உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மணல் கடத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணல் கடத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 19, 2011

கீழ்ச்செருவாய் வெள்ளாற்றில் மணல் குவாரி பணி நிறுத்தம்








திட்டக்குடி:
 
           திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாய் வெள்ளாற்றில் பொதுப்பணித்துறை மூலம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மணல் குவாரி நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி பள்ளமாகியது. மேலும் இப்பகுதியில் 60 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் உள்ள அனைத்து பைப்புகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

             கீழ்ச்செருவாய் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டாரும் பாழாகி குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து இப்பணிகளை சீரமைத்தது. மேலும் அதிக அளவில் டிராக்டர்கள் வருவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

           மயான பாதையை குவாரிக்கு செல்லும் டிராக்டர்கள் பயன்படுத்தியதால் மயானபாதை முழுமையாக சேதமடைந்தது. இந்த சூழ்நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி நிர்வாகம் மணல் குவாரியை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது. இருப்பினும் பொதுப்பணித்துறையினர். 3-வது தடவையாக தொடர்ந்து குவாரியை நடத்துகிறோம் என அறிவித்து குவாரிபணிகள் தொடங்கின. ஆத்தூர், சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மணல் எடுக்க செல்லும் மயான பாதையிலும் நெடுஞ்சாலையிலும் நீண்ட தூரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

            இதை பார்த்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் திரண்டுவந்து டிராக்டர்களை மணல் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என கோஷமிட்டு வழிமறித்து தடுத்து நிறுத்தினர். தகவலின் பேரில் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை அலுவலர் கலியமூர்த்தி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழுமிருந்த கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

            எந்த சூழ்நிலையிலும் மணல் குவாரியை அனுமதிக்கமாட்டோம். என்று பொதுமக்கள் விவாதித்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபொது உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் குவாரியை நிறுத்தி விடலாம் என தெரிவித்தனர்.  அதன்படி மணல் குவாரி பணி நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து குழுமிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Read more »

திங்கள், ஜூலை 11, 2011

கடலூரில் மணல் விலை ஏற்றம்: கட்டுமானப் பணிகள் பாதிப்பு


கடலூர் பெண்ணை ஆற்றில் மணல் எடுத்து வரும் மாட்டுவண்டிகள்.
கடலூர்:

         கடலூரில் திடீரென ஆற்று மணல் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.  

              கடலூரில் 6 மாதங்களுக்கு முன்பு வரை மாட்டுவண்டி மணல் ரூ. 350 க்கும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைத்து வந்தது. மழை காலத்தில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது மணல் எடுப்பதில் சிரமம் இருப்பதால் அத்தகைய காலங்களில் மணல் விலை உயர்வது உண்டு. ஆனால் நல்ல கோடை காலத்தில் கடலூரில் மணல் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவது, வீடு கட்டுவோரையும், ஒப்பந்ததாரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  கடலூரில் தற்போது மாட்டு வண்டி மணல் ரூ. 1,000 ஆகவும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 8 ஆயிரமாகவும் உள்ளது. 

              சில தினங்களுக்கு முன் நெல்லிக்குப்பத்தை அடுத்த, பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றில் புதிதாக மணல் குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.  இங்கு இருந்து கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் மணல் கிடைக்கிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் ஒரு லாரி மணல் ரூ. 5 ஆயரம் முதல் ரூ. 6 ஆயிரமாக உள்ளது. பண்ருட்டியில் மாட்டு வண்டி மணல் விலை ரூ. 350 ஆகவும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரம் ஆகவும் உள்ளது. திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் டிராக்டர் இழுக்கும் டயர் வண்டி மணல், ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைக்கிறது. ஆனால் கடலூரில் மட்டும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஏன் இந்த விலை ஏற்றம் என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.  

               கடலூரில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு ஆகியவை கடலூர் நகராட்சி வழியாக ஓடிக் கடலில் கலக்கின்றன. கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க, ஏனோ அனுமதிக்க வில்லை. மணல் விலை ஏற்றம் காரணமாக, கடலூர் கட்டுமானச் செலவுகள் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. மணல் விலை உயர்வால் நகராட்சி மற்றும் அரசு கட்டுமானப் பணிகளில், உப்பங்கழிப் பகுதிகளில் காணப்படும் உவர் மண்ணையும், ஆற்றங்கரைகளில் உள்ள தரம் குறைந்த மண்ணையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள்.  

                 இதனால் அரசுக் கட்டடங்கள் மற்றும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை சிமெண்ட் சாலைகளின் தரம் படுமோசமாகிக் கொண்டு இருக்கிறது. இத்தனை மோசமான மணலைக் கொண்டு கட்டப்படும் கடலூர் பாதாளச்சாக்கடை திட்டப் பணிகளின் கட்டுமானங்கள் என்னவாகும் என்ற கவலையும் கடலூர் மக்களுக்குத் தோன்றி இருக்கிறது.  கடலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நத்தப்பட்டு பெண்ணை ஆற்றில் அள்ளப்படும் மணலுக்கு, மாட்டு வண்டிக்கு பொதுப்பணித்துறை வசூலிக்கும் கட்டணம் ரூ. 48 மட்டுமே. கடலூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றுக் குவாரியில், மணல் அள்ளும் லாரிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 650 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 

              ஆனால் இந்த லாரிகளும், மாட்டு வண்டிகளும் கடலூர் மக்களிடம் அபரிமிதமாகக் கட்டணம் வசூலிப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.  நுகர்வோருக்கு ஏற்பட்டு இருக்கும் மணல் விலை ஏற்றத்தால், அரசுக்கு வருவாய் அதிகாரித்தால்கூட மக்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இடைத்தரகர்கள்தான் மணல் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள், மணல் சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள்.  மேலும் மணல் எடுத்து வரும் வழியில் உள்ள கிராமங்களில், செல்வாக்கு மிக்க நபர்கள் மாட்டு வண்டிகளிடம், கோயில் விழாக்களுக்காக என்று கூறி, ஒரு நடைக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை வசூலிக்கிறார்கள். 

              அதற்கு ரூ. 20 க்கு ரசீதும் கொடுக்கிறார்கள். பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆற்றில், பணம் செலுத்தி மணல் அள்ளுவோரிடம், இத்தகைய நபர்கள் பணம் வசூலிக்க அனுமதி அளித்தது யார் என்று தெரியவில்லை. 

 மணல் விலை ஏற்றம் குறித்து, லாரி உரிமையாளர் சங்கர் கூறுகையில், 

                பட்டாம் பாக்கத்தில் கடந்த ஒரு வாரமாக குவாரி செயல்படுகிறது. இக்குவாரியை இடைத் தரகர்கள் சிலர் கைப்பற்றிக் கொண்டு, மற்ற லாரிகளை உள்ளே அனுமதிப்பது இல்லை. வெளியூர்களில் இருந்து செல்லும் லாரிகள், ஒரு லோடு மணலுக்காக, 3 நாள்கள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.  அப்பகுதித் தரகர்கள் பெருவாரியாக மணல் எடுத்து, தங்கள் சொந்த இடங்களில் கொட்டி வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதுவே மணல் விலை உயர்வுக்குக் காரணம். இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, மாட்டு வண்டிக்காரர்கள் விலை உயர்த்தி விட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.     




Read more »

புதன், பிப்ரவரி 23, 2011

கடலூர் கெடிலம் ஆற்றுப் பாலத்தை பலவீனப்படுத்த மணல் அள்ளும் மாட்டு வண்டிகள்!


கடலூர் கம்மியம்பேட்டை- செம்மண்டலம் இடையே கெடிலம் ஆற்றுப் பாலத்தின் அடியில் மணல் எடுக்கும் மாட்டு வண்டிகள்.
கடலூர்:

             கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலத்தை பலவீனப்படுத்தும் விதமாக, பாலத்துக்கு அடியிலேயே தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுகின்றன.  

           கெடிலம் ஆற்றின் குறுக்கே 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.4 கோடியில் இப் பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் அருகாமையிலும் பாலத்தைத் தாண்டி 2 கி.மீ. தூரம் வரையிலும், கடல் நீர் தேங்கி நிற்கிறது. மேலும் நகரின் சாக்கடை நீரும், ஆலைக் கழிவுநீரும் இப்பாலத்தின் அருகாமையில் தேங்கி, நகரில் சுகாதாரக் கேட்டை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.  தற்போது கடலூரில் ரூ.26 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சிமென்ட் சாலைகள். இந்த சிமென்ட் சாலைகளை அமைக்க பெரும்பாலும் கெடிலம் ஆற்றின் கழிவு மணலையே காண்ட்ராக்டர்கள் பயன்படுத்துகிறார்கள். 

                இதுகுறித்து புகார்கள் எழுந்த போதிலும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இதுவரை எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.  மேலும் ஆற்று மணல் முழுவதும் கெடிலம் ஆற்றுப் பாலத்துக்கு அடியிலேயே எடுப்பது, பாலத்தின் அடித்தளத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் இப்பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி மணல் அள்ளுகின்றன. இதை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் சென்று விடுகின்றனர்.  பாலத்தின் கீழ்ப் பகுதியில் அதிக ஆழத்துக்கு மணல் எடுத்து இருப்பதால், அப் பகுதி முழுவதும் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.

                 அந்த வழியாகச் செல்லும் குடிநீர் பிரதானக் குழாய்கள் எப்போதும் சாக்கடைக்குள் மூழ்கி இருக்கின்றன. பெருமளவுக்கு இங்கு மாட்டு வண்டிகள் சென்று மணல் எடுப்பதால் குடிநீர்க் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர், சுகாதாரமற்ற நிலைக்கு மாறிவருகிறது.  அதிக அளவில் இங்கு மணல் எடுத்ததன் காரணமாக, கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இப்பாலத்தின் அருகே உள்ள 50 அடி அகல இணைப்புச் சாலை துண்டிக்கப்பட்டு, அருகில் உள்ள நகர்களுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது.  தொடர்ந்து இப்பகுதியில் மணல் எடுப்பதால், இந்த மோசமான நிலை, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுப்பார்களா? 

Read more »

வியாழன், பிப்ரவரி 17, 2011

பண்ருட்டி அருகே மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்


பண்ருட்டி அருகே

 

 மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

 
கடலூர்:
 
             பண்ருட்டியை அடுத்த சேர்ந்தநாடு கிராமத்தின் அருகே கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. 
 
             கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் கனிம வள உதவி இயக்குனர் முருகானந்தம் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்தனர்.   பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே அவர்கள் “திடீர்” வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், சேர்ந்தநாடு கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதி யின்றி மணல் அள்ளி கடத்தி வந்த 3 லாரிகள் சிக்கின. அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

               கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

புதன், டிசம்பர் 29, 2010

பண்ருட்டி தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை: பாலத்திற்கு ஆபத்து





கடலூர்:

               கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, தென்பெண்ணையாற்றின் புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும், 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்திற்கு ஆபத்து உருவாகும் நிலை உள்ளது.

               சமீபத்தில் பெய்த கன மழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் முடப்பட்டன. இதனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில், பண்ருட்டி அடுத்த தென்பெண்ணையாறு, கெடிலம், மலட்டாறு பகுதியில், டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடந்து வருகிறது. அரசியல் தலையீடு காரணமாக, வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதில்லை. 

            லாரிகளை பிடித்து விŒõரிப்பது, உயரதிகாரிகளுக்கு தெரிந்தால், வழக்கு பதிவு செய்வது, இல்லையெனில், "மாமூல்' பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் போலீசார் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், தொடர் மணல் தட்டுபாடு காரணமாக, மாட்டு வண்டிக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணையாறு புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும் 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதனால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Read more »

வெள்ளி, டிசம்பர் 03, 2010

பண்ருட்டி அருகே மழை, வெள்ளத்திலும் மணல் கொள்ளை: 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்


 

பண்ருட்டி : 

               பண்ருட்டி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மணல் எடுக்க முடியாமல் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. ஆனால், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாறு, மலட்டாறுகளில் தொடர்ந்து இரவில் டிப்பர் லாரிகளில் மணல் திருட்டு நடந்தது. 

             எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.எஸ்.பி., பிரசன்னகுமார் உத்தரவின் பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் எனதிரிமங்கலம், கொரத்தி மாரியம்மன் கோவில் அருகில், வரிஞ்சிப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள் பிடாகம் அய்யப்பன், வரிஞ்சிப்பாக்கம் ராஜேந்திரன்(37), கண்டரக்கோட்டை பாண்டியன்(26) ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior