உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மார்பக புற்றுநோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்பக புற்றுநோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 25, 2010

நெய்வேலியில் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம்

நெய்வேலி:
                   
                  நெய்வேலி இன்னர் வீல் சங்கம் சார்பில் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் மந்தாரக்குப்பத்தில் உள்ள பொன்னி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

                      நெய்வேலி இன்னர் வீல் சங்கமும், அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாமுக்கு நெய்வேலி லிக்னைட் சிட்டி அரிமா சங்கத் தலைவர் நாகரத்னம் தலைமை வகித்தார். முகாமில் மகளிருக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 100 பெண்கள் இம்முகாமில் கலந்துகொண்டனர். மேலும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் டாக்டர் அன்புக்கிளி மற்றும் டாக்டர் காயத்ரி ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நெய்வேலி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பாபுஜி மற்றும் நெய்வேலி விப்ஸ் அமைப்பின் தலைவி டாக்டர் தாரணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read more »

செவ்வாய், ஜூன் 22, 2010

என்எல்சி பெண் ஊழியர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை

நெய்வேலி:

               என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 1500 பெண் ஊழியர்களுக்கு கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைத் திட்டத்தை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் .புற்றுநோய் மூலம் உலகில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.​ 

                   இந்த ஆண்டு மட்டும் 79 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.​ இது தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் நெய்வேலி வாழ் மகளிர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு என்எல்சி பொது மருத்துவமனை பல ஆண்டுகளாக பல்வேறு தொடர் சிசிச்சை மற்றும் சோதனைகளை செய்து வருகிறது.

                 இந்நிலையில் என்எல்சி பெண் ஊழியர்களுக்கு மிகவும் நவீன முறையில் சிறப்பு மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி,​​ புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கிவைத்த என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி,​​ இப்பரிசோதனை என்எல்சி பெண் ஊழியர்களுக்கு மட்டுமில்லாது,​​ நிறுவன ஊழியர்களின் துணைவியர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் என்றார்.இப்பரிசோதனையில் என்எல்சி பொதுமருத்துவமனையுடன் இணைந்து சென்னையைச் சேர்ந்த பிரபல காமாட்சி மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.​ இப்பரிசோதனை ஒரு நாளைக்கு 50 பெண்கள் வீதம் தொடர்ந்து 6 வாரங்களுக்கு நடத்தப்படவிருப்பதாக என்எல்சி மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பி.டி.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.​ 

                     தொடர்ந்து கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கையேட்டினை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வெளியிட,​​ சென்னை காமாட்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார்.இந் நிகழ்ச்சியில்,​​ நிறுவன இயக்குநர்கள் பி.பாபுராவ்,​​ ஆர்.கந்தசாமி,​​ சேகர் மற்றும் காமாட்சி மருத்துவமனையின் மருத்துவர்கள் ராஜ்குமார் மற்றும் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior