உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பத்திரப் பதிவுத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரப் பதிவுத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 09, 2010

சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் வங்கி டி.டி., வாங்க மறுப்பு

சேத்தியாத்தோப்பு: 

            சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் சேத்தியாத்தோப்பில் உள்ள வங்கிகளின் டி.டி.,யை (வரைவோலை) பெற மறுப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

            தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பண பரிமாற்றம் மூலம் லஞ்சம் அதிகரித்ததால், அதைக் கட்டுப்படுத்த பத்திரப் பதிவிற்கான பதிவு கட்டணத்தை, வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்திரப் பதிவு செய்ய நிலம் மற்றும் மனைகளின் மதிப்பிற்கு ஏற்ப பதிவு தொகைக்கான பணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக பெற்று, அதை, சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள், சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பின்பற்றப்படவில்லை. சேத்தியாத்தோப்பில் இந்தியன் வங்கி, பல்லவன் கிராம வங்கி, கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய மூன்று வங்கிகள் உள்ளன. 

            சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடியில் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை உள்ளது. இந்த வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் வாங்க மறுக்கின்றனர். மாறாக ஸ்டேட் வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை மட்டுமே பெற்றுக் கொள்வோம் என திட்டவட்டமாக கூறுகின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை எடுத்தால் என்ன தவறு என விளக்கம் கேட்பவர்களிடம் உங்களது பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஐந்து மாதம் கழித்து தான் கிடைக்கும் என கூறி விடுகின்றனர். 

                இதனால் சேத்தியாத்தோப்பில் பத்திரப் பதிவு செய்ய வருபவர்கள் அருகில் உள்ள பின்னலூர் ஸ்டேட் வங்கி கிளைக்குச் சென்று வரைவோலை பெற வேண்டிய நிலை உள்ளது. வரைவோலை பெற சேத்தியாத்தோப்பில் மூன்று வங்கிகள் இருந்தும் கடும் அலைச்சலுக்கும் அவதிக்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே, சேத்தியாத்தோப்பில் உள்ள வங்கிகளில் எடுக்கப்படும் வரைவோலைகளை சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள தக்க ஏற்பாடுகளை பதிவுத்துறை செய்ய வேண்டும்.

Read more »

வெள்ளி, ஜூலை 30, 2010

வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு


சென்னை மயிலாப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கான புதிய முறையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ராஜன்
 
                 வெப் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு செய்யும் புதிய முறை, சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
              இதை, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 574 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களை கணினிமயமாக்கும் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துகளின் பரிமாற்ற விவரங்களுக்கு எந்தவொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் வில்லங்கச் சான்று பெற்றுக் கொள்ள முடியும். வெப் கேமரா மற்றும் பயோ மெட்ரிக்: பத்திரப்பதிவில் முதன்முறையாக வெப் கேமரா,  மின்னணு ரேகைப் பதிவு (பயோமெட்ரிக்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 250 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. புதிய திட்டத்தின் தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை அமைச்சர் சுரேஷ் ராஜன் தொடங்கி வைத்தார்.
 
சிறப்பு அம்சங்கள்: 
 
            புகைப்படம், கைரேகைகள் மின்னணு கருவிகள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், ஆவணப் பதிவின் போதுள்ள விண்ணப்பதாரர்களின் தெளிவான படங்கள் ஆதாரமாக சேகரிக்கப்படுகிறது.  ஆவணப்பதிவின்போதே மின்னணு கருவிகளால் புகைப்படம், கைரேகைகள் பதிவு செய்யப்படுவதால் மனிதத் தவறுகள் தடுக்கப்படும். போலி ஆவணப்பதிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளும் குறைக்கப்படும்.  மின்னணு முறையில் கைரேகைப் பதிவுகள் சேமிக்கப்படுவதால் இதனை தடவியல் போன்ற பிற துறைகளுக்கு எளிதில் அனுப்பி ஒப்பீடு செய்து சரிபார்க்கலாம்.  
 
                புகைப்படம் மற்றும் கைரேகைப் பதிவுகள் மின்னணு முறையில் சேகரிக்கப்படுவதால் அதன் தரம் குறையாமல் திரும்பப் பெற்று சரிபார்க்கவும், தேவை ஏற்படின் சட்டத்துக்கு உட்பட்டு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவும் வழி ஏற்படும்.  ஒரு நபர் பல ஆவணங்களைத் தாக்கல் செய்யும் அல்லது எழுதிக் கொடுக்கும் சமயங்களில் ஒவ்வொரு ஆவணத்துக்கும் புகைப்படம் எடுத்து ஒட்டும் இப்போதைய நடைமுறைக்குப் மாற்று ஏற்படாக புதிய முறை செயல்படுத்தப்படும். மேலும், மக்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கான செலவு மற்றும் கால விரயம் குறையும்.

Read more »

திங்கள், ஜூலை 19, 2010

ஆள் பற்றாக்குறையால் அவதியுறும் கடலூர் மாவட்டப் பதிவுத்துறை

கடலூர்:

             மக்கள் பயன்பாடும், பணப்புழக்கமும் நிறைந்த, தமிழகப் பத்திரப் பதிவுத்துறை, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித் தருகிறது.

            இத் துறையில், ஒரு ஐ.ஜி., 4 கூடுதல் ஐ.ஜி., 10 டி.ஐ.ஜி., 19 ஏ.ஐ.ஜி., பதவிகள், 30 துணைப் பதிவாளர், 700 சார் பதிவாளர், 1400 உதவியாளர், 900 இளநிலை உதவியாளர், 600 இரவுக் காவலர்கள் பணியிடங்கள் உள்ளன. துணைப் பதிவாளருக்குக் கீழ் உள்ள பதவிகளில் 40 சதவீதம் பணியிடங்கள் (1300 பதவிகள்) நீண்ட காலமாகக் காலியாக இருப்பதாக அரசு அலுவலர் ஒன்றியம் தெரிவிக்கிறது. ஓய்வு பெறும் அலுவலர்களுக்குப் பதில் புதிய அலுவலர்கள், உடனடியாக நியமனம் செய்யப்படுவதில்லையாம். பணிச்சுமை தவறுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் 10 பேர் ஓய்வு பெற்றால் 9 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளதாம்.

             அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் தினக் கூலிகளாக, அவ்வப்போது நியமிக்கப்படும் இரண்டு, மூன்று நபர்களால்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறதாம். பத்திரப் பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவற்றை இயக்குவற்கு நிரந்தர ஊழியர்கள் இல்லை. அலுவலர்களுக்குப் கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தினக் கூலியாக ரூ. 100 ஊதியம் பெற்றுக் கொண்டு பணியாற்றும், வெளியாள்கள்தான் கணினிகளை இயக்குகிறார்கள். அவர்கள் இளநிலை உதவியாளர் பணிகளையும் செய்கிறார்கள். ஒவ்வொரு பத்திரப் பதிவுக்கும் கணினிக் கட்டணம் என்று தலா ரூ. 100 வசூலிக்கிறார்கள்.

            தினக்கூலி ஊழியர்கள் பொறுப்பின்றிச் செயல்படுவதால், ஏராளமான பிழைகள் ஏற்படுகிறதாம். அன்றாடம் பதிவாகும் பத்திரங்கள் கணினியில், அன்றைய தினமே பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் இதில் ஏற்படும் தாமதம் காரணமாக, சொத்து வாங்கியவர்களுக்குப் பத்திரம் கிடைக்க 15 நாள்கள் வரை ஆகிறதாம். கணினியில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் காரணமாக, பத்திரத்தில் சில பக்கங்களே சில நேரங்களல் காணாமல் போய்விடுகிறதாம். பின்னாளில் பத்திர நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதுதான், இத்தகைய பிழையைக் கண்டுபிடிக்க முடிகிறது என்கிறார்கள், பத்திரப் பதிவுத் துறையுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். பத்திரப் பதிவு அலுவலகங்கள் பலவற்றில் சார்பதிவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தலைமை எழுத்தர்கள்தான் பத்திரப் பதிவுப் பணிகளைச் செய்கிறார்கள். 

            கட்டடங்களைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதிலும் காலதாமதமும், தவறுகளும் ஏற்படுகின்றனவாம். சொத்தின் மதிப்பை நிலங்களின் சர்வே எண்கள் அடிப்படையில், அரசு வழிகாட்டுதல் விலை மதிப்பின் படிதான் நிர்ணயிக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால் நகர்களில் உள்ள பிளாட்டுகளின் உச்ச மதிப்பு அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும், அது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது. இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டுதல் மதிப்பை சார்பதிவாளர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. வில்லங்கச் சான்றுக்கு விண்ணப்பித்தால் அன்றே வழங்கப்படும் என்று கூறுவதும், வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. மிக அவசரம் என்று கூடுதல் கட்டணத்துடன், கொடுத்தால்கூட மறுநாள்தான் கிடைக்கும் என்கிறார்கள். பத்திரப் பதிவுக் கட்டணத்தை வரைவோலை மூலம் செலுத்தும் முறை, துறைத் தலைவரின் உத்தரவின் பேரில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் வரைவோலை பெறுவதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைத் தேடி அலைய வேண்டியது உள்ளது. கிராமத்தில் இருந்து வருவோர், பிற்பகலில் பத்திரப்பதிவுக்கு வருவோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இது குறித்து மாவட்டப் பதிவாளர் வேலாயுதம்  கூறியது

            "பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மைதான். சொத்து மதிப்பை நகர்களில் உள்ள பிளாட்டுகளின் உச்ச மதிப்பீடு அடிப்படையில் நிர்ணயிக்க சார்பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சொத்துக்களின் அரசு வழிகாட்டுதல் மதிப்பை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கணினி இணைப்புகள் இன்னமும் முழுமையாக இல்லாததால் கணினி மூலம் வில்லங்கச் சான்று பெறுவதில் சிக்கல் உள்ளது’ என்றார். 

பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் செல்லதுரை (சார் பதிவாளர்) கூறுகையில்,

            "பணியிடங்கள் நிறையக் காலியாக உள்ளன. அண்மையில் 340 பேர் சார் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்றனர். இதனால் இளநிலை உதவியாளர் நிலையில் ஏராளமான காலிப் பணிடங்கள் ஏற்படுகின்றன. அவற்றை அரசுதான் நிரப்ப வேண்டும். கணினிப் பணிகளை சார் பதிவாளர் மேற்பார்வையில்தான் வெளியாட்களைக் கொண்டு செய்கிறோம் என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior