உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தொழில் வளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில் வளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 28, 2011

கடலூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்கள்: சுய தொழில் தொடங்க கலெக்டர் அழைப்பு

கடலூர்:

         படித்து வேலை தேடும் இளைஞர்கள் கடன் பெற்று சுயமாக தொழில் தொடங்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

           படித்து வேலைதேடும் இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்பினை பெறும் வகையில் தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டு தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த பட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

          குடும்ப ஆண்டு வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு 5 லட்ச ரூபாயும், சேவை தொடர்பான தொழில்களுக்கு 3 லட்ச ரூபாயும், வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு ஒரு லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படுகிறது.இதில் திட்ட அறிக்கையில் 10 சதவீதம் தொகையினை பொதுப் பிரிவினர் விளிம்புத் தொகையாக செலுத்த வேண்டும். 

            திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.விண்ணப்பம் மாவட்ட தொழில் மையம் மூலம் பெற்று பூர்த்தி செய்து இரட்டை நகலில் திட்ட அறிக்கை, கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். படித்த வேலைதேடும் இளைஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.

Read more »

சனி, பிப்ரவரி 20, 2010

ஏஜன்டுகளால் ஏமாற்றப்படும் ஏழை விவசாயிகள் நடவடிக்கை எடுக்க நல்லகண்ணு வேண்டுகோள்

கடலூர் : 

                           கடலூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக விவசாயிகள் முன்வந்து நிலத்தை கொடுத்தாலும் ஏஜன்டுகள் விலையில் பாரபட்சம் காட்டி   வருகின்றனர் என இந்திய கம்யூ.,கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு பேசினார். கடலூர் அடுத்த புதுச்சத்திரம், சாமியார் பேட்டை பகுதியில் கப்பல் கம்பெனி, பவர் கார்ப்பரேஷன் கம்பெனிகளுக்காக  நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி ஏமாற்றப் படுவதை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உண் ணாவிரதம் இருந்தனர்.ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார், ராமலிங்கம், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சேகர், செயலாளர் சுப்ரமணியன், ஏஐடியுசி., மாவட்ட செயலாளர் சேகர், இந்திய.கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம் பங்கேற்று பேசினர்.

முன்னதாக இந்திய கம்யூ., மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு  உண்ணா விரதத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

                        பரங்கிப்பேட்டை பகுதியில் பவர் கம்பெனி, கப்பல் கம்பெனிக்காக நிலம் ஆர்ஜிதம் செய்து வருகின்றனர். அந்த பகுதி விவசாயிகளும் தொழில் வளர்ச்சியை கருதி, நிலத்தை கொடுப்பதற்கு முன் வந்தனர். ஒரு கம்பெனி நேரடியாக நிலத்தை வாங்காமல், ஏஜன்டுகள் மூலம் நிலத்தை வாங்குகிறது. இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் மோசடி நடக்கிறது. ஒரே சர்வே எண் உள்ள இடத்திற்கு அண்ணனுக்கு ஏக்கர் 4 லட்சம் ரூபாய் எனவும், தம்பிக்கு 8 லட்சமும், தங்கைக்கு 13 லட்சமும் கொடுத்து வாங்குகின்றனர். ஏன் இந்த வித்தியாசம். இதனால் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர்.  ஏஜன்டுகள் நிலம் வாங்க யார் அதிகாரம் கொடுத்து. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைந்து போராட் டம் நடத்தப்படும்.மேலும் இந்த பிரச்னையை இந்திய.கம்யூ., கட்சி சட்டமன்றத்திலும் எழுப்பவுள்ளது எனப் பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior