உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கொசப்பள்ளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொசப்பள்ளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 01, 2010

கடத்தப்பட்ட தொழிலாளியின் மகன் மீட்பு : செங்கல் சூளை உரிமையாளர்கள் இருவர் கைது

ஸ்ரீமுஷ்ணம் : 

                ஸ்ரீமுஷ்ணம் அருகே கல் அறுக்கும் தொழிலாளியின் மகனை கடத்திய செங்கல் சூளை உரிமையா ளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 
                 ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (37). கல் அறுக்கும் தொழிலாளி. திட்டக்குடி அடுத்த கொசப்பள்ளம் செங்கல் சூளை உரிமையாளர்கள் ஜெயராமன், சுப்ரமணியம். ஜெயராமனிடம், ராமமூர்த்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்  27 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்று சில நாட்கள் வேலைக்கு சென்றார். பின்னர் வேலைக்கு செல்லவில்லை. ஜெயராமன், சுப்ரமணியன் இருவரும் ராமமூர்த்தியை சந்தித்து வேலை முடித்து கொடுக்குமாறு கூறினர்.  ராமமூர்த்தி காலம் கடத்தி வந்தார்.  ஆத்திரமடைந்த இருவரும், நேற்று முன்தினம் இரவு  மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ராமமூர்த்தியின் மகன் வீரா(12)வை கடத்தி சென்றனர்.
 
               இதுகுறித்து ராமமூர்த்தி ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார்.  இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் கொசப்பள்ளம் கிராமத்திற்கு சென்று ஜெயராமன், சுப்ரமணியன் ஆகியோரை பிடித்து  விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் வீராவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவனை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஜெயராமன் மற்றும்  சுப்ரமணியனை கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more »

திங்கள், மார்ச் 22, 2010

பெண்ணாடத்தில் அறிவியல் கண்காட்சி


திட்டக்குடி : 

                பெண்ணாடத்தில் தேசிய பெண்கல்வி சிறப்பு திட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற் றும் கைவினை பொருட்களின் பொருட்காட்சி நடந்தது.
 
                 நல்லூர் ஒன்றிய எஸ். எஸ்.ஏ., சார்பில் தேசிய பெண் கல்வி சிறப்பு திட்ட மாதிரி தொகுப்பு மைய மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் கைவினை பொருட்களின் பொருட்காட்சி பெண்ணாடத்தில் நடந்தது. பெண்ணாடம் பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காதர், ஆசிரிய பயிற்றுனர்கள் ரவி, கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், தமிழ் வேந்தன் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் சிவகாமசுந்தரி வரவேற்றார். நல்லூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி வாழ்த்தி பேசினார். அறிவியல் மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சிகளை நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா துவக்கி வைத்தார்.
 
                    இதில் கொடிக்களம், கிளிமங்கலம், பாசிகுளம், கொசப்பள்ளம், பெண்ணாடம், திருவட்டத்துறை, கூடலூர் குடிகாடு, வடகரை, இறையூர், கூடலூர், பெ.பூவனூர் மாதிரி தொகுப்பு மையங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். சி.எஸ்.டி., திட்ட அலுவலர் டாக்டர் லெனின், ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, விஜிஅனிகிரே, லதாமகேஸ்வரி, செல்வராஜ், அஞ்சலம், ராணி, கண்ணகி, சிவராமசேது பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior