உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தேவநாதசாமி கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவநாதசாமி கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 20, 2011

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

நெல்லிக்குப்பம்:
 
          திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில்  உதவி ஆணையர் ஜெகநாதன், கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் வெங்கடேசன், கண்காணிப்பாளர் மாசிலாமணி, மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் உண்டியலை பிரித்து கொட்டினார்கள்.

           இந்த உண்டியலில் இருந்த பவுன், வெள்ளி, ரூபாய்நோட்டு, சில்லரை காசுகள், வெளிநட்டு கரன்சி என தனியாக பிரித்து எடுத்தனர். தங்கம் 95 கிராமும், வெள்ளி 43 கிராமும் காணிக்கை செலுத்தி இருந்தனர். ரூ.5 லட்சத்து 53 ஆயிரத்து 956, பக்தர்களின் காணிக்கை மூலம் கிடைத்தது. மேலும் வெளிநாட்டினர் இங்கிலாந்து கரன்சி நோட்டு 2-ம், மலேசியா கரன்சி 2-ம், சிங்கப்பூர் கரன்சி 1-ம் காணிக்கையாக செலுத்தி இருந்தார்கள். இந்த உண்டியல் எண்ணும் பணியில் சுமார் 40 பேர் ஈடுபட்டிருந்தனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்தது அதாவது 3 மணிநேரம் இப்பணி நடைபெற்றது
 
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, மே 07, 2010

தண்ணீர் பிரச்னை குறித்து தலைமை செயலர்கள் பேச்சு: எடியூரப்பா புது விளக்கம்

கடலூர் : 

             'தமிழகத்தினுடனான தண்ணீர் பிரச்னை குறித்து, தலைமைச் செயலர்கள் அளவிலான பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும்' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.

            'ஆந்திரா, தமிழகம் மாநிலங்களுடனான நீர் பங்கீட்டுப் பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும்' என, சில தினங்களுக்கு முன் கூறியவர், இப்போது தனது முடிவில், 'அந்தர்பல்டி' அடித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மற்றும் ஹயக்ரீவர் கோவில்களில், முதல்வர் எடியூரப்பா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில்  தரிசனம் முடிந்து கர்நாடகமுதல்வர் எடியூரப்பா கூறியதாவது: 

              கர்நாடகத்தில் பா.ஜ., அரசு 2ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து மக்களுக்கு சிறப்பான சேவை செய்வதற்காக சாமி தரிசனம் செய்ய வந்தேன். வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், கர்நாடகாவில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. ஐ.டி., பி.டி., எலக்ட்ரிசிட்டி, சுற்றுலா துறைகளில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சார்பில், 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை எதிர்பார்க்கிறோம். இந்த நோக்கமும் சிறப் பாக அமைய வேண்டும் என் பதே பயணத் தின் நோக்கம்.

            திருவள்ளுவர் மற்றும் சர்வக்ஞர் சிலைகள் திறப்பு விழாவிற்கு பின், தமிழகத்தினுடனான உறவு சுமுகமாக உள்ளது. தமிழகத்துடனான தண்ணீர் பிரச்னை குறித்து, தலைமைச் செயலர்கள் அளவிலான பேச்சு வார்த்தை நடத் தப்பட்டு தீர்வு காணப்படும். ஹாலப்பா மீதான பிரச்னை குறித்து சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.

                கடந்த சில தினங்களுக்கு முன், 'கர்நாடகத்திற்கும், தமிழகம், ஆந்திரா மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும்' என்று கூறியவர், இப்போது, 'அந்தர்பல்டி' அடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவந்திபுரம் கோவிலில் தரிசனம் : 

                 கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை புதுச்சேரி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலுக்கு காலை 9.02 மணிக்கு வந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர். ஹவுசதகிரியில் உள்ள லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலுக்குச் சென்றார்.

               முதல்வர் எடியூரப்பா வருவதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவே, திருவந்திபுரம் பஸ் நிறுத்தத்திலிருந்து வெளியாட்கள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக திருவந்திபுரத்தில் உள்ள கடைகள், எடியூரப்பா அங்கிருந்து கிளம்பும் வரை திறக்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் சென்ற பின், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பொது அறிவிற்கு:
    ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள் - குளோரோ புளூரோ கார்பன்

Read more »

வியாழன், மே 06, 2010

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று திருவந்திபுரம் வருகை

General India news in detail

கடலூர் : 

              கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருடன் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை 9 மணிக்கு வருகிறார். இதற்காக அவர் காலை 7 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாக திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி., மகேஷ்வரன், கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், நரசிம்ம பட்டாச்சாரியாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வெங்கடகிருஷ்ண பட்டாச்சாரியார், இன்ஸ்பெக்டர்கள் சுந்தர வடிவேலு, சுரேஷ் கண்ணன் (தனிப்பிரிவு), சப்-இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவேல், ஆனந்தபாபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவக்கம் : ஹயக்கிரீவர் கோவிலில் சிறப்பு பூஜை

கடலூர் : 

             பிளஸ் 2 தேர்வு இன்று துவங்குவதையொட்டி திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் நுழைவுச்சீட்டு மற்றும் பேனா வைத்து வழிபட்டனர்.
 
                   திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் எதிரில் மலை மீது உள்ள ஹயக்கிரீவரை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். இன்று துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி நேற்று திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி, தேன் மற்றும் கற்கண்டு கொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.  பலர் தங்களது தேர்வு அறை நுழைவுச் சீட்டு, தேர்வு எழுதுவதற் காக வாங்கிய புதிய பேனாக்களை வைத்து பூஜை செய்தனர். சிலர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி கோவில் வளாகத்தில் தங்களது தேர்வு எண்களை எழுதி வைத்தனர். இதன் காரணமாக நேற்று காலை திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior