதிகமாக தண்ணீர் கன்னியாக்கோயில் ஓடையின் வழியாக வெளியேற்றுவதால், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாக்கோயில் ஓடை தண்ணீர் செங்கால் ஓடை வழியாக பரவனாற்றில் கலப்பதால் கன்னியாக்கோயில் ஓடை, செங்கால் ஓடை, பரவனாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

                     வெள்ளப்பெருக்கு காரணமாக ஓடைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சேரக்குப்பம், எல்லப்பன்பேட்டை, அரங்கமங்கலம், அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், பூதம்பாடி, மருவாய், திருவெண்ணைநல்லூர் கிராமம், ஓணாங்குப்பம், அந்தராசிபேட்டை, ஆடூர் அகரம், குண்டியமல்லூர், கருங்குழி, கொளக்குடி ஆகிய கிராமங்களில் பெரும்பகுதி மழைநீர் ‹ழ்ந்துள்ளது. இப் பகுதியில் 3,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின. இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்ததால் வீடு இழந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Read more »

திங்கள், நவம்பர் 22, 2010

குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள செங்கால் ஓடையில் உடைப்பு : 350 ஏக்கர் பயிர்கள் மூழ்கின




குறிஞ்சிப்பாடி : 

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள செங்கால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிபாளையம் பகுதியில் 350 ஏக்கர் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் நீரில் மூழ்கின. தமிழகத்தில் பருவ மழையால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

              இதனால், இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் கன்னியாகோவில் ஓடை மற்றும் செங்கால் ஓடை வழியாக பரவனாற்றில் கலக்கிறது. ரெட்டிபாளையம் பகுதியில் செங்கால் ஓடையின் அணை பகுதி தாழ்வாகவும், பலவீனமாகவும் இருந்ததால், நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டது. இதனால், அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 300 ஏக்கர் நெற்பயிர் மற்றும் 50 ஏக்கர் கரும்பு பயிர் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்தது.

                        மேலும், வயல்வெளி வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு, 350 ஏக்கரில் இனி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், அக்டோபர் 19, 2010

குறிஞ்சிப்பாடி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில்பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு


குறிஞ்சிப்பாடி

               குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில், மேலும் இருவர் இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எல்லப்பன்பேட்டை வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சிவக்கொழுந்து, நாட்டு பட்டாசு தயாரிக்க அனுமதி பெற்றுள்ளார். இவரது குடோனில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வெடி மருந்தை எடுப்பதற்காக மின் விளக்கின் சுவிட்சை போட்ட போது, பல்பு வெடித்தது. இதில் ஏற்பட்ட தீப்பொறியால் பட்டாசு குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது.

                   இதில், குடோன் தரைமட்டமானது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இவ்விபத்தில் உரிமையாளர் சிவக்கொழுந்து அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு (23), சுப்ரமணியன் மகன் அப்பு என்கின்ற சரத்குமார் (23), கணபதி மகன்கள் தருண் (10), சந்தானம் (7) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பு என்கிற சரத்குமார், நேற்று அதிகாலை தருண் (10) இருவரும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.அமைச்சர் ஆறுதல்: விபத்தில் இறந்த சிவக்கொழுந்தின் உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க, முதல்வர் நிவாரண நிதி உதவி வழங்க பரிந்துரை செய்தார்.

மோட்டார் கொட்டகையால் விபரீதம்:

                           வெடி விபத்தில் இறந்த சிவக்கொழுந்து பட்டாசு தயாரிக்க முறையாக லைசென்ஸ் பெற்றிருந்தும், தனது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டார் கொட்டகையை அனுமதியின்றி வெடிகளை இருப்பு வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். மோட்டார் கொட்டகை உள்ளே ஆறு அடி ஆழத்திற்கு பள்ளம் அமைத்து, அதில் மருந்துகளை சேகரித்து வைத்திருந்தார். மோட்டார் கொட்டகை என்பதால் மின்சார உபகரணங்கள் அதிகமாக இருக்கும். மேலும், பாதுகாப்பற்ற நிலையில் வெடி மருந்தை வைத்திருந்ததால் இந்த வெடி விபத்து நேரிட்டுள்ளது.

Read more »

புதன், அக்டோபர் 13, 2010

தேசிய அளவிலான ஜே.ஆர்.சி., முகாமில் குறிஞ்சிப்பாடி வேலாயுதம் பள்ளி சாதனை

கடலூர் : 

             பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த தேசிய அளவிலான ஜே.ஆர்.சி.,முகாமில் குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
 
                   பஞ்சாப் மொகாலியில் நடந்த தேசிய அளவிலான இளைஞர் கலாசார பரிமாற்றத்திட்டம் முகாமில் குறிஞ்சிப்பாடி பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் ஒரே பள்ளியாக பங்கேற்றனர். முகாமில் நடந்த போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி அணியினர் நாட்டுப்புறப்பாடல், பரதநாட்டியம், குழு கலந்துரையாடல் ஆகியவற்றில் முதலிடத்தை பிடித்தனர். மேலும் குழுப்பாடல், குழுநடனம், மாணவிகள் விளையாட்டு போட்டி ஆகியவற்றில் இரண்டாமிடத்தையும், மாணவர்கள விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

                    முகாமில் ஒட்டுமொத்த வெற்றிபுள்ளிகள் பட்டியலில் தமிழகம் இரண்டாமிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி ஜே.ஆர்.சி., அணியினரை கன்வீனர் கோவிந்தராஜ், பள்ளி செயலாளர் செல்வராஜ், பள்ளிக்குழுத் தலைவர் பிரேமாசெல்வராஜ், தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் பாராட்டினர். மேலும் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள், ஆலோசகர் குமார், கார்த்திகேயன், பியூலாஜெயந்தி, பயிற்சி அளித்த ஆசிரியர்கள் நவஜோதி, கவிதா மற்றும் தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 30, 2010

குறிஞ்சிப்பாடியில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

நெய்வேலி:

            குறிஞ்சிப்பாடி வட்டம் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.தேவராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் நுகர்வோர் கூறிய குறைகள்: 

              தொலைபேசி மூலம் பதிவு செய்யும்போது, முகவர் அலுவலக ஊழியர்கள் மரியாதைக் குறைவாக பேசுகின்றனர், ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டோக்கன் முறைக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர், 21 நாள்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்யவேண்டும் என்று கெடுபிடி செய்கின்றனர், அவ்வாறு பதிவுசெய்தாலும் குறைந்தபட்சம் 50 நாள்களுக்குப் பிறகே சிலிண்டர் சப்ளை செய்கின்றனர் என்று கூறினர்.

இவற்றை கேட்டுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் கூறுகையில், 

               ""சிலிண்டர் பதிவுக்கு 21 நாள் காலஅவகாசம் தேவை என்று எந்த உத்தரவும் கிடையாது. டோக்கன் முறை உங்களது வசதிக்காவே கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் சரியாக நடந்துகொண்டால் தவறு நடக்க வாய்ப்பில்லை. மேலும் முகவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனினும் முகவர்கள் நுகர்வோரிடம் மரியாதையாக நடந்துகொள்வது அவசியம்'' என்று கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டார். வாடிக்கையாளர் அதிருப்தி: இந்நிலையில் கூட்டத்துக்கு வந்திருந்த நுகர்வோர், இக் கூட்டம் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டுள்ளது என்று குறைகூறினர். 

                 ""இவ்வுளவு குறைகளை நாங்கள் கூறிய பின்னரும், முகவருக்காக வக்காலத்து வாங்குகிறார். அரசு விதித்துள்ள நடைமுறைகளை செயல்படுத்தாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் முகவர்களை எச்சரிக்கவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவரிடம் நீங்களே போய் கேளுங்கள், அப்போது தான் விமோசனம் பிறக்கும் என்கிறார். டோர் டெலிவரி செய்யாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கத் தயங்கும் அலுவலரின் செயல் முகவர்களுக்கு ஆதரவான நிலையையே காட்டுகிறது'' என்று விரக்தியுடன் கூறிவிட்டுச் சென்றனர். 

                       இக் கூட்டம் 150 சதுரஅடி பரப்பளவு அறைக்குள் நடத்தப்பட்டதால் பெரும்பாலான நுகர்வோர் அறைக்கு வெளியிலேயே நிற்கவேண்டியிருந்தது.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

வாழ்க்கைக்கு தமிழ்; வயிற்றுப் பிழைப்பிற்கு ஆங்கிலம் : கிருஷ்ணராஜ் வானவராயர்




குறிஞ்சிப்பாடி : 

             ""ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் பார்த்துக் கொள்வர் என்ற மெத்தனம், அலட்சியம், அறியாமையால், 63 ஆண்டுகள் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறோம்,'' என, பாரதிய வித்யபவன் கோவை கேந்திராவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.

                கடலூர் மாவட்டம் வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் 40ம் ஆண்டு நினைவு நாள், சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60ம் ஆண்டு வைர விழா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா டாக்டர் நா.மகாலிங்கம் கலையரங்கில் நேற்று நடந்தது. ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் தாளாளர் செல்வராஜ் வரவேற்றார். சுத்த சன்மார்க்க நிலைய துணைத் தலைவர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., சுரங்கங்கள் இயக்குனர் சுரேந்திரமோகன் ஓ.பி.ஆர்., உருவப் படத்தை திறந்து வைத்தார்.

பாரதிய வித்யபவன் கோவை கேந்திராவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியது: 

                 நான் அரசியலை பற்றியோ, ஓ.பி.ஆரை பற்றியோ பேசப்போவது இல்லை. ஓ.பி.ஆரைப் பற்றி அவர் புத்தகங்கள் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் இருந்து ஒரு ஓ.பி.ஆர்., போன்றவரை உருவாக்க வேண்டும் என்பதற்காக பேச வந்துள்ளேன். இளைஞர்களுக்கு எங்களைப் போன்றவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இளைஞர்கள் திறந்த மனதுடன், புதிய கருத்துக்களை பரிசீலித்து நியாயம் இருந்தால் ஏற்றுக் கொள்வர். அளவற்ற அறிவாற்றல் உண்டு.

                   எங்களுக்கு அறிவு இருக்குமே தவிர ஆற்றல் இல்லை. இளைஞர்கள் எதிலும் துணிவுடன் செயல்படுவர். அது எங்களை போன்றவரிடம் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது உலகில் அனைவரும் இந்தியா பிரிந்து துண்டு துண்டாகி விடும் என எண்ணினர். அதை உடைத்து 63 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். உலகத்திலேயே சூப்பர் பவர் இந்தியர்களாகிய நாம் தான். இருந்தாலும் 8 சதவீத மக்கள், குழந்தைகள் உணவு இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். 

                      சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வளர்ச்சி அடைந்தும் ஏழைகள் இருக்கின்றனர். இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தனை ஆண்டுகளும் மக்களை வளர்ச்சிக்கு பயன்படுத்தவில்லை என்பதை உணர வேண்டும். சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள் இயக்கமாக இல்லாமல், நாம் ஓட்டு போட்டு அனுப்பியவர்கள் பார்த்துக் கொள்வர் என்று மெத்தனம், அலட்சியம், அறியாமையால் 63 ஆண்டுகள் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறோம். 

                             கல்வி வழங்கினால் விழிப்புணர்வு ஏற்பட்டு அறியாமை அழிந்து விடும் என கல்வி வழங்கினோம். கல்வி விழிப்புணர்வு வளர்ந்ததே தவிர பொறுப்புகள் வளரவில்லை. கல்வி கற்றவர்கள் மூன்று பொறுப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வியை மாற்றி அமைப்பது, ஆன்மிக அறிவியலை மாற்றுவது, தேசிய பொறுப்பு, இவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

நம் கல்வியின் குறிக்கோள் என்ன தெரியுமா? 

                     வாழ்க்கைக்கு தமிழ், வயிற்று பிழைப்புக்கு ஆங்கிலம், கல்வியின் குறிக்கோளை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு கல்வி குறித்து குழந்தைசாமி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல அயல் நாட்டு அறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியது, அறிவுரை எதுவும் இல்லை. அறிந்து கொள்ள அதிகம் உள்ளது என்றனர். அந்தக் கல்வி அலமாரியில் இருந்து வெளியே வரவில்லை. இவ்வாறு கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior