உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மூவேந்தர் முன்னேற்றக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 25, 2011

மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு கூட்டம்


முல்லை பெரியாறு, காவிரி  

நதிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்; ஸ்ரீதர்வாண்டையார் பேச்சு


 சிதம்பரம்:

               மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது  மூவேந்தர் முன்னேற்றக்கழக .தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் பேசியது:-

            நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாம் கடுமையாக உழைத்தோம்.கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்டோம். எனக்காக கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர்.அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்ததால் தவறான பாதையில் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். நான் மட்டும் அல்ல, தி.மு.க.கூட்டணியிலும் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள். மக்களின் எண்ணம் மாறி விட்டது.ம க்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். தலை வணங்குவோம். இனி வரும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் செயல்பட வேண்டும்.

           நாங்கள் தவறான பாதையில் (கூட்டணி) செல்ல வில்லை. தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. பா.ம.க. 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைவைத்து நாம் தவறான பாதையில் சென்று விட்டோம் என்று கூற முடியாது. நாம் தவறான முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க.தலைவர் கருணாநிதி நாம் வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதன் அடிப்படையில் தான் நாம் தி.மு.க.கூட்டணியில் சேர்ந்து உள்ளோம். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.அ தனால் நாம் தோல்வி அடைந்து விட்டோம். விரைவில் எம்.பி.தேர்தல் வரப்போகிறது. அதற்கு நாம் ஓராண்டுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.

            உள்ளாட்சி தேர்தலிலும் நாம் அதிக இடங்களில் போட்டியிட தயாராக வேண்டும். அடுத்த தேர்தலில் சரியான பாதையில் செல்ல வேண்டும். நமது கட்சி நிர்வாகிகள் யாருடைய அச்சுறுத்துதலுக்கும் பயப்பட தேவையில்லை .மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். அகமுடையார், கள்ளர், மறவர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.இதையெல்லாம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா செய்து கொடுப்பாரா? அப்படி செய்து கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அனைத்தும் போராடுகிற நிலையில் நிலுவையில் உள்ளது.

            அடுத்த சட்டசபை தேர்தலில் நாம் கேட்கிற தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க. விடம் இருந்து கிடைக்க வில்லையென்றால் நாம் நமக்கென்று 25 தொகுதிகளை இப்போதே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். 25 தொகுதிகளில் நாம் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.அ தன்பிறகு நாம் கேட்காமலேயே நமக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். சிதம்பரம் தொகுதியில் எனக்கு அனைத்து சமூகத்தினரும் வாக்கு அளித்து உள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிகளை 1 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.ஆனால் பதவி ஏற்று 7 வாக்குறுதிகளை மட்டும் உடனடியாக நிறை வேற்றுவதாக கூறியுள்ளார். ஆனால் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி, கான்கிரீட்வீட்டுக்கு கூடுதல் நிதி உதவி போன்ற நல்ல திட்டங்களை நிறை வேற்றவில்லை.ஆகவே நாம் விரைவில் இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். இவ்வாறு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் கூறினார்.

               கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கேப்டன் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில பொருளாளர் அபிராமம் கோவிந்தசாமி, மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், இணை செயலாளர் ராஜா, முத்து, மறவன்நடராஜன், ஐரோப்பிய மாணவரணி தலைவர் கோகுல்வாண்டையார், மாவட்ட இளைஞரணி வேல்ராஜ், மதியழகன், மதுரை சுரேஷ், நாகவேல், ஜோதி மணி உள்பட தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

          சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தலைவர் ஸ்ரீதர்வாண்டையாருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஐ.நா.சபையின் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              பெட்ரோல் ,டீசல் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் திறந்து விட வேண்டும்.கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையாருக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.

              அதன்படி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார், இளைஞர் அணி துணை தலைவர் சிற்றரசு, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இந்திரக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்துநீக்குவதற்கு முழு ஆதரவு அளிப்பது, சாதி வாரியாக கணக்கு எடுக்கும் பணிக்கு உத்தரவிட்ட மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கட்சி புதிய மாநில பொதுச்செயலாளராக கேப்டன் நடராஜன், மாநில இணை தலைவராக ஆறுமுக நாட்டார், மாநில துணை தலைவராக ஒச்சாயி தேவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



Read more »

வெள்ளி, மார்ச் 18, 2011

சிதம்பரம் மூ.மு.க.வுக்கு ஒதுக்கீடு: திமுக, பாமக அதிருப்தி


 
சிதம்பரம்.:

           சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, பாமகவினர் அதிகம் பேர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் தொகுதியான சிதம்பரம் தொகுதியை கூட்டணிக்  கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் ஏமாற்றம் அடைந்து அதிருப்தியில் உள்ளனர்.  

                சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் தோல்வியுற்றார்.  

                நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ துரை.கி.சரவணன் விருப்ப மனு கொடுத்திருந்தார். மேலும் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ரா.மாமல்லன் (குமராட்சி), முத்துபெருமாள் (பரங்கிப்பேட்டை) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் திமுக தலைமையில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இத்தொகுதி மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  

                 சிதம்பரம் தொகுதி மூ.மு.க.வுக்கு ஒதுக்கியதால் பாமகவினர், வன்னியர் சமூக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கருத்து வேறுபாடுகளை களைந்து வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளையும், திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அரவணைத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவுடன் அக்கட்சிகளின் வாக்கு வங்கியை முழுமையாக பெற்று மூவேந்தர் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது.  

              போட்டியாளரை வீழ்த்த அமைச்சரின் சாதுர்யம்: கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது அரசியல் போட்டியாளர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கிடைக்கக்கூடாது என மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மூலம் சிதம்பரம் தொகுதி கேட்டு வலியுறுத்தி அக்கட்சிக்கு சிதம்பரம் தொகுதியை வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. 

              அத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். இந்த முறை துரை.கி.சரவணனுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என உளவுத்துறை முதல் அனைத்து பகுதியிலிருந்து திமுகவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ÷ஆனால் திமுக வெற்றி பெறும் தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு அமைச்சர் வாங்கிக் கொடுத்துள்ளார் என துரை.கி.சரவணன் ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.  

                சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிமுகவினர் அதிருப்தி: கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயமும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவனும் வெற்றி பெற்றனர். தற்போது சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, ஏ.அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர் உள்ளிட்ட 50- அதிமுகவினர் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.  

               வெற்றி பெற்ற இத்தொகுதிகளில் இத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்த இரு தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிலையுள்ளதால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior