உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வண்டிப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வண்டிப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 18, 2012

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் செல்போன் பறிமுதல்:

கடலூர்:


வண்டிப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலைபேசிகளை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தினர். கடலூர், வண்டிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 595 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவதை தடுக்கவும்,மாணவர்களின் நடவடிக்கையை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமையாசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட ஓழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இத்தகவலை தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி
      
          நேற்று காலை இறை வணக்கத்தின் போது அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஒழுங்கு  நடவடிக்கை குழுவினர், மாணவர்கள் அலைபேசி வைத்துள்ளார்களா என சோதனை செய்து இரண்டு மாணவர்களிடம் அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். சற்று நேரத்தில் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு சோடியம் விளக்குகளை  கல்வீசி உடைத்தனர். உதவி தலைமையாசிரியர் கோமதி கொடுத்த தகவலின் பேரில், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பள்ளியில் விசாரணை  நடத்தினர்.

அப்போது ஆசிரியர்கள் கூறுகையில்,


மாணவர்கள் தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கண்டிக்கும் ஆசிரியர்களுக்கு மிரட்டல்  விடுக்கின்றனர். வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் கட்சி பெயர், கட்சி  தலைவர்களின் பெயர்களை எழுதி வைக்கின்றனர் என புகார் கூறினர். மாணவர்களோ, ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சரியாக வருவதில்லை, பாடம் நடத்துவதில்லை என்றனர்.


சரியும் மாணவர் சதவீதம்

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு  ஆண்டிற்கு முன் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்தனர். மாணவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால் பல மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிவிட்டனர். இதனால் தற்போது இப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 595 ஆக குறைந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளி மீது தனிக்கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை  எடுக்க முன் வர வேண்டும்.

...

Read more »

வியாழன், அக்டோபர் 20, 2011

கடலூரில் தொடர்ந்து சேதம் அடையும் பாதாள சாக்கடை மூடிகள்


கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடைத் திட்ட, ஆள் இறங்கு குழியில் விழுந்து கிடக்கும் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரி.
கடலூர்:
 
           கடலூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளில், ஆள்இறங்கு குழிகளின், மேல்மூடிகள் இப்போதே தொடர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. 
 
                 இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன.ரூ.60 கோடியில் நிறைவேற்றப்பட்டு வரும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில், 25 ஆயிரம் ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதாளச் சாக்கடையில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால், இக்குழிகள் வழியாக இறங்கி அடைப்புகளை அகற்ற முடியும். இவைகள் ஆள் இறங்கு குழிகள் என்று அழைக்கப்பட்டாலும், திட்டப் பணிகள் முடிவடைந்து, செயல்படும் காலத்தில் அடைப்புகளை அகற்ற, இயந்திரம் பயன்படுத்தப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.எப்படி இருப்பினும் திட்டம் செயல்படத் தொடங்கும் முன்னரே, இந்த ஆள் இறங்கு குழிகளில் போடப்படும் மூடிகள் பெரும்பாலானவை, உடைந்து விடுகின்றன.
 
                இதனால் பெருமளவில் ஆபத்தும் காத்து இருக்கிறது என்று பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். மூடிகள் தரமானதாக இல்லாததே இப்பிரச்னைகளுக்குக் காரணம். திட்டம் செயல்படத் தொடங்கு முன்னரே, நூற்றுக்கணக்கான மூடிகள் உடைந்து, நாள் கணக்கில் கேட்பாரற்றுக் கிடந்து, பலரும் புகார் தெரிவித்த பிறகு, அவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.ஆள்இறங்கு குழிகளில் மூடிகள் உடைந்து, லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்களும் அடிக்கடி குழிகளில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு இத்தகைய விபத்து நேரிட்டால் அவரது கதி என்னவாகும் என்பதே மக்கள் தெரிவிக்கும் அச்சம்.
 
                    திட்டம் செயல்படும் காலத்தில், சாக்கடை நிரம்பியிருக்கும் நிலையில், மூடிகள் உடைந்து இத்தகைய விபத்து நேரிட்டால், சுற்றுப்புற சுகாதாரம் கேள்விக் குறியாகுமே என்பதும், மக்கள் எழுப்பும் மற்றொரு சந்தேகம்.
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், நவம்பர் 22, 2010

கடலூர் வடிகால்களில் அடைப்பு: 30 நகர்களுக்கு வெள்ளப் பாதிப்பு


மழைநீருடன் சாக்கடை நீரும் வழிந்தோட வாய்ப்பு இல்லாதவாறு அடைபட்டுக் கிடக்கும், கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் பாலம்.
 
கடலூர் : 

                 கடலூரில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அடைபட்டுக் கிடப்பதால், 30-க்கும் மேற்பட்ட நகர்களுக்கு மழையினால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

                   கடலூர் அருகே திருவந்திபுரம் அணையில் இருந்து சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் என்று இரு வாய்க்கால்கள் உள்ளன. இவை கடலூர் நகராட்சி வழியாக ஓடி, கெடிலம் ஆற்றில் கலக்கின்றன. நகரின் பிரதான வடிகால் வாய்க்கால்களாகவும் இவை உள்ளன.40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வாய்க்கால்கள் இரண்டும், 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்குப் பாசன வாய்க்கால்களாக இருந்தன. காலப்போக்கில் இந்த விளை நிலங்கள் எல்லாம், லே-அவுட்களாக மாறி, ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுவிட்டன.

                 நிலங்கள் வீடுகளாக மாறினாலும் வாய்க்கால்கள் அடைபடாமலும் ஆக்கிரமிக்கப்படாமலும் இருந்தால், செüடாம்பிகை நகர், எஸ்.எஸ்.ஆர். நகர், சரவணன் நகர், பி.டி.கார்டன் நகர், தானம் நகர், ராமநாதன் நகர் உள்ளிட்ட  30க்கும் மேற்பட்ட நகர்களுக்கு வடிகால்களாக பயன்பட்டு இருக்கும். ஆனால் இந்த இரு வாய்க்கால்களும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும், பராமரிப்பு இன்றி அடைபட்டு குறுகலாகவும் மாறிவிட்டன.

                 5 ஆண்டுகளுக்கு முன், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து | 20 லட்சம் ஒதுக்கியும், பணிகள் முழுமை அடையவில்லை. மேலும் சின்ன வாய்க்கால் செல்லும் பகுதிகளில் வாய்க்கால் பாலங்கள் பலவற்றை, நகராட்சி முறையாக பராமரிக்காததால் அடைபட்டுக் கிடக்கின்றன. வண்டிப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள பிரதான பாலம், அண்மையில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்டபோது சிதைந்து விட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதை சீரமைக்காமல் அப்படியேமூடி, சாலையைப் போட்டுவிட்டது. 

                  இதனால் அதன் வழியாக வெள்ளம் வடிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.வண்டிப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பராமரிப்பு இன்றி தூர்ந்து, வெள்ளம் வடிவது தடைபட்டுக் கிடக்கிறது. இதே சாலையில் உள்ள மேலும் பல சிறிய பாலங்கள் அடைபட்டு வெள்ள நீர் வடியமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வண்டிப்பாளையம் சாலைக்கு மேற்கில் உள்ள, 30-க்கும் மேற்பட்ட நகர்களில் மழை வெள்ளம் வடியாமல் தேங்கத் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

                தொடர்ந்து மழை பெய்தால், இந்த நகர்களில் வசிப்போர், வீடுகளைவிட்டு  வெளியே வரமுடியாத நிலை ஏற்படும் என்று, கடலூர் அனைத்து நகர குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் அச்சம் தெரிவித்தார்.

துகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது

                      பாலங்கள், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read more »

சனி, நவம்பர் 20, 2010

பாதாள சாக்கடை திட்ட பணி: பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் நடத்த வேண்டாம்; கடலூர் கலெக்டர் அறிக்கை

கடலூர்:

Read more »

திங்கள், அக்டோபர் 04, 2010

வெளிநாடுகளுக்குப் பறக்கும் வண்டிப்பாளையம் பொம்மைகள்


கடலூர் வண்​டிப்​பாளையத்​தில் பொம்மை தயா​ரிக்​கும் தொழி​லாளி.
 
கடலூர்:
 
              கடலூரை அடுத்த பண்டிதர்பாளையம் என்பதுதான் பின்னாளில் வண்டிப்பாளையம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே சிறந்த நகரமாக விளங்கியது வண்டிப்பாளையம். தற்போது கடலூர் நகரத்தின் ஒரு பகுதியாக, சற்று பின்தங்கிய பகுதியாகவும், பழமையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்கி வருகிறது.  
 
                 வண்டிப்பாளையத்தில் பொம்மை தயாரிக்கும் தொழில் பாரம்பரியம் மிக்கதாக பல தலைமுறைகளைத் தாண்டி நிலைத்து நிற்கும் தொழிலாக இருந்து வருகிறது. வண்டிப்பாளையத்தை அடுத்த மணவெளி கிராமத்திலும் அண்மைக்காலமாக பொம்மைத் தொழில் வளரத் தொடங்கி இருக்கிறது. வண்டிப்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. அவர்களில் பல குடும்பத்தினர் பல தலைமுறைகளாக பொம்மை தயாரித்து வருகிறார்கள். பொதுவான கலைத்திறன் கொண்ட பொம்மைகள் மற்றும் கடவுள்களின் உருவங்களில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. 
 
              கிறிஸ்தவ மதத்தினருக்கான பொம்மைகள் மற்றும் இந்து மதத்தினருக்கான பொம்மைகள் எனத் தனித்தனிக் குடும்பங்கள் இவற்றைத் தயாரிக்கின்றன. ஆண்டு முழுவதும் வீடுகளில் நடைபெறும் இத்தொழில், நவராத்திரி மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் விற்பனையின் உச்சக் கட்டத்தை அடைவதும், மற்ற காலங்களில் சாதாரணமான விற்பனையும், உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும் காலமாகவும் அமைந்து உள்ளது. தற்போதைய விற்பனையில் கிருஷ்ணர், ராதை, லட்சுமி, முருகன் பொம்மைகள் சிறப்பான இடத்தைப் பிடித்து உள்ளன.
 
பொம்மைத் தொழில் குறித்து வண்டிப்பாளையம் துரைராஜ் கூறியது
 
                 எங்கள் குடும்பத்தினர் 3 தலைமுறையாக பொம்மை செய்து வருகிறோம். வண்டிப்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மைத் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. பலர் பாரம்பரியமாகச் செய்து வருகிறார்கள். வண்டிப்பாளையத்தில் பெரும்பாலும் களிமண் மற்றும் காகிதக் கூழால் தயாரிக்கும் பொம்மைகள்தான் அதிகம். களிமண்ணால் செய்து அதைச்சுட்டு பின்னர் வர்ணம் தீட்டுகிறோம். காகிதக் கூழை அரைத்து வாங்கி அதில் சுக்கான் மாவு, மரவள்ளிக் கிழங்குமாவு ஆகியவற்றைச் சேர்த்து பொம்மை தயாரிக்கிறோம். 
 
                          அச்சுகளில் வார்த்து எடுத்து காய வைத்து வர்ணம் தீட்டுகிறோம். பொம்மைத் தொழிலில் மனைவி பிள்ளைகள் என்று குடும்பமாக உழைக்கிறோம். காலை 7 மணிக்கு தொழில் செய்யத் தொடங்குவோம். பல நேரங்களில் இரவு 10 மணி வரைகூட தொழில் செய்வோம்.  இந்தத் தொழிலில் உழைப்புதான் முக்கியம். உழைப்புக்கு ஏற்பதான் ஊதியம் கிடைக்கும். வண்டிப்பாளையத்தில் 10க்கு கிடைக்கும் சிறிய விநாயகர் சிலை முதல், 5 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள கலையம்சம் பொருந்திய சிலைகளும் தயாரிக்கிறோம். 
 
                   கடலூரில் இருந்து மும்பை, தில்லி, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பொம்மைகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சென்னையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் வண்டிப்பாளையம் பொம்மைகளை வாங்கி, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ மதம் சார்ந்து பொம்மைகள் கேரளம், கோவா போன்ற மாநிலங்களுக்கு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றார் துரைராஜ்.

Read more »

சனி, ஆகஸ்ட் 14, 2010

கடலூரில் பெண் சிசு கிணற்றில் வீச்சு

கடலூர்: 
                 பெண் குழந்தையை கிணற்றில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. புதுப்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கண்ணன் நிலத்தில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ,  கிணற்றில் வீசியுள்ளனர்.  வி.ஏ.ஓ., ராஜா கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசியவர்களை தேடி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior