உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நமக்கு நாமே திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நமக்கு நாமே திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

கடலூர் மாவட்டத்திற்கு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.221 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:

           நமக்கு நாமே திட்டத்தில் கடலூர் மாவட்டத்திற்கு 221 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடலூர் மாவட் டத்திற்கு 2010-11ம் ஆண்டிற்கு தமிழக அரசால் 221.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் பள்ளிகளுக்கான கட்டடங்கள் சுற்றுச்சுவர் உட்பட ஆய்வகங்கள், பள்ளிகளுக்கான கழிவறைகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங் கள், கால்நடை மருந்தகங்கள், நூலகங்கள், மதிய சத்துணவு கூடங்கள், அரசு நியாய விலைக் கடைகள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் குடிநீர் ஆதாரங் கள் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பாலங்கள், சிறுபாலங்கள், சாலைகள், தரம் உயர்த்துதல், தெருக்கள் மற்றும் சிறிய சந்துக்கள் சிமென்ட் சாலையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகள் எடுத்து செய்யலாம்.

               இத்திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்ய தனிநபர், குழு, நிறுவனங்கள், கம்பெனிகள், தொண்டுள்ளம் கொண்ட யார் வேண்டுமானாலும் பணியின் மதிப்பீட்டு தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு தொகையை கேட்பு காசோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 50 சதவீதத்திற்கு மேல் பங்களிப்புத் தொகை செலுத்துவோர் டெண்டர் இல்லாமல் அப்பணியை அவரே எடுத்து செய்யலாம். இத்திட்டம் கிராமம், நகரம், பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரையோ, நகராட்சி ஆணையரையோ அல்லது பேரூராட்சி அதிகாரியையோ அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

புதன், பிப்ரவரி 17, 2010

நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி மங்களூர் ஆணையர் தகவல்

சிறுபாக்கம் : 

               மங்களூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்து மங்களூர் ஒன்றிய ஆணையர் ஜெகநாதன் கூறியதாவது: 

                   மங்களூர் ஒன்றியத்தை சேர்ந்த 66 ஊராட்சிகள், 30 துணை கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின் றன. நடப்பு ஆண்டிற்கு நமக்கு நாமே திட்டத்திற் காக 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒரு மடங்கு மக்கள் தொகை பங்களிப்புடன் பள்ளி சுற்றுச்சுவர், சிமென்ட் சாலை, ரேஷன் கடை கட்டடம், அங்கன் வாடி மையம் ஆகியவை கட்டப்படும். நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் மூலம் குளங்கள் ஆழப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட  உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பணியை முடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது கூடுதல் ஆணையர் புஷ்பராஜ், பொறியாளர் மணிவேல் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior