உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 29, 2010

கடலூரில் இன்று சமையல் எரிவாயு குறைகேட்பு கூட்டம்

கடலூர்:

              கடலூர் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம்  சனிக்கிழமை கடலூரில் நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும். சமையல் எரிவாயு நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவது தொடர்பாக தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

புதன், மே 05, 2010

மே 11-ல் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

 சிதம்பரம்:

                 சிதம்பரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை கடலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மே மாதம் நடைபெறவுள்ள பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வானாமாதேவி பிரிவு அலுவலகத்தில் வருகிற மே 11-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.எனவே சிதம்பரம் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என செயற்பொறியாளர் இரா.செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது: மாவட்ட வழங்கல் அலுவலர் உறுதி

 திட்டக்குடி : 

                   மாவட்டம் முழுவதும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். 

இது குறித்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் அவர்  கூறுகையில் '

                  கடலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு தாலுகாவாக 'காஸ்' பயன்படுத்தும் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. டி.ஆர்.ஓ., தலைமையில் பண்ருட்டி, விருத்தாசலம் தாலுகாவில் முடிந்துள்ளது. போலி ரேஷன் கார்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு சம்பந்தமான மேல் முறையீட்டு மனுக்கள் இரண்டு கட்டமாக முடிந்துள்ளது. மாவட்டம் முழுவதும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தல் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பந்தமான புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior