உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சாமியார்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாமியார்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 30, 2010

காணாமல் போன கடலூர் மீனவர்கள் 5 பேர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கரையேறினர்

கடலூர் : 

                  கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஐந்து மீனவர்கள் 10 நாட்களுக்குப் பின் நேற்று நாகை துறைமுகத்தில் கரையேறினர். பின் அவர்கள் கடலூருக்கு அழைத்து வரப்பட்டனர். 

                   கடலூரை அடுத்த தம்மனாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்குச் சொந்தமான விசைப் டகில் கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகரை அடுத்த நஞ்சம்பேட்டை சங்கரன் (50), ஏழுமலை (53), பெரியக்குப்பம் கருப்பர் (55), சித்திரைப் பேட்டை சேகர் (55), சாமியார்பேட்டை முத்துசாமி (42) ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். படகின் உரிமையாளர் அஞ்சாபுலி 20ம் தேதி மாலை மொபைல் போன் மூலம் கடலுக்குள் சென்ற மீனவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார்.  

                        அதன்பின் மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால் அச்சமடைந்த மீனவர்கள், காணாமல் போனவர் களை கண்டு பிடித்துத் தரக்கோரி 26ம் தேதி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். உடன் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல்படை மூலம் தேடுவதாக கலெக்டர் தெரிவித்தார். நேற்று முன்தினம் நடந்த கூட்டத் திலும் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் 200 பேர் தேடுவதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார். ஆனால், காணாமல் போன மீனவர்கள் குறித்து 28ம் தேதி காலை வரை எவ்வித தகவலும் தெரியவில்லை.

                        இதனால் 10க்கும் மேற்பட்ட  மீனவர்கள் வெள்ளைக் கொடி கட்டிய  நான்கு விசைப் படகுகளில் மீனவர்களைத் தேடி கடலுக்குள் சென்றனர். இந்நிலையில், காணாமல் போன மீன வர்கள் நேற்றுமுன்தினம் மதியம் நாகப்பட்டினத்தில் படகுடன் கரை ஏறினர். அவர்கள் படகை கடலூரில் இருந்து சென்ற மீனவர்கள் கயிறு கட்டி இழுத்து வந்தனர். நேற்று காலை 5 மீனவர்களும் கடலூர் துறைமுகத் திற்கு வந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ஆர்.ஓ., நடராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

கரை திரும்பிய மீனவர்களில் விசைப்படகு டிரைவர் சங்கரன் கூறுகையில், 

                    ""கடந்த 19ம் தேதி புறப் பட்ட நாங்கள் புதுச்சேரி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப் போது கியர் ராடு உடைந்து விட்டது. அதனால் குறிப்பிட்ட திசை நோக்கி படகை செலுத்த முடியவில்லை. சரி செய்வதற்குள் காற்றின் வேகத்தால் ஆழ்கடலை நோக்கித் தள்ளப்பட்டு இலங்கை அருகே சென்று விட்டோம். தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பின்னர்  படகில்  மெல்ல மெல்ல  நாகப்பட்டினம் வந்தடைந்தோம். நாங்கள் கரைக்கு வந்த பின்னர்தான்  எங்களைத் தேடி வந்தவர்களை சந்தித் தோம். நாங்கள் சோறு சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது,'' என்றார்.

Read more »

வியாழன், ஏப்ரல் 08, 2010

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிக்குவி.ஏ.ஓ., வரவில்லை: கிராம மக்கள் புகார்


பரங்கிப்பேட்டை: 

                  பரங்கிப்பேட்டை அருகே குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணிக்கு வி.ஏ.ஓ., வரவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதி திட் டத்திற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. பல இடங்களில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த சிலம்பிமங்களம், நொச்சிக்காடு, ஆத்துமேட்டு காலனி, ரயிலடி, சின்னாண்டிக்குழி, சாமியார்பேட்டை ஆகிய கிராமங்களில் 508 குடிசை வீடுகள் உள்ளது.

                       இந்த ஊராட்சியில் கணக்கெடுக்க வி.ஏ.ஓ., மக்கள் நலப்பணியாளர், ஊராட்சி எழுத்தர் ஆகியோர் கடந்த மாதம் 29ம் தேதி கணக்கெடுக்கும் பணியை துவங்கினர். இதுவரை மூன்று நாட்கள் மட்டுமே வி.ஏ.ஓ., பணிக்கு வந்துள்ளதால் கடந்த 10 நாட்களில் 59 குடிசை வீடுகளை மட்டுமே கணக்கெடுத்துள்ளனர். இதனால் தினமும் மக்கள் நலப்பணியாளரும், ஊராட்சி எழுத்தரும் வி.ஏ.ஒ., அலுவலகத்திற்கு வந்து அவர் வராததால் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.குடிசை வீடு கணக்கெடுக்கும் பணிக்கு கலெக்டர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் வி.ஏ.ஓ., அலட்சியம் காட்டுவது கிராம மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior