உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சாமியார் பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாமியார் பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 17, 2011

கடலூரில் கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் காயம்


கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் நத்தை பிடிக்கச் சென்று திரும்புகையில், தாழங்குடா அருகே கரையேற முடியாமல் தத்தளிக்கும் படகு.
கடலூர்:
 
          வங்கக் கடலில் புதன்கிழமை சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதில் கடலூரில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்து 3 பேர் காயமடைந்தனர். மேலும் 10 படகுகள் சேதமடைந்தன.
 
          கடலூரில் றபுதன்கிழமை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலும் விழுந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. தேவனாம்பட்டினம் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. அலைகள் சுமார் 20 அடி உயரம் வரை எழுந்து ஆர்ப்பரித்தன. இதன் காரணமாக கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 5 ஆயிரம் சாதாரணப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
 
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் வி.சுப்புராயன் கூறியது:
 
            கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. சிறிய படகுகளில் கரையோரங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களும் தொழில் செய்யவில்லை. கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் சிலர் கடலுக்குள் சென்று கரை திரும்ப முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். வங்கக் கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதுடன், நீரோட்டம் முற்றிலும் மாறி இருக்கிறது. இதனால் வலை போட்டாலும் நிலைப்பதில்லை. கடந்த ஒரு மாதமாகவே கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் சரியாக இல்லை. பல நாள்கள் கடலில் இருந்தும், மீனவர்கள் வெறும் கையுடன் திரும்பி வருகின்றனர் என்றார்.3 மீனவர் காயம்: கடலூர் மாவட்ட கடல் பகுதிகளில் கரையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் நத்தை என்று அழைக்கப்படும் கோழிச் சங்கு அதிகம் கிடைக்கிறது. 
 
             மீனவர்கள் பலர் கண்ணாடி இழைப் படகுகளில் சென்று இவற்றைப் பிடித்து வந்து, கிலோ ரூ. 150 வரை விற்பனை செய்கிறார்கள். இதை வாங்கும் வியாபாரிகள், சிங்கப்பூர், தைவான், மலேஷியா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். அந்த நாடுகளில் செல்வந்தர்கள் ஏற்பாடு செய்யும் விருந்துகளில், கோழிச் சங்கு பரிமாறப்படுகிறது. கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை அதிகாலை, கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் 5 கண்ணாடி இழைப் படகுகளில் நத்தை பிடிக்கச் சென்றனர். ஒரு படகில் தாழங்குடா மீனவர்கள் தனவேல் (30), சத்தியமூர்த்தி (27), கார்த்திக் (27), அகிலன், விஜயன் ஆகியோர் இருந்தனர்.இவர்கள் பிடித்த நத்தைகளை, புதுவை மாநில கடலோரப் பகுதியில் உள்ள வியாபாரியிடம் விற்றுவிட்டு, தாழங்குடா நோக்கி படகில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது கடல் சீற்றம் அதிகரித்ததால் அலைகளில் சிக்கி படகு கவிழ்ந்தது. 
 
            இதில் படகு, என்ஜின், வலை ஆகியவை சேதம் அடைந்து தண்ணீரில் மூழ்கின. படகை அப்படியே விட்டு விட்டு, மீனவர்கள் ஐவரும் நீந்திக் கரை சேர்ந்தனர். இவர்களில் தனவேல், சத்தியமூர்த்தி, கார்த்திக் ஆகியோர் காயம் அடைந்தனர். 10 படகுகள் சேதம்: பலத்த கடல் சீற்றம் காரணமாக கடலூரை அடுத்த சாமியார் பேட்டையில், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 விசைப் படகுகளை அலைகள் இழுத்துச் சென்றன. அவை பலத்த சேதம் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். படகுகளைக் கரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

கடலூர் பரங்கிப்பேட்டையில் மீனவர் கிராமங்கள் மோதல்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/31bf54a0-c92a-4b90-99f5-e04119e6aa09_S_secvpf.gif
 
கடலூர்:

        பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்த மீனவ கிராமத்துக்கும், சாமியார்பேட்டை மீனவ கிராமத்துக்கும் இடையே நேற்று முன்தினம் மாலை மோதல் ஏற்பட்டது. 
 
             சாமியார்பேட்டையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுப்பேட்டை கிராமத்துக்குள் புகுந்து வீடு மற்றும் கடைகளில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள். வாகனங்களின் கண்ணாடியையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள்.

                 இந்த மோதல் தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் சாமியார்பேட்டையை சேர்ந்த 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். சாமியார்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்பட மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

                இதற்கிடையே சாமியார்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று  காலை லாரி, வேன்கள் மூலம் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். சாமியார்பேட்டை கிராமத்துக்குள் புகுந்து போலீசார் பெண்களை மிரட்டுவதாகவும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரை சந்தித்து முறையிட வந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

               இதையடுத்து அப்பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 5 பெண்களை மட்டும் கலெக்டரை சந்திக்க செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி கலெக்டரை சந்திக்க 5 பெண்கள் மட்டும் அலுவலகத்துக்கு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், நவம்பர் 16, 2010

விளைநிலங்களை அழித்து தனியார் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதை தடுக்க கோரிக்கை

சிதம்பரம்:

                சிதம்பரம் அருகே விளைநிலங்களை அழித்து தனியார் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா, கோரிக்கை விடுத்தார்.  இது குறித்து கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

மனு விவரம்: 
              
                கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் விவசாய நிலங்களை சார்ந்து  வாழ்ந்து வருகின்றனர். இவர்களது ஜீவாதாரமான விவசாய நிலங்கள் அடிமட்ட குறைந்த விலையான ஏக்கர் ரூ.1 லட்சத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று மூலம் வாங்கப்பட்டு வருகிறது. 

              குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களான பூவாலை, வயலாம்பூர், மணிக்கொல்லை, அலமேலு மங்காபுரம், தச்சக்காடு, அருண்மொழிதேவன், சின்னக்குமட்டி, சாமியார்பேட்டை, ஆலப்பாக்கம், தியாகவள்ளி, பெரியக்குப்பம், புத்திரவெளி, சித்திரைப்பேட்டை, ராசாப்பேட்டை, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நல்ல விளைச்சல் தரும் நிலங்கள் தனியார் மின் உற்பத்தி நிலையம், எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவற்றால் குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளது. 

                   இதனால் எதிர்காலத்தில் விவசாயம் செய்யக்கூட நிலம் இல்லாத அபாய நிலை உருவாகிவிடும். அதுமட்டுமல்லாது விவசாயத்தை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே விவசாயிகளின் நலன் கருதி புதிதாக தனியார் நிறுவனங்கள் அமைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.

Read more »

வெள்ளி, மே 07, 2010

ஊரக மேம்பாட்டு இணைய கல்விக்கழக கூட்டம்

கடலூர் : 

              ஊரக மேம்பாட்டு இணைய கல்விக் கழக கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது.

              சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஊரக மேம்பாட்டுக்கென இணைய கல்விக்கழகம் என்ற திட்டத்தினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கிராம பஞ்சாயத்துகளின் முழுபங்கேற்போடு அறிவு மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்குத் தேவையான உள்ளூர் தகவல்கள் மற்றும் பயிற்சிகள் அளித்து வருகிறது.

                 குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் தாலுகாவில் நொச்சிக்காடு, மணிக்கொல்லை, சாமியார் பேட்டை, பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை, முழுக்குத்துறை மற்றும் எம். ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளில் கிராம அறிவு மையங்கள் மூலம் மக்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, மண் பரிசோதனை முகாம், முதியோர் கல்வி, மீனவ நண்பன், செல்போன் வசதி, சுனாமி எச்சரிக்கை மின்னனு இயந்திரம், கண் பரிசோதனை முகாம் போன்ற பயிற்சிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் பரங்கிப்பேட்டை சமுதாயக் கூடத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வேல்விழி திட்ட விளக்கம் மற்றும் கிராம அறிவு மைய பகுதி பங்காளர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார். திட்ட அலுவலர் இளங்கோவன் கிராம அறிவு மையங்களின் செயல்பாடுகள் குறித்து பகுதி பங்காளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

பொது அறிவிற்கு:
           கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 7

Read more »

சனி, பிப்ரவரி 20, 2010

ஏஜன்டுகளால் ஏமாற்றப்படும் ஏழை விவசாயிகள் நடவடிக்கை எடுக்க நல்லகண்ணு வேண்டுகோள்

கடலூர் : 

                           கடலூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக விவசாயிகள் முன்வந்து நிலத்தை கொடுத்தாலும் ஏஜன்டுகள் விலையில் பாரபட்சம் காட்டி   வருகின்றனர் என இந்திய கம்யூ.,கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு பேசினார். கடலூர் அடுத்த புதுச்சத்திரம், சாமியார் பேட்டை பகுதியில் கப்பல் கம்பெனி, பவர் கார்ப்பரேஷன் கம்பெனிகளுக்காக  நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி ஏமாற்றப் படுவதை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உண் ணாவிரதம் இருந்தனர்.ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார், ராமலிங்கம், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சேகர், செயலாளர் சுப்ரமணியன், ஏஐடியுசி., மாவட்ட செயலாளர் சேகர், இந்திய.கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம் பங்கேற்று பேசினர்.

முன்னதாக இந்திய கம்யூ., மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு  உண்ணா விரதத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

                        பரங்கிப்பேட்டை பகுதியில் பவர் கம்பெனி, கப்பல் கம்பெனிக்காக நிலம் ஆர்ஜிதம் செய்து வருகின்றனர். அந்த பகுதி விவசாயிகளும் தொழில் வளர்ச்சியை கருதி, நிலத்தை கொடுப்பதற்கு முன் வந்தனர். ஒரு கம்பெனி நேரடியாக நிலத்தை வாங்காமல், ஏஜன்டுகள் மூலம் நிலத்தை வாங்குகிறது. இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் மோசடி நடக்கிறது. ஒரே சர்வே எண் உள்ள இடத்திற்கு அண்ணனுக்கு ஏக்கர் 4 லட்சம் ரூபாய் எனவும், தம்பிக்கு 8 லட்சமும், தங்கைக்கு 13 லட்சமும் கொடுத்து வாங்குகின்றனர். ஏன் இந்த வித்தியாசம். இதனால் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர்.  ஏஜன்டுகள் நிலம் வாங்க யார் அதிகாரம் கொடுத்து. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைந்து போராட் டம் நடத்தப்படும்.மேலும் இந்த பிரச்னையை இந்திய.கம்யூ., கட்சி சட்டமன்றத்திலும் எழுப்பவுள்ளது எனப் பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior