உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 03, 2011

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால் என்ன செய்வது ?

          புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.
 
            இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஒன்றை காண்பிக்கலாம். வயது சான்றுக்கு, பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அல்லது பெற்றோரின் உறுதி ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

தமிழக வாக்களர்களுக்கு ஓர் வேண்டுகோள்






தமிழக சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கை தவறாமல் செலுத்துங்கள். இலவசங்களை நம்பி ஏமாறவேண்டாம் வாக்களிப்பதற்கு முன் சிந்தியுங்கள். யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49 -ஒவை பயன்படுத்துங்கள்.


Read more »

வியாழன், மார்ச் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் பிழைகள்

கடலூர் : 

          கடலூர் மாவட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மற்றும் விலாசங்கள் மாறியுள்ளதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டை வழங்காதவர்களுக்கு தற்போது அடை யாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் பகுதியில் உள்ளவர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடையாள அட்டை பெற்ற பலர் அதிர்ச்சியடைந்தனர். விண்ணப்பம் செய்தவரின் பெயருக்கு பதிலாக அவரது தந்தை பெயர் அல்லது வேறு ஒருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது.மேலும் விலாசங்கள் மாறியுள்ளது. 

             கடலூரில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரேவதி தனது அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அடையாள அட்டையில் ரேவதியின் படம் உள்ளது. ஆனால் பெயர் குறிப்பிட்டுள்ள இடத்தில் கருணாமூர்த்தி என ஆண் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோன்று வழங்கப்பட்ட பலரின் அடையாள அட்டையில் பங்வேறு குழப்பங்கள் உள்ளதால் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்டபோது உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் வாக்காளர் கள் அதிருப்தி அடைந்தனர்.

Read more »

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பெயர் திருத்தம், புதிய அடை யாள அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

           ஆர்.டி.ஓ., முருகேசன் 610 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தாசில்தார் சரவணன், தேர்தல் தாசில்தார் திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் அலுவலர் செழியன், கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.பின்னர் ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அதிகாரிகள் விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்திற்கு சென்று வரும் 20ம் தேதி ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கான பயிற்சியை அளிக்க போதிய இட வசதி உள்ளதா என ஆய்வு செய் தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் 199 பதட்டமான வாக்குச் சாவடிகளில் லேப்படாப்,வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் சீத்தாராமன் கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் லேப்டாப், வெப் காமிரா மூலம் நேரிடையாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

                  கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு, பிறகு கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                  கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி 1.7.2010 முதல் 25.1.2011 வரை 1,88,898 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 427 அடையாள அட்டைகளும் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்படும். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக படிவம் 6-ல் இதுவரை 26,662-ம், பெயர் நீக்கம் செய்வதில் படிவம் 7-ல் 172-ம், பெயர் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ல் 3216-ம், தொகுதி விட்டு தொகுதி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் சோர்ப்பதற்கு படிவம் 8எ-ல் 1165-ம் பெறப்பட்டுள்ளது.

                இவை அனைத்தையும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யுமாறு சம்மபந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டால் ரூ. 15 செலுத்தி மாற்று அட்டை பெற்றுக் கொள்ளலாம். கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சுவர் விளம்பரங்கள், விளம்பர தட்டிகள், பலகைகள், கொடிகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.  மேலும், பொதுமக்கள் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டாம், மருத்துவச்செலவிற்காக பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும். 
              கடலூர் மாவட்டத்தில், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என 199 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றில் கல்லூரியில் கணினி பயின்ற மாணவர்களைக் கொண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை லேப்டாப், வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 1200 மேல் வாக்காளர்களைக் கொண்ட 47 வாக்குச் சாவடிகளும், 1400-க்கு மேல் 2 வாக்குச்சாவடிகளும், 1500-க்குமேல் 7 வாக்குச் சாவடிகளும் ஆக 50 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

               கிராமப்புறங்களில் அரசின் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை கண்காணிப்பதற்கு 5 கிராமங்களுக்கு 1 துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 1 உதவி பொறியாளர் ஆகியோரை நியமித்து தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுமாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிப்பதற்கும் மகளிர் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

            அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்றி செயல்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக முதன் முறையாக வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவிற்கான விபரங்கள் அடங்கிய சீட்டினை வாக்குச்சாவடி அலுவலர்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 15, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் 2 நாள் சிறப்பு முகாம்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. நகராட்சி அவலுவலகங்கள். ஊராட்சி ஒன்றிய அலவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

                  கடலூர் நகராட்சி அலுவலகத்திலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஏற்கெனவே  1-7-2010, 15-9-2010, 10-1-2011 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டில்களில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டும், புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தால், இந்த முகாமில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க பதிவு செய்து கொண்ட பலரும், இந்த முகாமுக்கு வந்து அடையாள அட்டைகளைக் கோரியதால் பெரிதும் சலசலப்பு ஏற்பட்டது.

                 அறிவிக்கப்பட்ட காலத்தில் பெயர்களை சேர்க்காமல் இருந்து விட்டு, கடைசி நேரத்தில் பெயர்களை கொடுத்து உடனேயே அடையாள அட்டைகள் கிடைக்கும் என்று நம்பி வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வேண்டிய நபர்கள், இன்னும் அதிகமாக இருப்பதை எடுத்துக் காட்டுவதாகவே முகாம் அமைந்து இருந்தது. போதிய விழிப்புணர்வற்று இருப்பதால் பலர், தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

                 மேலும் இந்த முகாமில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில், அச்சுப் பிழைகள் அதிகமாக இருந்ததாக வாக்காளர்கள் பலர் தெரிவித்தனர். பலருடைய பெயர்கள், தந்தை பெயர் உள்ளிட்டவை தவறாக அச்சிடப்பட்டு இருப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்தனர். இப்பிழைகளால் வாக்குப் பதிவின்போது, வாக்களிப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டு, வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடுமோ? என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior