உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நெடுஞ்சாலை துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெடுஞ்சாலை துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 15, 2010

கடலூர் மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க ரூ.17.67 கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் :

             மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க முதல் கட்டமாக 17.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் உயிரிழந்த 18 பேரில் இதுவரை 7 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய்  நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 176 ஆடுகளும், 86 மாடுகளும், 54 கன்றுகள் என 315 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை 49 மாடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதமும், 49 கன்றுகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதமும், 126 ஆடுகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதமும்  நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

              மழை வெள்ளத்தால் 1,162 குடிசைகள் முழுமையாகவும், 14 ஆயிரத்து 595 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.  இதுவரை முழுமையாக சேதமடைந்த 914 குடிசைகளுக்கு 5,000 ரூபாய் வீதம் 45.70 லட்சமும், பகுதியாக சேதமடைந்த 1,264 குடிசைகளுக்கு தலா 2,500 ரூபாய் வீதம் 31.60 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் 14 கி.மீ., சாலை சீரமைப்புக்கு 70 லட்ச ரூபாயும், சிதம்பரம் நகராட்சியில் 8 கி.மீ., தூர சாலை சீரமைக்க 40 லட்ச ரூபாயும், விருத்தாசலம் நகராட்சியில் 5 கி.மீ., சாலை சீரமைக்க 25 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 

                    மேலும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள், உடைப்புகள், ஏரிகள் ஆகியவற்றை தற்காலிகமாக சீரமைக்க 4.32 கோடி ரூபாய் முதல் கட்டமாக பெறப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

திருக்குறளை இப்படியும் கொல்லலாமா?


தவறாகவும், குறள் வெண்பா முறையை மீறியும் எழுதப்பட்டுள்ள திருக்குறள் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது).
 
விருத்தாசலம்:

          விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக மதில் சுவரில் குறள் வெண்பா முறையை மீறியும், தவறாகவும் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. இதை நெடுஞ்சாலைத்துறை கவனித்து திருத்திக்கொள்ள வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

            தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையின் அழகைக் கூட்டும் வகையில் அந்தந்த நகரங்களின் சிறப்புகளை விளக்கக்கூடிய ஓவியங்களையும், திருக்குறள் மற்றும் உலக அறிஞர்களின் பொன்மொழிகளையும் எழுதி வருகின்றனர். பெரும்பாலான நகரங்களில் இந்த பணி நிறைவு பெற்றுள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

            இதேபோல் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு சொந்தமான மதில் சுவரில் திருக்குறளை எழுதியுள்ளனர்.÷இதில் சில குறள்கள் தவறாகவும், குறள்வெண்பா முறைக்கு மாறாகவும் எழுதப்பட்டுள்ளன. மேல் வரியில் நான்கு சீரும், கீழ் வரியில் 3 சீரும் என்ற முறையில் திருக்குறள் அமைக்கப்பட்டுள்ளது. 

            ஆனால் விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் எழுதப்பட்டுள்ள திருக்குறளானது மேல் மற்றும் கீழ் வரிகளில் 3 சீர்களாக எழுதியுள்ளனர். அதேபோல் மேல்வரியில் 4 சீரும் கீழ்வரியில் 4 சீர்களில் குறள் முடிவது போன்றும் எழுதியுள்ளனர். மேலும் திருக்குறளில் முதல் அடி தொடங்குவதற்கு நேராகவே இரண்டாவது அடியும் தொடங்கும். இந்த அமைப்பு முறையையும் மாற்றி எழுதியுள்ளனர்.

                மக்கள் கூடும் இடங்களில் திருக்குறள் உள்ளிட்ட உலக அறிஞர்களின் பொன்மொழிகளை எழுதிவைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதுபோன்று தவறாக எழுதப்படுவதை அதிகாரிகள் கவனித்து அவற்றை உடனடியாக திருத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்களில் உள்ள தவறுகளை திருத்த நெடுஞ்சாலைத்துறை முன்வருமா?

Read more »

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

குறுகிய பாலங்களால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதை! கண்டு கொள்வார்களா? நெடுஞ்சாலைத்துறையினர்


சிதம்பரம்  :  

                  சிதம்பரம் - சீர்காழி மெயின் ரோட்டில் பாலம் குறுகியதாகவும்,  உடைந்த ஆபத்தான நிலையில் இருப்பதாலும் விபத்துக்கள் நடப்பதும், போக்குவரத்து மணிக்கணக்கில் ஸ்தம்பிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

                     சிதம்பரம் - சீர்காழி சாலை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் மிக முக்கிய சாலையாக உள்ளது. ஆனால் இச்சாலை ஆங்காங்கே வளைவுகள், இடையிடையே குறுகலான பாலங்கள் என போக் குவரத்திற்கு இடையூறாக ள் ளது. அதிவிரைவு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டும் குறிப் பிட்ட வேகத்திற்கு மேல் செல்ல முடிவதில்லை. உதாரணமாக சிதம்பரம் மெயின் ரோட்டில் எம்.கே., தோட்டம் அருகே மழை நீர் வடிகால் பாலம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் இப்பாலம் வழியாக ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். சில நேரங்களில் ஒரே நேரத்தில் போட்டி, போட்டுக் கொண்டு பாலத்தில் வானகங்கள் செல்வதால் பாலத்தின் நடுவே சிக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம் பித்து விடுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது பாலத்தில் விபத் துகளில் சிக்குகின்றனர். ஒவ் வொரு நாளும் அப்பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகளை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.        
                  இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பாலத்தில் மோதி பக்கவாட்டு தடுப்புக் கட்டைகளை உடைத்து விடுகின்றனர். அடிக்கடி பக்கவாட்டு சுவர் இடிந்து விடுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. பாலத்தை அகலப்படுத்தி கட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு பல் வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அடிக்கடி பக்கவாட்டு சுவரை மட்டும் கட்டி வருவதையே வேலையாக கொண்டுள்ளனர். மேலும், அதே சாலையில் அம் மாபேட்டை வளைவில் உள்ள பாசன வாய்க்கால் பாலம் உடைந்து எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்ற ஆபத் தான நிலை உள்ளது. ஆபத்தான வளைவில் அமைந்துள்ள இப்பாலத்தில் அடிக்கடி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதும், இரவு நேரங்களில் பாலத்தை உடைத்துக்கொண்டு வாய்க்காலில் வாகனங்கள் கவிழ்ந்து விடுவதும் வாடிக்கையாகி விட்டது. 
                   கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சிலிண்டருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு தலைக் குப்புற கவிழ்ந்தது. இந்த பாலத் தில் விபத்து ஏற்பட்டால் சிதம்பரம்- சீர்காழி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும்  வாகனங்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையும், அல்லது சேத்தியாத்தோப்பு வழியாக போக்குவரத்தை திருப்பி விடப்படும் நிலையும் ஏற்படுகிறது. இந்த இரு பாலங்களையும் இதுவரை சீர் செய்யவோ, மாற்று ஏற்பாடுகள் செய்யவோ நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. புறவழிச்சாலை பணியை காரணம் காட்டி வருகின்றனர். புறவழிச்சாலை வந்தாலும்கூட அப்பகுதி கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளுக்கு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் இந்த இரு பாலங்களுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

downlaod this page as pdf

Read more »

வெள்ளி, மார்ச் 19, 2010

கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடலூர்: 

                கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து  முதுநகர் மணிக்கூண்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் கடலூர் முதுநகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன்பும், நடைபாதை பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

               இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை பொறியாளர்கள் மற்றும் கடலூர் தாசில்தார் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் ஜெய் சங்கர், முருகன், நகராட்சி ஊழியர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக் கூண்டிலிருந்து கடலூர் முதுநகர் வரையுள்ள  நெடுஞ்சாலையின் இருபுறமும்  இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடைகாரர்கள் தாமாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது! ஆக்கிரமிப்புகள் அகற்றியும் பயனில்லை

விருத்தாசலம் : 

                  விருத்தாசலத்தில் பெருகி வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இடிக்கப்பட்ட சிமென்ட் கட்டைகளை அகற்றாமல் சாலையிலேயே குவித்து வைத்திருப்பதால் போக் குவரத்து நெரிசல் நீடித்து வருவதோடு, மீண்டும் சாலைகள் மெல்ல, மெல்ல ஆக்கிரமிக்கப் பட்டு வருகிறது.
 
                     விருத்தாசலம் நகரின் முக்கிய வீதிகளான ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு, கடைவீதிகளில் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் உள்ளன. நகரம் மற்றும் சுற்றியுள்ள 100 ம் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் விருத்தாசலத்திற்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட் களை வாங்கி சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த சாலைகளில் மக்கள் கூட் டம் நிறைந்தே காணப்படும்.
 
                 இப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரிகள் பொதுமக்கள் நிழலில் நின்று பொருட்கள் வாங்குவதற்காக கடைகளின் முன் முதலில் "ஷெட்' அமைத் தும், பின்னர் சிமன்ட் தளம் அமைத்தும் சாலையை ஆக்கிரமித் தனர். கடைகளில் பொருள் வாங்க வருபவர்கள் தங் களது வாகனங்களை அந் தந்த கடைகளின் முன் நிறுத்திவிடுகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத் திவிட்டு செல்வதால் சாலை குறுகலாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.  போக்குவரத்து பாதிப்பை சரி செய்திட பிரதான சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் வியாபாரிகள் ஆக்கிரமிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் நகர மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனர்.
 
              அதன்படி இரண்டு வாரங்களுக்கு முன் நகராட்சி ஒத்துழைப்புடன் நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர்.  கடைவீதியில் துவங்கி ஜங்ஷன்ரோடு, கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஆறு நாட்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு அமைத்திருந்த ஷெட் களை பெரும்பாலான வியாபாரிகள் அவர் களாகவே கழற்றி கொண்ட நிலையில், அவர்கள் அமைத்திருந்த சிமென்ட் கட்டைகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்து தள்ளினர்.
 
               அவ்வாறு இடித்து தள்ளிய சிமென்ட் கட்டைகளை உடனடியாக அகற்றாமல், தங்கள் வேலை முடிந்தது என நெடுஞ்சாலை துறையினர் சென்றுவிட்டனர்.  நகராட்சியினரும் இது தங்கள் வேலை இல்லை என ஒதுங்கி கொண்டனர். பெரும்பாலான இடங்களில் இடிக் கப்பட்ட சிமென்ட் கட்டைகள், தோண்டப்பட்ட மண் சாலை ஓரத்தில் அப்படியே கிடக்கிறது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
 
                இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரு வாரத்திலேயே சில வியாபாரிகள் தற்போது மீண் டும் தங்கள் கடைகளுக்கு முன் தற்காலிக ஷெட் அமைக்க துவங்கி விட்டனர். அங்கொன்றும் இங் கொன்றுமாய் தொடங்கி அனைத்து வியாபாரிகளும் விரைவில் தங்கள் கடைகளின் முன்பு தற்காலிகமாக தார்பாய் கொண்டு கொட்டகை  அமைத்து வருகின் றனர்.  சில மாதங்களில் அதை நிரந்தர ஷெட்டாக அமைத்து மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்து விடுவர்.  எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்பு பணியை சம்பிரதாய நடவடிக்கையாக மேற்கொள்ளாமல்  நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும்.
 
                    சாலையின் இருபுறங்களிலும் எல்லையை குறிப்பிட்டு வியாபாரிகள் எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் ஆக்கிரமிக்காதவாறும், பொதுமக்கள் பயனடையும் வகையிலும் சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் அமைக்க முன்வர வேண்டும்.  அதுபோல் சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலையின் ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior