உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சிறுபாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுபாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் அழிந்துவரும் கோவில் சுடுமண் சிற்பங்கள்

சிறுபாக்கம்:


     பழமை வாய்ந்த கோவில்களில் சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்துவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் பிரதான கோவில்களில் பண்டை காலத்தில் கிராமத்தினையொட்டி ஆண்டவர், ஐயனார், எல்லையம்மன், கருப்பையா, மதுரைவீரன் உள்ளிட்ட பழமை வாய்ந்த கோவில்கள் இயற்கை சூழலுடன் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

           இங்கு கிராம மக்கள் தை முதல் சித்திரை மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஊரணி பொங்கலிட்டு திருத்தேர்விழா நடத்துவார்கள். முக்கிய விழாக்கள் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் போதிய மழை பெய்து வேளாண்மையில் அதிக மகசூலை பெறவும், கிராமம் அமைதியாக இருக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உண்டு. கிராமப்புற திறந்த வெளி கோவில்களில் குலதெய்வமாகவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். குடும்பத்தில் அமைதி நிலவிடவும், பிள்ளை பேறு அடையவும் வேண்டுதல் வைத்து அவை நிறைவேறியவுடன் சுடுமண்ணால் அமைக்கப்பட்ட குதிரைகள், யானைகள் அமைத்து கிடா பூஜையுடன் நேர்த்திக் கடன் செய்து வருகின்றனர். இதுபோன்ற கோவில்களில் கம்பீரமாக அலங்கரித்த சுடுமண் சிற்பங்கள் அண்மைக் காலமாக சிதைந்தும், உடைந்தும் காணப்படுகின்றன. மே லும் சுடுமண் சிற்பங்கள் வைத்து வழிபடுவதும் குறைந்து வருகிறது.


     சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் ஏராளமான சுடுமண் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கோவிலில் சேலம், ஈரோடு, ராசிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  ஆனால் ஆரம்ப காலங்களில் இருந்தது போன்று பெரிய மற்றும் சிறிய அளவிலான சுடுமண் சிற்பங்கள் வைத்து வழிபடுவது குறைந்து விட்டது. பழமை வாய்ந்த சுடுமண் சிற்பங்கள் முற்றிலும் அழிந்து விடாமல்தொல்லியல்துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

Read more »

வெள்ளி, மே 25, 2012

மங்களூர் ஒன்றியத்திலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை


சிறுபாக்கம் :

மங்களூர் ஒன்றியத்திலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணிநேற்று நடந்தது.
மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சி தலைவர்கள், 24 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 456 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட 548 உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அடையாள அட்டை வழங்கபோட்டோ எடுக்கும் பணியை ஒன்றிய சேர்மன் கந்தசாமி துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் சுந்தரம், கலையரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பணி முடிந்தவுடன் விரைவில் இவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
நல்லூர் ஒன்றியத்தில் 64 ஊராட்சி தலைவர்கள் 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 438 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 525 பேர்களுக்குபோட்டோ எடுக்கும் பணி நடந்தது. பணியை ஒன்றிய சேர்மன் ராஜலட்சுமி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,ராஜவேல், ஒன்றிய துணைசேர்மன் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.




Read more »

புதன், அக்டோபர் 27, 2010

சிறுபாக்கம் பகுதிகளில் ஊடு பயிரான "ஆமணக்கு' பயிரால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்

சிறுபாக்கம் : 
 
                சிறுபாக்கம் பகுதிகளில் ஊடு பயிரான "ஆமணக்கு' பயிர் அமோக விளைச்சலால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

                  சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மங்களூர், மலையனூர், அடரி, மாங்குளம், எஸ்.நரையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் நீர்பாசன நிலங்களில் மணிலா, பருத்தி, மஞ்சள், காய்கறிகள் மற்றும் நெல் பயிரினை விளைவித்துள்ளனர். இந்த பயிர்களுக்கு இடையே பாத்தி அமைத்தும், வயல் ஓரங்களிலும் ஆமணக்கு பயிர் செய் வது வழக்கம். பயிரிட் டுள்ள பயிர்களை காட்டிலும் ஆமணக்கு பயிர் கூடுதல் பயிராக பயிர் செய்துள்ளனர்.

                      இப்பயிருக்கு தேவையான உரம், நீர், களை கொத்துதல் உள்ளிட்ட எந்த செலவினமும் இல் லாமல் இயற்கையாகவே ஆமணக்கு காய்கள் அதிகளவு காய் பிடித்து விளைச்சலை தருகிறது. முன் எப்போதும் இல்லாத நிலையில் ஆமணக்கு விதையினை அதிகளவு விளைத்துள்ளனர்.

Read more »

வியாழன், அக்டோபர் 14, 2010

சிறுபாக்கம் பகுதிகளில் கருணைக் கிழங்கில் மர்ம நோய் தாக்குதல்: விவசாயிகள் அச்சம்

சிறுபாக்கம் : 

                சிறுபாக்கம் பகுதிகளில் கருணைக்கிழங்கு பயிரில் மர்ம நோய் தாக்குதலால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

                சிறுபாக்கம், அரசங்குடி, மாங்குளம், அடரி, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் நிலத்தடி நீரினை பயன்படுத்தி மிகவும் குறைந்த அளவிலான நிலத் தில் கத்தரி, வெண்டை, வெங்காயம், பாகை, தக்காளி, கருணைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்களை விளைவித்து வந்தனர். இதில் 10 மாத அறுவடை பயிரான கருணைக் கிழங்கு சோனா, விரளி, சட்டிக்கரணை, புளிக் கரணை ஆகிய கிழங்கு பயிர்களை விளைவித்து அறுவடைக்கு பின் திருச்சி, சேலம் மாவட்டம் தலைவாசல் நகர் புறங்களில் விற்று வருகின்றனர்.

                   முதிர்ந்த நிலையிலுள்ள கிழங்குகளில் திடீரென அழுகல் நோய் தாக்கி செடிகள் இறந்துள்ளது. திடீரென இந்நோய் தாக்குதலால் அச்சமடைந்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். உரம், உழவு, பூச்சி மருந்து என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள், அறுவடைக்குத் தயாரான நிலையில் மர்ம நோய் தாக்குதலால் கருணைக் கிழங்கு பயிரினை பறி கொடுக்கும் நிலை ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்

சிறுபாக்கம்:

             நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் ஐம்பது பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். நல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த மாளிகைமேடு, கீழக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த தே.மு.தி.க., நிர் வாகிகள் ஐம்பது பேர் தங்கவேல், ராமசாமி, கண்ணன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது சேர்மன் ஜெயசித்ரா, ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திவிநாயகம், வெங்கடாசலம், துணை செயலாளர் கருப்புசாமி உடனிருந்தனர்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 23, 2010

கழுதூர்- சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்திட கோரிக்கை

சிறுபாக்கம் : 

            சிறுபாக்கம்- கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்திட முன்னாள் எம்.பி., கோரிக்கை விடுத் துள்ளார்.

இது குறித்து தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கணேசன், சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கிய மனு: 

                 மங்களூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கழுதூர் மற்றும் சிறுபாக்கம் ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 80 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஏழை, எளிய மக்களே அதிகம் வசித்து வருகின்றனர். குக்கிராம மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் மேல் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர், விருத்தாசலம் பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 60 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. 

                      இதனால் நேர விரயமும், பண விரயமும் ஏழை மக்களுக்கு ஏற்படுவதால் மக்கள் கடுமையாக அவதியடைகின்றனர். எனவே பின் தங்கிய பகுதியில் அமைந்துள்ள கழுதூர் மற்றும் சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத் தப்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior