உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா

சிதம்பரம் :


      சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா நடந்தது.

     கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை தலைவர் மணிமேகலை, நிர்வாக செயலர் பாபு, ஆங்கிலப்புல முனைவர் அப்துல் ரஹீம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அண்ணா துரை வரவேற்றார். இணை பேராசிரியர் இந்திராகாந்தி தொகுத்து வழங்கினார். மாநில கல்வி தணிக்கை மற்றும் தரக்குறியீட்டு மன்ற உறுப்பினர் இளங்கோ திருக்குறள் காட்டும் ஒழுக்கம் என்ற பொருளில் கருத்துரை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் சந்திரசேகர் காப்பியங்கள் உணர்த்தும் வாழ்க்கை நெறிகள் எனும் தலைப்பில் பேசினார். கல்லூரி மாணவர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகாமசுந்தரி நன்றி கூறினார்.






Read more »

செவ்வாய், ஜூலை 31, 2012

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியின் நிறுவன தர உறுதி செய் மன்றக் கூட்டம்

சிதம்பரம் :

கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரியின் நிறுவன தர உறுதி செய் மன்றக் கூட்டம் கல்லூரியின் நூலக அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஆலோசகர் கனகசபை  முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நர்மதை வரவேற்றார். கல்லூரி நிறுவனத் தலைவர் மணிமேகலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். செயலர் பாபு  வாழ்த்திப் பேசினார். கற்றல் கோட்பாடுகள், கற்பித்தல் நெறிமுறைகள் பற்றி துறைத் தலைவர்கள்  கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு கல்வி தணிக்கை மற்றும் தரக்குறியீட்டு மன்ற உறுப்பினர் பேராசிரியர் இளங்கோ துறை வாரியான முன்னேற்றம் குறித்து  பேசினார்.




Read more »

வியாழன், மார்ச் 29, 2012

சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்


சிதம்பரம் :

       சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி என்.எஸ்.எஸ்., அரிமா சங்கம், சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

      கல்லூரியில் நடந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பழனிவேல், அரிமா ஆளுனர் கல்யாண்குமார், மாவட்டத் தலைவர் நாகப்பன், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ்சந்த், கல்லூரி நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிவக்குமார், பிரேம்குமார் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை என். எஸ்.எஸ்., அலுவலர்கள் அப்பர்சாமி, பாலசுந்தரம் செய்திருந்தனர்.








Read more »

சனி, பிப்ரவரி 11, 2012

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

சிதம்பரம் : 
 
          சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கிள்ளை பேரூராட்சி சேர்மன் வித்தியாதித்தன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாலசுந்தரம் வரவேற்றார். துணைத் தலைவர் பொன்மொழி, காத்தவராயசாமி, குணசேகரன், வாசுதேவன், ஸ்டாலின், விஜயலட்சுமி, ரவி உட்பட பலர் பங்கேற்றனர். நமதில்லம் டிரஸ்ட் சிறப்பு விருந்தினர் சுவாமிநாதன் காசநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார்

Read more »

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

சிதம்பரம் : 

             சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. 

              சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடியில் உள்ள ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பழனிவேல் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன், தாளாளர் மணிமேகலை, ஆங்கிலத் துறைத் தலைவர் அப்துல்ரஹிம் முன்னிலை வகித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி மரக்கன்றுகள் நட்டார். ஏற்பாடுகளை என். எஸ்.எஸ்., அலுவலர்கள் அப்பர்சாமி, பாலசுந்தரம், உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வரகிருஷ்ணன் செய்திருந்தனர்.






Read more »

சனி, ஜூலை 30, 2011

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை : 

          சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 

           சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதி வசதி இல்லை. ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும் அபதாரம் விதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்லூரி கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி இந்திய மாணவர் சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட் டனர். இந்திய மாணவர் சங்க நகர தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசினர்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior