உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ரேஷன் அட்டை பெறுவது எப்படி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரேஷன் அட்டை பெறுவது எப்படி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 01, 2012

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 3 வரை ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கலாம்

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளைப் புதுப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம், மார்ச் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  தெரிவித்துள்ளார். 

மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

          தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை, 1-1-2012 முதல் 31-12-2012 வரை, மேலும் ஓராண்டிற்கு நீடித்து அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. 30-12-2011 அன்று புயல் வீசிய காரணத்தால் கடலூர் மாவட்டத்தில், பிப்ரவரி முதல் தேதியில் இருந்து, குடும்ப அட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையாத காரணத்தால், 10-3-2012 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. 

            எனவே இதுவரை குடும்ப அட்டைகளை புதுப்பிக்காதவர்கள், 10-3-2012-க்குள் தங்களது குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 10-3-2012-க்குள் புதுப்பிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட மாட்டாது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.








Read more »

புதன், பிப்ரவரி 29, 2012

இணையத்தளத்தில் குடும்ப அட்டை புதுப்பிக்கலாம்

        தமிழகத்தில் குடும்ப அlட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு அளித்துள்ள செய்திக் குறிப்பில், 

          தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது.மொத்தமுள்ள 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

         மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


 அதன்படி பொதுமக்கள்


     

      ன்ற இணைய  தள  முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.  

           ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.  மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்.

முகவரி


http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do



Read more »

வியாழன், டிசம்பர் 29, 2011

தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலம் 31.12.2011 வரை நீட்டிப்பு: புதுப்பிக்கும் பணியும் தொடக்கம்




தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


           தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை மேலும்,  ஓராண்டிற்கு  நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது.  அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின்  மேற்பகுதியில் “2012” என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

              குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை  குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.  எனவே, குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நபர் நீக்கல், எரிவாயு உருளை விவரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் குடும்ப அட்டை தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து  இந்த விவரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி சனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது.

             எனவே , குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை அங்காடிக்கு குடும்ப அட்டையை பொருள்கள் வாங்குவதற்கு மற்றும் புதுப்பிக்கச் செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது.   அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012 ஆம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் / இடது கை பெருவிரல் ரேகை பதிக்க  கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு கையொப்பம் இட்டால் அல்லது கைரேகை பதித்தால் தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும்.

            குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை நியாயவிலை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும் போது குடும்ப அட்டைதாரர்கள், தாங்களே முன் வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வெள்ளி, ஜூலை 15, 2011

ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்

         ரேஷன் கார்டு அச்சிடும் போதே சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படுகிறது. 

          மாநிலம் முழுவதும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தி கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குளறுபடிகளை தவிர்க்க, ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போதே அவர்களின் மொபைல் போன் நம்பர்களும் விண்ணப்பத்தில் பெறப்படுகின்றன. விசாரணை முடிந்து அந்தந்த மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் அச்சிடும் போது, இதுபற்றிய தகவல் பயனாளிக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

            எஸ்.எம்.எஸ்., வந்த ஒரு வாரத்தில் சம்மந்தப்பட்ட பயனாளி தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டை பெற்று கொள்ள முடியும். விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வந்து விட்டதா, இல்லையா என்ற குழப்பமும் இனி இல்லை. பொதுமக்கள் வீணாக அலைவதை தடுக்க இந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.



For more details














Read more »

திங்கள், ஜூலை 11, 2011

2 மாதத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் : அமைச்சர் புத்திசந்திரன்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/2f8020ae-2e39-4e7d-939b-f1476b912f99_S_secvpf.gif



           தமிழக உணவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர் புத்திசந்திரன் நேற்று ஊட்டி வந்தார். ஊட்டி தமிழகம் மாளிகையில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  அதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஊட்டியில் உள்ள சிவில் சப்ளை குடோனுக்கு சென்று ஆய்வு செய்தார். 
ஆய்வு முடிந்ததும் அமைச்சர் புத்திசந்திரன்  கூறியது:-

           தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பதுக்குவோர் மற்றும் கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

            தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகள் 2 மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களில் 85 சதவீதம் பேருக்கு பாமாயில் வழங்கப்படுகிறது. பாமாயில் எண்ணை கிடைக்காத 15 சதவீத பேர்களுக்கு டோக்கன் பெற்று அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.  மேற்கண்டவாறு அமைச்சர் புத்திசந்திரன் கூறினார்.



Read more »

திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு

கடலூர்:
            ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.  
மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது.  1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.  இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.  

              மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

            ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

               இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior