உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 30, 2011

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் சிதம்பரம் வருகை


சிதம்பரம்:

         சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்க பவள விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (31-ம் தேதி) நடைபெறுகிறது. கீழரத வீதியில் நடைபெறும் இவ் விழாவில் அன்று மாலை 4.30 மணிக்கு திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் (படம்) பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் .திரிபுரா முதல்வரின் வருகையை முன்னிட்டு சிதம்பரம் டி.எஸ்.பி. டி.கே.நடராஜன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

            டிஎஸ்பி டி.கே.நடராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கீழரதவீதியில் மாநாட்டு மேடை அருகே ஆய்வு மேற்கொண்டனர். மேலும் திரிபுரா முதல்வர் தங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி, மாநாட்டு மேடைக்கு முதல்வர் வரும் சாலைகள் குறித்தும் போலீசார்   ஆய்வு மேற்கொண்டனர்.



Read more »

திங்கள், ஏப்ரல் 04, 2011

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணனை ஆதரித்து பிருந்தா காரத் பிரச்சாரம்


சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் (இடதுகோடி).
 
சிதம்பரம்:
 பிரச்சாரம் 
             திமுகவின் அரசியல் சர்க்கஸ் வரும் 13-ம் தேதியோடு முடிவுக்கு வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட்டார்.
 
சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணனை ஆதரித்து சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
 
              அதிமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக கருணாநிதி தலைமையிலான திமுக செய்து வரும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஜெயலலிதா தலைமையில் 9 அரசியல் கட்சியினர் இணைந்து உருவாக்கியது இக் கூட்டணி. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியில் பல்வேறு விதமான சமூக நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதை பாரம்பரியமாக நான் மதித்ததுண்டு. ஆனால் இப்போது அவையெல்லாம் எங்கே போனது. தமிழகம் ரொம்ப வித்தியாசமாக மாறிவிட்டது.
 
                 திமுகவின் அரசியல் சர்க்கஸ் வரும் 13-ம் தேதிக்கு பிறகு முடிவுக்கு வர வேண்டிய அவசியம் உள்ளது. அது நடக்கும். மக்கள் மீது காங்கிரஸ், திமுக கட்சிகள் இரட்டைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு சட்டப் பேரவைத் தேர்தல் நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளது. இதில் திமுக அரசை அகற்றுவது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே, ஏன்? உலகுக்கே நல்ல பாடத்தை தமிழகம் கற்பிக்க வேண்டும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் குரல் எழுப்பினார்களா? விலைவாசி உயர்வு பற்றியும், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை பற்றியும் குரல் எழுப்பினார்களா? இல்லை. 
 
              அப்போது இடதுசாரிகளும், அதிமுகவும் தான் குரல் கொடுத்தது.மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பணக்காரர்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வரிச் சலுகையை விட்டு கொடுத்துவிட்டு விவசாயிகள் மீதான வரிச் சுமையை அதிகரித்துள்ளது. இதற்காக நாங்களும், அதிமுகவும்தான் குரல் கொடுத்தோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆயிரம் கோடியை கடலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் வெள்ளத்தால் பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காணலாம். விவசாயிகள் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யலாம்.
 
 
              இதனால், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மலர அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார் பிருந்தா காரத்.கூட்டத்துக்கு அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமை வகித்தார். தேமுதிக நகரச் செயலாளர் கே.விஜயகுமார் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
 
 

Read more »

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

சிதம்பரம் நகரில் குப்பைத் தொட்டி வைப்பதிலும் அரசியல்!


சிதம்பரம் மேலவீதியில் கடைமுன்பு குப்பை தொட்டி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆதரவு தெரிவித்து கூடிய திமுகவ
 
சிதம்பரம்:
 
            சிதம்பரம் நகரில் மேலரதவீதியில் கடை ஒன்றின் முன்பு நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பைத் தொட்டியை அங்குதான் வைக்க வேண்டும் என திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பில் வெள்ளிக்கிழமை புதிய குப்பைத்தொட்டி ஒன்று மேலரதவீதியில் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கடை ஒன்றின் முன்பு வைப்பதற்கு வந்தனர். குப்பைத் தொட்டியை அங்கு வைக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூசா, நகரச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
                        தகவல் அறிந்த அந்த வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகன் மற்றும் திமுக நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், வெங்கடேசன், வி.என்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராஜராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குப்பைத்தொட்டி சாலையோரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் தொட்டியை வைக்க வேண்டும் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் மற்றும் போலீஸôர் அங்கு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குப்பைத் தொட்டியை அதே இடத்தில் வைத்துவிட்டு வந்தனர்.
 
                   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவராக உள்ள சிதம்பரம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிக்கு அந்த கட்சியே எதிர்ப்பு தெரிவிப்பது வேதனையளிக்கிறது என திமுக நகரமன்ற உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் தெரிவித்தார்.

Read more »

வியாழன், அக்டோபர் 21, 2010

கடலூர் சாலைகளின் பரிதாப நிலை: சேற்றில் உருளும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டுகள்

கடலூர்:

                 கடலூர் நகரில் சாலைகளின் பரிதாப நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் புதன்கிழமை சேற்றில் உருளும் போராட்டம் நடத்தினர்.

                      தரமற்ற சாலைகள், அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளுக்குப் பேர்போன கடலூரில், பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்ட பின், சாலைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக மாறிவிட்டது. சாலைகளால் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வரும் சொல்லொண்ணா துயரங்களை மாற்ற, மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த நடவடிக்கை எதையும் எடுத்துவிடவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.  என்றாலும் மக்களின் சகிப்புத் தன்மை அவர்களுக்கு நல்லதொரு கேடயமாக அமைந்து விடுகிறது. எனவேதான் பொதுநல அமைப்புகளின் போராட்டங்கள் அலுவலர்களின் மனப்போக்கில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 

                 கடலூரில் நள்ளிரவில் 30 நிமிடம் மழை பெய்தால்போதும், காலையில் கடலூரில் பல நகர்களில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாது என்ற நிலை.  நடக்கவும் முடியாது, இருசக்கர வாகனங்களை இயக்கவும் முடியாது. ஆனால் 4 சக்கர குளிர்பதன வாகனங்களில் வரும் ஆட்சியாளர்களுக்கோ இதுவெல்லாம் ஒரு பிரச்னையாகவே தெரியவில்லை என்கிறார்கள் பொது  மக்கள். 

                         அண்மைக் காலமாக கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு வீதி, பாதிரிக்குப்பம் கூத்தப்பாக்கம் சாலை (மாநில நெடுஞ்சாலைகள்) ஸ்டேட் பாங்க் காலனி நகராட்சி சாலை ஆகியவை குண்டும் குழியுமாக மாறியதுடன், மழையால் சேறும் சகதியுமாக மாறிவிட்டன. சாலைகளை செப்பனிட துரித நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பாப்புலியூர் காவல் நிலையம் அருகே, புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

                   அதைத் தொடர்ந்து சாலைகளின் பரிதாப நிலையை கண்டித்து 4 இளைஞர்களும் ஒரு பெண்ணும் சேற்றில் உருண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகரச் செயலாளர் வி.சுப்புராயன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன், நகரக்குழு உறுப்பினர் ரஜினிஆனந்த், தியாகராஜன், எஸ்.ராஜாத்தி, தனுசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 16, 2010

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி

சிதம்பரம்:

            தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் கே.பாலபாரதி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.

             சிதம்பரம் நகர மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசை  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மக்கள் சந்திப்பு தர்னா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் கே.பாலபாரதி எம்எல்ஏ பேசியது: 

             சிதம்பரம் நகர மக்களின் அடிப்படைத் தேவைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். கேரளம், திரிபுரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 40 சதவீதமும், மேற்குவங்கத்தில் 50 சதவீதமும் உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உளளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வெறும் 8.5 சதவீதமேயாகும். எனவே உள்ளாட்சிகளுக்கு தமிழக அரசு அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.

              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நல்ல திட்டங்களை வரவேற்றும், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும் வருகிறது. சிதம்பரம் நகராட்சியில் நிதிப் பற்றாக்குறை. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. நலத்திட்டங்களை செயல்படுத்த விடுவதில்லை போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நகராட்சி நிர்வாகத்திலிருந்து வழங்கப்படும் நிதி மக்களிடையே முறையாக சென்றடைகிறதா என்றும் கவனிப்பதில்லை.

            எனவே சிதம்பரம் நகராட்சியில் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கே.பாலபாரதி தெரிவித்தார். நகர்மன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.நடராஜன் முன்னிலை வகித்தார். திருவொற்றியூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன், மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம்,  மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

புதன், ஜூலை 14, 2010

கடலூரில் திருமாணிக்குழி பாலத்தை சீரமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர்:

               கடலூரில் மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகு மாறன், தட்சணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் மாதவன், உறுப்பினர்கள் வைத் திலிங்கம், தயாளன், நீலநாராயணன், அய் யாதுரை, ராமர், மச்சகாந்தி, செந் தாமரைக்கண்ணன் பங்கேற்றனர்.

              கூட்டத்தில்,பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விலை உயர்வை ஈடுகட்ட மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள சுங்க வரியை திரும்பப் பெற வேண்டும். கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் முதுநகரில் இருந்து சேலம் செல்லும் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும். வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த திருமாணிக்குழி பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior