உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தானே புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தானே புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 21, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பெண்களுக்கு தொழில் உதவி

        கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 900 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1 லட்சம் டாலர் நன்கொடை வழங்கவிருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது.

       இந்த நன்கொடை மூலமாக வால்மார்ட் பவுண்டேசன் மற்றும் கேர், கடலூர் பகுதியில் முந்திரி செயல்முறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும், நீடித்திருக்கும் முந்திரி சாகுபடி நடைமுறை கள் மேம்படுத்தப்படும். மேலும் பாதிக்கப்பட்ட முந்திரி செயல்முறை கட்டமைப்பினை மீள்ப்படுத்தி, அதன் மூலம் நீடித்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்தை மீட்பதற்கு எண் ணியுள்ளன. குப்பைகளை அகற்றுதல், முந்திரி மரம் நடுவ தற்காக நிலத்தை தயார்படுத்துதல், சிறு விவசாயிகளுக்கு உதவுதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

 இதுகுறித்து வால்மார்ட நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் ராஜ் ஜெயின்அளித்த பேட்டி

         கடலூர் மிகப் பெரிய அளவில் முந்திரி விவசாயம் மற்றும் செயல்முறை நடவடிக்கைகளை கொண்டுள்ளது. தானே புயலால் கடலூர் பெரிதளவில் பாதிக்கப் பட்டுள்ளது. சுமார் 47 உயிர்களை பலி வாங்கியதுடன், 735 கிராமங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் முந்திரி பயிரிடு பவர்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பணியாளர் களின் திறனை மீண்டும் உருவாக்க முடிவு செய்துள் ளோம். சுமார் 900 பெண்கள் உள்பட 3600 பேர் இதன் மூலம் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.






Read more »

வியாழன், மார்ச் 15, 2012

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயலால் பாதித்தவர்களுக்கு சமூக மறுவாழ்வு பயிற்சி

கடலூர் :

       "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய முதன்மை பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.

        "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

      இதற்காக முதல் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 ஆசிரியர்களுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் நடந்தது. முகாமிற்கு அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். மனநல டாக்டர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியது ு:


          "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு மறுவாழ்விற்காக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கடலூர் மாவட்ட மக்கள் ஒன்பது வகையான பேரழிவுகளை சந்தித்துள்ளனர். ஒவ்வொரு பேரழிவும் ஒரு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தொடர் பேரழிவுகளால் மாவட்ட மக்கள் பொருளாதாரம், சமுதாயம், மனம் மற்றும் உடல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே உள்ள மன அழுத்தத்தைப் போக்கி மீண்டும் அவர்களை புத்துணர்வு ஏற்படுத்தவே இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொருவரிடமும் உள்ள மன அழுத்தத்தை வெளிக் கொண்டு வர, பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ள ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசினார். நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

      அதனைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்ற 70 ஆசிரியர்களுக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மருத்துவக் கழக பேராசிரியர் சேகர் பயிற்சியளித்தார். இந்த முகாம் இன்றும் தொடர்கிறது. முகாமில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு உளவியல் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் மன அழுத்தத்தைப் போக்க உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Read more »

புதன், மார்ச் 07, 2012

சிதம்பரம் அருகே தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது

ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி (முகத்தை மறைத்துக் கொண்டிருப்பவர்).

சிதம்பரம்:

        தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  

           சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றியம், மேலபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆசைதம்பி. இவர் தேமுதிக ஒன்றிய துணைச் செயலராக உள்ளார். இவரது மனைவி தமயந்தி, 8-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார்.  இவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ரூ.41 ஆயிரத்து 600 நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இதை பெறுவதற்கு தனக்கு ரூ.10 ஆயிரம் தருமாறு மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி கேட்டுள்ளார். பின்னர் ரூ.9 ஆயிரமாவது தருமாறு கோரியுள்ளார். இதையடுத்து ஆசைதம்பி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார்.  

        இந்நிலையில் போலீஸார் அறிவுறுத்தலின்படி ஆசைதம்பி, கிராம நிர்வாக அலுவலர் வீராசாமியை சிதம்பரம் காந்தி சிலை அருகே வந்து செவ்வாய்க்கிழமை பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.  அதன்படி வீராசாமியிடம், ஆசைதம்பி ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மாறுவேடத்திலிருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீஸார் லஞ்சம் பெற்றதாக வீராசாமியை (55) கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றினர்.   

















Read more »

சனி, பிப்ரவரி 25, 2012

தானே புயலின் அறுவடை குறும்படம் வெளியீடு

கடலூர்:

         இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய "தானே புயலின் அறுவடை' குறும்படம் கடலூரில் இன்று திரையிடப்படுகிறது.

          "தானே" புயல் பாதிப்புகளையும், அதன் துயரத்தையும் உலகில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் "தானே புயலின் அறுவடை' என்ற குறும்படத்தை (ஆவணப்படம்) இயக்குனர் தங்கர் பச்சான் தயாரித்து இயக்கியுள்ளார். அதன் வெளியீட்டு விழா கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் இன்று 25ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 35 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தை "தானே' புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெளியிடுகின்றனர். நிகழ்ச்சியில் இயக்குனர் தங்கர் பச்சான் பங்கேற்கின்றனர்.












Read more »

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் 1,500 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கடலூர் :
 
       புயலில் பாதிக்கப்பட்ட 1,500 மாணவர்களுக்கு ரியல் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணங்கள் வழங்கியது.
 
       "தானே' புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், ராமாபுரம், அழகப்பசமுத்திரம், சிறுதொண்டமாதேவி, அ.புதூர், வேகாகொல்லை, காட்டு வேகாக்கொல்லை, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மதனகோபாலபுரம், தியாகவல்லி, அம்பேத்கர் நகர், நொச்சிக்காடு கிராமங்களைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகளுக்கு ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் மற்றும் அங்கன்வாடி செல்லும் 500 குழந்தைகளுக்கு ஜான்ஸ் பேபி கிட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
 
         நிகழ்ச்சியில் ஜெர்மனைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ரோன்ஜா சாம்ஸ், ஜோஹனா டோல், ஊராட்சித் தலைவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ரியல் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், கஸ்தூரி, ராமு, ஜான், பாக்கியலட்சுமி, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

பண்ருட்டியில் தானே புயலால் சேதம் அடைந்த முந்திரி மரங்களை அகற்றும் பணி தீவிரம்

கடலூர்:
 
            கடலூர் மாவட்டம் மேலிருப்பு கிராமத்தில் தானே புயலினால் சேதமடைந்த முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் பயன்படுத்தி அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  
 
           புயலினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முந்திரி விவசாயிகளின் நலனுக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிர் சேத நிவாரணத்தோடு, முந்திரி பயிர்களை மீண்டும் பயிர் செய்வதற்கு விலை ஏதுமின்றி மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றும், அந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான பராமரிப்பு செலவுகளையும், விவசாயப் பணிகளுக்கான செலவுகளையும், 5 ஆண்டு காலத்திற்கு அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
 
           மேலும் முந்திரி மற்றும் பலா தோப்புகள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், விழுந்த மரங்களை அகற்றிட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு, ஏற்படும் 6,000 ரூபாய் செலவினம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
 
          இந்த மரங்களை வெட்டுவதற்குத் தேவையான சங்கிலி ரம்பக் கருவிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் என்று கூறினார்.
 
          இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும். மரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட பின், அடிக்கட்டையையும் அகற்றிய பின்னரே அத்தோட்டங்களில் உழவுப் பணியும், ஊடுபயிர் சாகுபடியும் மேற்கொள்ள இயலும் என்பதால், அடிக்கட்டை அகற்றும் பணி எந்திர உதவியுடன் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.  
 
          இதனடிப்படையில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேலிருப்பு ஊராட்சியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை அகற்றி, விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு முன்மாதிரி பணி நடைபெற்றது. முதல் நாளன்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கொண்டு மரத்தில் உள்ள சிறு கிளைகள் அகற்றப்பட்டன.
 
        புதன் கிழமை  மேலிருப்பு கிராமத்தில் ராஜாராமன் என்பவரது முந்திரி தோப்பில் முற்றிலும் அழிந்த நிலையில் உள்ள முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் மூலம் வெட்டி எடுத்து அகற்றும் பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பார்வையிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், பிப்ரவரி 13, 2012

கடலூர் நகராட்சியில் தானே புயலால் உருவான 1,500 டன் குப்பைகள் அகற்றம்

கடலூர்:
 
         கடலூர் நகராட்சியில் புயலால் உருவான 1500 டன் குப்பைகளை, முழுமையாக அகற்றும் பணியை, ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சனிக்கிழமை ஆய்வு செய்தார். 
 
         கடலூர் பிரதானச் சாலைகளில் குப்பை அகற்றும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். புயலினால் கடலூர் மாவட்டத்தில் விளம்பர போர்டுகள், மரங்கள், கூரைகள் மற்றும் பல்வேறு பொருள்கள் தூக்கி எறியப்பட்டு, குப்பைகளாக மாறியுள்ளன.  சாலைகளில் விழுந்துக் கிடந்த மரங்கள், கிளைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த பொருள்களை அகற்றும் பணி, புயல் பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே முடிக்கப்பட்டது. 
 
         முக்கியப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியும் முடிவடைந்து உள்ளது. கடலூர் நகராட்சிப் பகுதியில் மட்டும் இன்று வரை 1,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன.  கடலூர் மாவட்டத்தை சுத்தமான, சுகாதாரமான மாவட்டமாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.  மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 683 ஊராட்சிப் பகுதிகளில், புயலினால் ஏற்பட்டுள்ள குப்பைகள் மற்றும் படிந்துக் கிடக்கும் மண் மேடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  
 
         இப்பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடலூர் நகராட்சிப் பகுதியில் குப்பைகளை முழுமையாக அகற்றும் பணி தினந்தோறும் 5 வார்டுகள் வீதம், நடைபெற்று வருகிறது.  சனிக்கிழமை முக்கிய சாலைகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணிகளில் 230 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இப்பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் டவுன்ஹால் பகுதியில் தொடங்கி வைத்தார்.  
 
          பின்னர் நகராட்சி அலுவலகம், நியூசினிமா திரையரங்கம், அண்ணா மேம்பாலம், பேருந்து நிலையப் பகுதி, முதுநகர் ஆகிய இடங்களில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, சார் ஆட்சியர் கிரண் குராலா, நகராட்சித் தலைவர் சி.கே.சுப்ரமணியன், துணைத் தலைவர் குமார், ஆணையர் விஜயகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 

Read more »

சனி, பிப்ரவரி 11, 2012

"தானே" புயல் நிவாரணம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.103.87 கோடி

           "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.103.87 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

         பல்வேறு தொழிலதிபர்கள், திரைப்பட பிரமுகர்கள் என பலரும் தாங்களாக முன்வந்து நிதியை அளித்து வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்து 25 பேர் நிதி அளித்தனர். வருவாய்த் துறை சார்பில் அதன் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.1.88 கோடியையும், தொழில் துறை சார்பில் அமைச்சர் பி.தங்கமணி ரூ.1.64 கோடியையும் முதல்வரிடம் வழங்கினர். பள்ளிக் கல்வி சார்பில் ரூ.25 கோடி அளிக்கப்பட்டது.செய்தித் துறை சார்பில் ரூ.13.23 லட்சத்தையும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ரூ.10 லட்சத்தையும் அளித்தனர்.எம்.ஆர்.எப். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம்.மேமன் ரூ.1 கோடியும், அப்போலோ மருத்துவமனை சார்பில் ரூ.1.5 கோடியும், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா ரூ.1 கோடியும் அளித்தனர்.தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.75 லட்சமும், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஊழியர்கள் சார்பில் ரூ.50 லட்சமும், எம்.பி. குழுமம் சார்பில் ரூ.25 லட்சமும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரூ.20 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது.

                கோவை கே.ஜி. மருத்துவமனை சார்பில் ரூ.15 லட்சமும், கோவை பிரிகால் நிறுவனத்தின் சார்பில் ரூ.15 லட்சமும், மாதா குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.பீட்டர் சார்பில் ரூ.10 லட்சமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது.சிரைன் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி சார்பில் ரூ.10 லட்சமும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சார்பில் ரூ.10 லட்சமும், அம்மன் குழுமம் சார்பில் ரூ.7 லட்சமும், இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ரூ.7.10 லட்சமும் நிதி வழங்கப்பட்டது.

               பாரதியார் பல்கலைக்கழகம் ரூ.7 லட்சமும், ஆசான் மெமோரியல் சங்கம் ரூ.6 லட்சமும், திரைப்பட நடிகை நயன்தாரா ரூ.5 லட்சமும் நிதி அளித்தனர். சர்ச் பார்க் பள்ளி மாணவிகள் ஜெய்வர்ஷினி, மனிஷா, சுஜித்ரா ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அளித்தனர்.தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.35 கோடி வழங்கப்பட்டது. நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ.103.87 கோடி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Read more »

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

"தானே" புயலின் பாதிப்புகள் பற்றி தங்கர்பச்சானின் ஆவண படம்

     "தானே" புயலின் பாதிப்புகள் பற்றி டைரக்டர் தங்கர்பச்சான் ஒரு ஆவண படம் தயாரித்து, டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு அவர், `தானே புயலின் அறுவடை' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

    35 நிமிடங்கள் ஓடுகிற இந்த ஆவண படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் தயாராகியிருக்கிறது. `தானே' புயலினால் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எத்தகையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்? என்பதை படம் சித்தரிக்கிறது.

படம் முடிந்தபின் டைரக்டர் தங்கர்பச்சான் கூறியது

         ’’கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விழுந்து கிடப்பவை எல்லாம் வெறும் மரங்கள் அல்ல. எங்கள் தாத்தா-பாட்டி. அப்பா-அம்மா. அவர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்து தண்ணீர் ஊற்றி வளர்த்தவை. மரங்கள் இருந்தால்தான் உயிரினங்கள் வாழும். இதை ஒரு மாவட்ட பிரச்சினையாக பார்க்கக் கூடாது. நாட்டின் பிரச்சினையாக பார்க்க வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க, 8 ஏக்கருக்கு ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும். இந்த இரு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் குறைந்தது 10 ஆண்டு காலம் ஆய்வு படிப்பு வரை, கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.
மக்களும், அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தால்தான் திட்டங்கள் வெற்றி பெறும். எனவே விவசாயிகளிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்’’ என்று கூறினார்.






Read more »

வியாழன், பிப்ரவரி 09, 2012

என்.எல்.சி. நிறுவனம் ரூ.100 கோடியை தமிழக அரசிற்கு புயல் நிவாரணமாக தர வேண்டும்: ராமதாஸ்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/2c015e3b-18b3-4d67-a071-d3ad202fbaf1_S_secvpf.gif
 
கடலூர்:
 
      பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூரில் நேற்று  பேட்டி அளித்தார்.
 
         திரைப்பட வசனம் எழுதி, பேசி மக்களை மயக்கும் வாக்குறுதிகள் கொடுத்து திராவிட கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். மீண்டும் வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் அவர்கள் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.  
 
            பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆட்சியாளர்கள் வரிச்சலுகை, தடையில்லா மின்சாரம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். வேளாண்மை உற்பத்தியை பெருக்க ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம், மானிய விலையில் உரம் வழங்கினால் உழவர் வாழ்வு மறுமலர்ச்சி ஏற்படும். ஆனால் இதை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை.  
 
           இன்றைய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள். சங்க காலத்தில் இளைஞர்கள் போருக்கு சென்றார்கள். இப்போது இளைஞர்கள் பாருக்கு செல்கிறார்கள். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவர வலியுறுத்தி வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் மதுஒழிப்பு போராட்டம் நடைபெறும்.
 
        எத்தகைய போராட்டம் நடத்தப்படும் என்பதை பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி அறிவிப்போம். தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முழுமையான கல்வி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும். கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு செய்தால் தரமான வீடு கட்டித்தர முடியாது. எனவே ரூ.2 லட்சம் செலவில் ஒவ்வொரு வீட்டையும் கட்டித்தர வேண்டும்.  
 
          நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் சென்ற ஆண்டு ரூ.1,298 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஒருமாத லாபத்தொகையான ரூ.100 கோடியை தமிழக அரசிற்கு புயல் நிவாரணமாக என்.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

வியாழன், பிப்ரவரி 02, 2012

தானே புயலுக்கு பின் கடலூர் மாவட்டத்தில் பூத்துக் குலுங்கும் மாமரங்கள்


புயலுக்குப்பின் துளிர்விட்டு பூத்துக் குலுங்கும் மாமரம்.
கடலூர்:
 
        தானே புயல் புரட்டிப் போட்டதால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கடமை தவறாத மாமரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.  கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்களில், 625 ஏக்கரில் மாமரங்கள் இருந்தன.
 
          இதில் 300 ஏக்கர் மாமரங்கள் முழுவதும் புயலில் வேருடன் சாய்ந்து அழிந்த விட்டதாக வேளாண் துறை தெரிவிக்கிறது. ஏனைய 325 ஏக்கரில் உள்ள மாமரங்கள் பெரும்பாலானவை கிளைகள் ஒடிந்தும், இலைகள் முற்றிலும் உதிர்ந்தும், மீண்டும் தேருமா என்ற நிலையில் காணப்பட்டன.  கிளைகள் பலவும் முறிந்து காணப்பட்ட மா மரங்கள் பலவற்றில், அண்மையில் இலைகள் துளிர்விடத் தொடங்கியதைத் தொடர்ந்து, இப்போது பூக்களும் கொத்து கொத்தாக பூக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.  
 
இதுகுறித்து சங்கொலிக்குப்பம் விவசாயி ராமலிங்கம் கூறுகையில், 
 
          10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மாமரங்களில் பல மரங்கள், புயலில் சேதம் அடைந்து விட்டன. ஏராளமான மரங்கள் ஒடிந்தும், சிதைந்தும் பரிதாபமாகக் காணப் பட்டன. அவற்றில் சில மரங்கள் துளிர் விட்டு பூக்கவும் தொடங்கி இருக்கின்றன.  கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கணிசமான அளவுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வரும். பொதுவாக பிற மாவட்டங்களில் இருந்து மாம்பழம் வரத்து குறையும் தருவாயில், கடலூர் மாவட்ட மாம்பழங்கள் சந்தைக்கு வரும்.  எனவே கடலூர் மாவட்ட மாம்பழ விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் புயல் பாதிப்பால், மாம்பழ வருவாய் இனி கிடைக்குமா என்றே தெரியவில்லை என்றார்.
 
 இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 
 
         கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாத இறுதியில் மாமரங்கள் பூக்கத் தொடங்கும், மே மாதம் பழங்கள் விற்பனைக்கு வரும். புயலில் முறிந்து கிடந்த மாமரங்கள் பலவற்றில் துளிர் வந்து இருக்கிறது. பூக்கள் பூக்கவும் தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு உருவான புதுத் துளிரில் இருந்து வெளிவரும், பூக்களில் பிஞ்சு பிடிக்குமா என்பது சந்தேகமே. அடுத்த ஆண்டுதான் இவற்றில் பழங்களை எதிர்பார்க்க முடியும் என்றார்கள்.  முறிந்து கிடந்த மா மரங்கள் ஆனாலும் சீசன் வந்ததும், துளிர்விட்டு பூத்துக் குலுங்கி, தங்களது கடமையை தவறாமல் நிறைவேற்றி விட்டன. பூக்களை காய்களாக, கனிகளாக மாற்றும் அற்புதத்தை இயற்கைதான் நிகழ்த்த வேண்டும்.  படம்: வி.சிவபாலன்
 
 
 
 
 
 

Read more »

புதன், பிப்ரவரி 01, 2012

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதித்த கரும்பு, தென்னைக்கு பராமரிப்பு முறைகள்

புயலில் சேதம் அடைந்த தென்னையின் குருத்தில் மருந்து தெளித்து, மரத்தைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
கடலூர்: 

         புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.  ÷கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால் 1.5 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டன. உயிருடன் நிற்கும் தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கானவை, ஒருசில மட்டைகளுடன், மொட்டை மரங்களாகக் காட்சி அளிக்கின்றன. கரும்புப் பயிர்களும் பெருமளவில் சேதம் அடைந்து விட்டன.  ÷எனவே பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னை மரங்களைப் பராமரிக்கும் முறைகளை, வேளாண் பல்கலைக்கழகத்தின் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் நசீர் அகமது தெரிவித்தது: 

 கரும்பு  

            புயலில் பாதிக்கப்பட்டவை இளம் கரும்பாயின், இலைகள் கிழிந்த மற்றும் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி, மண் அணைக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன் பசஅம கரும்பு பூஸ்டர் என்ற ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த கலவையை, ஏக்கருக்கு 2, 3 மற்றும் 4 கிலோ என்ற அளவில், கரும்பு நட்ட 40, 60, மற்றும் 75-ம் நாள்களில் 15 நாள்கள் இடைவெளியில் இலைகளில் தெளிக்க  வேண்டும்.  ÷இதனால் சேதம் அடைந்த கரும்பு தெளிவடையும். நீர் மேலாண்மையைக் கண்காணிக்க வேண்டும்.  ÷4 முதல் 6 மாதக் கரும்பாயின், அவற்றை நிமிர்த்தி, சோலைகளை உரித்து விட்டம் கட்டிப் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட 6 முதல் 7 மாதக் கரும்பில் வேர்கள் இறங்காது இருந்தால், அவைகளை விதைக் கரும்பாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.  

       அக்கரும்புகளை பரு கரணைகளாக பாலித்தீன் பைகளில் முளைக்க வைத்து 30, 35 நாள்கள் வயது நாற்றுகளாக நடவு செய்யப் பயன்படுத்தலாம்.  ÷7 மாதங்களுக்கு மேற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு, ஒடிந்து, பருக்கள் முளைத்து மோசமாக இருந்தால், அறுவடை செய்து ஆலைகளுக்கு அனுப்பிவிட  வேண்டும்.  

தென்னை  

           புயலால் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தும், குருத்து ஒடிந்தும், மட்டைகள் ஒடிந்தும், குரும்பைகள், காய்கள் உதிர்ந்தும் காணப்படுகின்றன.  ÷குருத்தும், மட்டைகளும் ஒடிந்த தென்னை மரங்களைக் காப்பாற்ற, பழுத்து ஒடிந்த மட்டைகளை கூரிய கத்திக் கொண்டு சாய்வாகச் சீவி அகற்ற வேண்டும். ஒடிந்த நடுக் குருத்தைச் சுற்றியப் பகுதிகளை சுத்தம் செய்து, மட்டைகளை வெட்டிய பகுதிகளில் காப்பர் ஆக்ஸி குளோரைடு எனும் பூஞ்சாணக் கொல்லி (ஒரு பங்கு தண்ணீர் 2 பங்கு பைட்டோலான்) கலவையைப் பூசிவிட  வேண்டும்.  

            குருத்துப் பகுதியில் காயம்பட்ட இடத்தில் இதே பூஞ்சாணக் கொல்லியில் 2 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். இதனால் வெட்டுப் பகுதியிலும் குருத்துப் பகுதியிலும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.  பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களான ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் மற்றும் 3 கிலோ பொட்டாஷை 6 மாதங்களுக்கு ஒரு முறைப் பிரித்து இடவேண்டும்.  ஊட்டச்சத்துகள் மற்றும் பயிர் ஊக்கிகள் கலந்த பசஅம தென்னை டானிக்கை மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2 பாக்கெட் (200 மில்லி) என்ற அளவில், 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.  மேற்கண்ட பராமரிப்பு முறைகள் மூலம், புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னைப் பயிர்களின் மகசூல் திறனை அதிகரிக்கலாம். 














Read more »

Jayalalithaa defends relief work in the Thane cyclone-affected Cuddalore district

        Chief Minister Jayalalithaa on Tuesday strongly defended her government's relief work in the cyclone-affected Cuddalore district.

       Rebutting Deputy Leader of the Opposition Panruti S. Ramachandran's (Desiya Murpokku Dravida Kazhagam) observations that no work was carried out for two or three days after the cyclone struck, the Chief Minister said the district administration did whatever was possible immediately. Food packets and drinking water were distributed. Within 24 hours, trees that had fallen on roads were cleared. Gradually, the pace of work was speeded up. The affected people and those who had lost homes were put up at schools. It is wrong to say that they were not provided with food or financial assistance.

“If facts and figures are available, make your point, using them. Otherwise, it is easy to make sweeping remarks,” she said.

         Given the magnitude of the destruction in Cuddalore, Villupuram and Nagapattinam, any State government would have taken at least six or seven months to ensure the return of normality. “But, we have accomplished it within a month,” she said, amid thumping of desks.

        Talking of the damage suffered by the electricity network, she said that the entire supply system had been destroyed. “So far, we have not seen such destruction anywhere in Tamil Nadu. Even people residing there [in Cuddalore] thought it would take a minimum of four months. But, we have restored the supply in a month,” she said, explaining how the work was executed on a war footing. The government managed to provide Rs.300 crore to the Tamil Nadu Generation and Distribution Corporation. Before the Pongal festival, domestic electric supply was restored. Instructions were issued to cover all farm pumpsets by January 30, and this was also achieved.

       A former Chief Minister of the Puducherry had that said no such work, as done in the State, was happening in Puducherry. Ms. Jayalalithaa posed a challenge to the DMDK leader whether he could cite any State government that had functioned the way her regime had done under similar circumstances. Mr. Ramachandran himself had acknowledged that there was no support from the Centre. Using its finances, sources of finance and manpower, her government had done so much, for which it deserved commendation. There would be some lapses as the destruction was unprecedented. But, the execution of works was in progress. She would furnish all facts and figures in her reply on Saturday, Ms. Jayalalithaa said. Her government planned to provide a huge package of assistance, which would be beyond the expectations of all.

















Read more »

பிச்சாவரத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம்

கிள்ளை : 
 
         பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
 
          "தானே' புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள பிச்சாவரம், பெரியகாரைமேடு, கணக்கரப்பட்டு, கோவிலாம்பூண்டி, சிதம்பரநாதன்பேட்டை, மீதிக்குடி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பெரியகாரைமேடு, மீதிகுடி, சிதம்பர நாதன்பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிச் செயலர் பாண்டியன் 25 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். மேலும் நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தானே புயல் கூடுதல் நிவாரணம் வழங்ககோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

           தானே புயல் நிவாரணம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


இச்சந்திப்புக்குப் பின்னர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியது

            கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு கடுமையானது. மக்களின் வாழ்வாதாரமே வீழ்ச்சி அடைந்து விட்டது. பாதிப்புகளை சீரமைக்க நீண்ட காலத் திட்டம் தேவை என்று, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட முந்திரி போன்ற பயிர்களை மீண்டும் உருவாக்க 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே பாதிப்புகளுக்கு நிவாரணம் என்பதைவிட நஷ்டஈடு வழங்க வேண்டும்.

          தேசிய பேரிடர் நிதியில் இருந்து அதிக நிதி பெற்று, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். பயிர்ச் சேதங்களுக்கு நிலத்தின் பட்டாதாரர்கள் மட்டுமன்றி குத்தகை தாரர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரினேன் என்றார்.

Read more »

செவ்வாய், ஜனவரி 31, 2012

தானே புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

கடலூர்:
 
           புயலில் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார். 
 
            புயலினால் கடலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, தென்னை, மணிலா, உளுந்து, பருத்தி, எண்ணெய் பனை உள்ளிட்ட பயிர்கள் 92,627.33 ஹெக்டேர் பரப்பளவிலும், முந்திரி, பலா, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, பாக்கு, வாழை, மரவள்ளி, வெற்றிலை, மஞ்சள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் 38,155.58 ஹெக்டேர் பரப்பளவிலும் சேதமடைந்து உள்ளன.பயிர் பாதிப்புக்கான நிவாரணம் குறித்து புகார்கள் இருந்தால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் தெரிவிக்க, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
 
           கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள புகார் மையங்களை, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.  பயிர் சேதத்துக்கு நிவாரணம் கேட்டு மனு அளித்த விவசாயிகளிடம் ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.
 
           விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரூ. 120.16 கோடி நிதி ஒதுக்கி, நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் பெறப்பட்டு, அவற்றின் நகல்கள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 
 
            பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டு முழுத் தொகையும் ஒரே தவணையில் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை, வேறு எந்தக் கடனுக்கும் வரவு வைக்கப்படாமல், பிடித்தம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. 28.1.2012 வரை பயிர்ச்சேத நிவாரணமாக ரூ.107 கோடி வரை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. புகார் மையங்களில் அளிக்கப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, வேளாண்துறை, மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்டு நேரடி விசாரணை செய்யப்படும். தகுதியான மனுதாரர்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்குள் தீர்வு காணப்பட்டு நிவாரணத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார் ஆட்சியர். 
 
           சார் கிரண் குராலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிருந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோகன், வேளாண் அலுவலர் பூவராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/6b336bf3-14a2-4019-b1d1-f98709b361c9_S_secvpf.gif

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கை:

     கடலூர் மாவட்டத்தில் தானே புயல் காரணமாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஏற்பட்ட பாதிப்புக் குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரணத் தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

            தற்போது மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு தானே புயலால் சேதமடைந்த சவுக்கு மரங்களுக்கும் இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடார்ந்து அவர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை மூலம் தல ஆய்வு செய்து 50 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த சவுக்கு மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7500 வீதம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

           எனவே தானே புயலால் பாதிப்படைந்த சவுக்கு மரப்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அவர் தொரிவித்துள்ளார்.

Read more »

வெள்ளி, ஜனவரி 27, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரணம் வழங்கியதில் குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள்


பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
கடலூர்:

         கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலை 140 கி.மீ. வேகத்தில் வீசிய "தானே' புயல், கடலூர் மாவட்ட மக்களை, அவர்களின் வாழ்வாதாரங்களை, பொருளாதாரத்தை சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டது. ரூ.100 கோடி சேதம் என்று மாவட்ட நிர்வாகம் முதலில் அறிவித்தது.

           ஆய்வு நடத்தியபோது சேத மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இது அரசின் உத்தேசமான தகவல் என்றாலும் சேதமதிப்பு இன்னமும் அதிகம். மொத்தம் 4,05,889 வீடுகள் (40,064 வீடுகள் முழுமையாக, 3,65,825 பகுதியாக) சேதம் அடைந்ததாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சேதம் அடைந்த வீடுகளுக்கு திங்கள்கிழமை வரை ரூ.112.98 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது. 

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்கள்தான் புயலில் அதிகம் பாதிக்கப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் வட்ட வாரியாக பார்த்தால் கடலூரில் 1,07,301 வீடுகளுக்கும், பண்ருட்டியில் 1,04,771 வீடுகளுக்கும், சிதம்பரத்தில் மாவட்டத்திலேயே அதிகமாக 1,20,191 வீடுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணம் என்று முதலில் வெளியான அறிவிப்பு பின்னர், பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் என்று வெளியானது. 

            மொத்தம் உள்ள 7 வட்டங்களில் சுமார் 6 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள கடலூர் மாவட்டத்தில், மோசமாக பாதிக்கப்பட்ட 4 வட்டங்களில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் நகராட்சிப் பகுதியில் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை தரும் தகவலின்படி, மொத்த குடும்ப அட்டைகள் (போலிகள் உள்பட) 48,240. இதில் முதல் கட்டமாக 43,683 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் விடுபட்டவர்கள் 18 ஆயிரம் பேருக்கு (ரேஷன் அட்டை உள்ளவர்கள்) நிவாரணம் வழங்க 2-வது பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 6,454 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

            அப்படியெனில் நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்றும், இதுவரை நிவாரணம் பெற்றவர்கள் 49,683 என்றும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது. 48 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நகரில், சுமார் 50 ஆயிரம் பேருக்கு நிவாரணமா என்று கேட்டால், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது என்கிறார்கள். நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்று கணக்கிட்டால், சுமார் 19 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் புயல் நிவாரணம் கோரி தினமும் நடைபெறும் போராட்டங்களோ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.அரசுத் துறைகளிடையே முரண்பாடான புயல் நிவாரணப் பட்டியல்கள் உள்ளன. 

            நிவாரணம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் காரணமாகவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை. காரணம் புயலுக்கு அரசு வழங்கிய நிவாரணம் அரசியல் நிவாரணமாக மாறிவிட்டது என்பதே மக்களின் புகார். கிடைக்க வேண்டிய பலருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல கோடிகளை செலவிட்டவர்களுக்கோ, இந்த நிவாரண உதவி வழங்கும் பணி நல்ல வாய்ப்பாகி விட்டது என்கிறார்கள் பொதுமக்கள்.

            பல வார்டுகளில் ரூ.2,500-ஐ வாங்கிக் கொண்டு, ரூ.1500-ஐ மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த இடைத்தரகர்களும் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளித்ததுதான் புயல் நிவாரணப் பட்டியல். தாங்கள் அளிக்கும் பட்டியலுக்கு காசோலையில் கையொப்பமிடு என்று, தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

            இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அமைச்சர்களோ, எப்படியோ போங்கள் என்று வெறுத்து ஒதுங்கிக் கொண்டார்கள். இத்தகைய குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால்தான், அரசு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். 







Read more »

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயல் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தள்ளிவைப்பு



 
 
          "தானே' புயல் பாதிப்பு காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை 6 நாள்கள் தள்ளிவைத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
          இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 9.63 லட்சம் பேர் எழுத உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 26 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது
 
          பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 2 முதல் 20 வரை நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை முழுமையாகத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் செய்முறைத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று கடலூர் மாவட்டத்தில் மட்டும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 8 முதல் 25 வரை நடத்தலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
        புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதோடு, பள்ளிகளில் வகுப்பறைகளும் பாதிக்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் பாதிப்பு காரணமாக பள்ளிகள் ஜனவரி 19-ம் தேதிதான் திறக்கப்பட்டன.குடியிருப்புகள், பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
           ஆனாலும், மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் ஜனவரி 29-க்குள் சீரடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தொலைவில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அந்தப் பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். இருந்தாலும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கு மின் இணைப்பு அவசியம் என்பதால், அந்த மாவட்ட அதிகாரிகள் தேர்வைத் தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. முன்னெச்சரிக்கை அடிப்படையில் விடப்பட்ட இந்தக் கோரிக்கையை ஏற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்முறைத் தேர்வுகளை 6 நாள்கள் தள்ளிவைத்துள்ளது.
 
          செய்முறைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் மாவட்டத்தில் எழுத்துத் தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், ஜனவரி 26, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டதெருவிளக்குகள் ரூ.14 கோடியில் சீரமைப்பு

கடலூர்:
 
          கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, புயல் நிவாரணக் கண்காணிப்பு சிறப்பு அலுவலர் கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்
 
         .புயல் பாதித்த இடங்களில் மின் விநியோகம் சீரமைப்பு குறித்து, மின் வாரிய அதிகாரிகளுடன், அரசுச் செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.மின்வாரிய தலைமைப் பொறியாளர் அப்பாசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் புயல் பாதித்த திருக்கண்டேஸ்வரம் கிராமத்தில் ஆய்வு நடத்தினர். மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், விவசாயப் பணிகளைத் தொடங்கி விட்டதாக தெரிவித்தனர்.
 
பின்னர் அரசுச் செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கூறியது:
 
          கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க முதல்வர் ரூ. 14 கோடி ஒதுக்கி இருக்கிறார். இதன் மூலம் 53 ஆயிரம் குழல் விளக்குகள், 9 ஆயிரம் சோடியம் வேப்பர் விளக்குகள், 2300 சி.எஃப்.எல். விளக்குகள், 125 ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.இப்பணிகளில் ஊராட்சி நிர்வாகமும், மின் வாரியமும் இணைந்து ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாய மின்இணைப்புகள் 69,783-ல் சனிக்கிழமை வரை 35,343 இணைப்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.மீதமுள்ள மின் இணைப்புகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior