உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நரேஷ் குப்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரேஷ் குப்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 14, 2011

இந்தியா ஊழல் பாதையில் செல்கிறது : நரேஷ் குப்தா வேதனை




பண்ருட்டி : 

        "நேர்மையானவர்கள் பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார்.

              கடலூர் மாவட்ட யூத் எக்ஸ்னோரா கிளப் சார்பில், "தூய்மை மற்றும் நேர்மையான தேர்தல் 2011' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம், பண்ருட்டியில் நேற்று நடந்தது.

விழாவில், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசியது: 

              இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். நேர்மையானவர்கள், பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். மக்கள் சேவை செய்வதற்காகத் தான் அதிகாரிகள் உள்ளனர். அரசு பணியில் லஞ்சம் பெற்றால் தான் பணிகள் நடைபெறும் என்னும் நிலை உள்ளது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் அறிவியல் விஞ்ஞானிகள், தொலைத்தொடர்பு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள் அறவே இல்லை. ஆனால், தற்போது அனைத்து வசதிகளும் பெற்றாலும் ஊழல் பாதையில் செல்வது தவறு. இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு நரேஷ் குப்தா பேசினார்.

Read more »

வெள்ளி, ஜூலை 30, 2010

நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வு



             தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.  வேளாண் துறைச் செயலாளர் நந்த கிஷோர், மத்திய அரசுப் பணியில் உள்ள சாந்தா ஷீலா நாயர், தொழில் மற்றும் வர்த்தத் துறை ஆணையர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் ஓய்வு பெறவுள்ள மற்ற அதிகாரிகளாவர்.
 
தேர்தல் அதிகாரி: 
 
               ஓய்வு பெறும் அதிகாரிகளில் நரேஷ் குப்தா குறிப்பிடத்தக்கவர். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். அவரது பணிக் காலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். முதல்வர் உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனக் கணைகளுக்கு ஆளானாலும் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வந்தவர். 
 
தேர்தலில் புதிய யுக்திகள்: 
 
                      வாக்குப் பதிவின் போது பல்வேறு புதிய யுக்திகளை தமிழகத்தில் புகுத்தியவர் நரேஷ் குப்தா.  வாக்குப் பதிவின் போது நடைபெறும் நிகழ்வுகளை வெப்கேமராவில் படம் பிடிப்பது, வாக்காளிக்க வருவோரை படமெடுத்து அதை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப்பதிவு நிலவரங்களை வாக்குச் சாவடி அதிகாரிகள் மணிக்கு ஒருமுறை தெரிவிக்கச் செய்வது போன்

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior