உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 04, 2010

புவனகிரியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாணவர் பலி

புவனகிரி:

                 புவனகிரியில் மின் கம்பியில் மாட்டிய பட்டத்தை இழுக்கும் போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். 

             இந்த சம்பவம் புவனகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்புவனகிரி ஆட்டு தொட்டித் தெருவைச் சேர்ந்தவர் அண்ணா துரை. இவர் சிதம்பரத்தில் உள்ள ஓட்டலில் சர்வராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் செல்வமணி (13). இவர் புவனகிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். செல்வமணி நேற்று மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த பின்னர், மேல்புவனகிரி மயானம் அருகே உள்ள மைதானத்தில் சிறுவர்களுடன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பட்டம் அந்த வழியாகச் செல்லும் மின் கம்பியில் சிக்கிக் கொண்டது. உடன் செல்வமணி பட்டத்தை எடுக்க பட்டத்தில் நூலை பிடித்து இழுத்தார். 

             எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து செல்வமணி மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி செல்வமணி உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பு.முட்லூர் உதவி செயற்பொறியாளர் குமார், புவனகிரி கிளை அலுவலக உதவி பொறியாளர் சாமிதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் செல்வமணியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

புவனகிரி பள்ளி முன் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

புவனகிரி : 

                 புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                     புவனகிரி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் பெருமாத்தூர், வண்டுராயன்பட்டு, பு.உடையூர், வடக்கு திட்டை, தெற்கு திட்டை, தம்பிக்குநல்லான்பட்டினம், ஆதிவராகநல்லூர், கீழமணக் குடி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 1,500க்கும் மேற் பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன்புறம் ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களது சிமென்ட் சிலாப்புகள், பெரிய மரத்துண்டுகள் உள்ளிட்ட பொருட் களை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

                          பள்ளியின் முன் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதற்கும், பாத்திரங்களை கழுவுவதற்கும் வசதியாக போர்வெல் பம்ப் போடப்பட்டது. அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அதனருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பும். அந்த பள்ளத்தின் அருகே ஆக்கிரமிப்பாளர்கள் மெகா சிமென்ட் உருளைகள் மற்றும் தளவாட பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி பள்ளி முன் உள்ள ஆக்கிரமிப்புகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior