உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புருகீஸ்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புருகீஸ்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 12, 2010

கடலூர் மாவட்டத்தில் சூரசம்ஹார விழா

கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசாமி கோயிலில் வியாழக்கிழமை, சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி
கடலூர்:
                கடலூர் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கந்தசஷ்டி விழா முருகன் கோயில்களில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான வியாழக்கிழமை சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
                   கடலூரில் புருகீஸ்பேட்டை முருகன் கோயில், புது வண்டிப்பாளையம் சுப்பிமணியசாமி கோயில், புதுப்பாளையம் முருகன் கோயில், விலங்கல்பட்டு முருகன் கோயில், நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹார விழா வியாழக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) முருகன் திருக்கல்யாண வைபவம் முருகன் கோயில்களில் நடக்கிறது.

Read more »

திங்கள், ஜூன் 14, 2010

அனுமதியில்லாமல் கிராவல் ஏற்றிய லாரி, ஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல்

கடலூர்: 

                  கடலூர் அருகே அனுமதியின்றி கிராவல் எடுத்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
                       கடலூர் அடுத்த புருகீஸ்பேட்டையில் கொண்டங்கி ஏரியின் ஒரு பகுதியின் கரை அமைத்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சிறிய மலையை தனியார் குவாரிக்கு சாலை அமைப்பதற்காக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் செம்மண் கிராவல்கள் உடைத்து லாரியில் ஏற்றப்பட்டது. உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிராவல்களை வெட்டி எடுப்பதால் கொண்டங்கி ஏரி கரை பலவீனமாகும் என்பதை தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி கடலூர் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாசில்தார் தட்சணா மூர்த்தி நேரில் சென்று விசாரணை நடத் தினார். விசாரணையில் அனுமதியில்லாமல் பாதை அமைத்ததும். மேலும் அந்த பகுதியில் இருந்த கிராவல்களை அப்புறப்படுத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி மற்றும் ஜே.சி.பி., ஆகியவற்றை தாசில்தார் கைப்பற்றி கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தார். மேலும் இது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உட்படுத்தப் பட உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior