உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கெம்ப்ளாஸ்ட் கம்பெனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கெம்ப்ளாஸ்ட் கம்பெனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 06, 2010

கடலூர் சிப்காட் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் உலகச் சுற்றுச்சூழல் நாள்


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை கடலூர் சிப்காட் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் மரம் நடுகிறார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.சேகர் (வலம)
கடலூர்:

               கடலூர் சிப்காட் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் சனிக்கிழமை உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாப்பட்டது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிறுவனத்தின் சார்பில் மரங்கள் நடுவதைப் பாராட்டிய அவர், மேலும் அதிக அளவில் மரங்களை நடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சுற்றுச்சூழலை பேணுவோம், பூமியைக் காப்போம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொழிற்சாலை முதன்மை நிர்வாக அலுவலர் (இயக்கம்) என்.எஸ்.மோகன் நிகழ்ச்சியில் பேசுகையில், 

                    கெம்ப்ளாஸ்ட் சன்மார் குழுமத்தின் அனைத்து தொழிற்சாலைகளும், ஒருசொட்டுக் கழிவுநீரைக் கூட வெளியேற்றாமல் மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தொழிற்சாலை வளாகத்தில் இந்த ஆண்டு 1000 மரக்கன்றுகள் நடுவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் மோகன் குறிப்பிட்டார். மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவிப்பொறியாளர் ரொனால்டு டெரி பிண்டோ, சுற்றுச்சூழல் விஞ்ஞானி தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

குளிர்சாதனக் கருவிகள் வழங்கிய கெம்ப்ளாஸ்ட் நிறுவனம்

 கடலூர்:

               கடலூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குளிர்சாதனக் கருவிகளை,​​ கடலூர் கெம்ப்ளாஸ்ட் பி.வி.சி.​ நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது. சமுதாயப் பணியின் ஓர் அங்கமாக,​​ தலா 2 டன் திறன்கொண்ட 3 குளிர்சாதனப் பெட்டிகளை,​​ கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறது.​ அவற்றை கெம்ப்ளாஸ்ட் நிறுவன கடலூர் தொழிற்சாலை முதன்மை நிர்வாகி ​(இயக்கம்)​ என்.எஸ்.மோகன் வழங்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பெற்றுக் கொண்டார்.​ ​ கடலூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு இந்த குளிர்சாதனக் கருவிகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன்,​​ மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார்,​​ மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தாரஜன்,​​ கண்காணிப்பாளர் டாக்டர் பரஞ்சோதி,​​ கெம்ப்ளாஸ்ட் நிறுவன பொது மேலாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கிருஷ்ணகுமார்,​​ சங்கர்,​​ மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், பிப்ரவரி 23, 2010

கத்தார் கப்பல் கடலூர் வந்தது

கடலூர் : 

            கத்தாரிலிருந்து, "காஸ்' ஏற்றி புறப்பட்ட கப்பல், நேற்று முன்தினம் கடலூர் வந்தது. கடலூர் அடுத்த சிப்காட் வளாகத்தில் கெம்ப்ளாஸ்ட் கம்பெனி உள்ளது. இக்கம்பனிக்கு தேவையான மூலப்பொருள், "வினைல் குளோரைடு மோனோமர்' 6,000 டன் காஸ், கத்தார் நாட்டிலிருந்து ஏற்றி புறப்பட்ட "நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், நேற்று முன்தினம் கடலூர் வந்தடைந்தது.மூலப்பொருட்களை இறக்கியதும் நேற்று காலை கப்பல் கத்தார் நாட்டிற்கு திரும்பியது. வரும் 27ம் தேதி மேலும் ஒரு கப்பல் காஸ் ஏற்றிக் கொண்டு கடலூர் வருகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior