உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வண்ணாரப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வண்ணாரப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 25, 2010

கடலூர் மாவட்டத்தில் கனமழை : தத்தளிக்கும் கடலூர் நகரம்


வடிகால் வசதி இல்லாததால், வன்னியர் பாளையம் பகுதியில் வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீர். வடிகால் வாய்க்கால்கள் அடைப்பட்டு கிடப்பதால் மழைநீர் தேங்கி, ஏரி போல் காட்சி அளிக்கிறது
 
கடலூர்:

          வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டெல்டா பாசனப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

                பகல் நேரத்தில் சற்று வெயில் காய்வதும், மற்ற நேரங்களில் மேகமூட்டத்துடன் மழை பெய்வதுமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. காலை 8 மணி வரையிலும் மழை நீடித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

                  கடலூரில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் பெருமளவுக்குத் தேங்கி உள்ளது. கடலூரில் முறையான மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால், சரவணன் நகர், துரைசாமி நகர், புதுநகர், கே.கே.நகர், வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், எஸ்.எஸ்.ஆர். நகர், வரதராஜன் நகர், ரட்சகர் நகர், கூத்தப் சுப்புராயன் நகர் உள்ளிட்ட ஏராளமான நகர்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

               சாலைகள் அபரிமிதமாக உயர்த்தப்பட்டப் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான மாநில நெடுஞ்சாலைகளும், தேசிய நெடுஞ்சாலையும் சேதம் அடைந்து வாகனப் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45.5 அடி (மொத்த உயரம் 47.5 அடி), வீராணம் நேரடி பாசனப் பகுதிகளுக்கு 15 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மற்ற ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

              வாலாஜா ஏரியில் இருந்து 1,509 கனஅடியும், பெருமாள் ஏரியில் இருந்து 2,215 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 12,466 கனஅடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது.

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:

அண்ணாமலை நகர் 45 
கொத்தவாச்சேரி 42 
காட்டுமன்னார்கோயில் 41 
சிதம்பரம் 38 
லால்பேட்டை 33 
கடலூர் 32.7 
புவனகிரி 24 
வானமாதேவி 20.3 
சேத்தியாத்தோப்பு 20 
பண்ருட்டி, 19 
குப்பநத்தம் 2.6 
காட்டுமயிலூர் 12 
ஸ்ரீமுஷ்ணம் 10 
வேப்பூர் 9, 
பெலாந்துரை
விருத்தாசலம் 7
பரங்கிப்பேட்டை 19 
தொழுதூர் 8

Read more »

வெள்ளி, அக்டோபர் 22, 2010

கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள உத்தரவு

கடலூர்:

               கடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை, பாதுகாப்புடன் மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.  

                 கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலையைத் தோண்டும் பணி தொடங்கப்பட்டு 3 நாள்களாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே இப்பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. பணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். இப்பணி எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடப்பதை அறிந்த ஆட்சியர், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடன் இதுகுறித்துப் பேசினார். 

                  பணி நடைபெறுவதாக எந்த அறிவிப்பும் அங்கு வைக்கப்படாமலும், தோண்டும் பணியில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை இருப்பதையும் ஆட்சியர் சுட்டிக் காட்டினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்த பிறகே பணி நடைபெற வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார். கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை தோண்டும் பணியின்போது, நகராட்சி குடிநீர் குழாய்கள் செவ்வாய்க்கிழமை உடைந்ததால் சாலைகளில் குடிநீர் ஆறுபோல் ஓடி வீணாகியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு தேங்கிய நீரை தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Read more »

சனி, ஜூலை 17, 2010

ரூ.5 லட்சம் கேட்டு வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண் சித்ரவதை; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கடலூர்:
 
            கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்த வர் தண்டபாணி. இவரது மகள் மஞ்சுளா (வயது 22). இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த என்ஜினீயர் சரவணனுக்கும் கடந்த 2 1/2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சரவணன் மும்பை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

                 திருமணம் முடிந்ததும் மனைவியை அவர் மும்பைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சுளா மும்பையிலிருந்து கடலூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி மும்பையில் வீட்டில் அடைத்து வைத்து தனது கணவர் சரவணன் சித்ரவதை செய்ததாகவும் அவருக்கு சரவணனின் தாய் ஞானசவுந்தரி, அண்ணன் மாணிக்கவாசகம், அக்காள் மாரிதேவி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.

 
               இதையடுத்து அந்த மனு கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சரவணன், ஞானசவுந்தரி, மாணிக்கவாசகம், மாரிதேவி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

திங்கள், ஜூலை 12, 2010

கடலூர் அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை: இருவர் கைது

கடலூர் : 

                கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் நோயாளிகளுடன் வரும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

                   கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுடன் வந்து தங்கும் பெண்களிடம் சில விஷமிகள் பாலியல் தொல்லை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த பாலமுரளி தனது தம்பியை கடலூர் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரும், அவரது தாய் வாசுகியும் தங்கியிருந்தனர்.தனியாக இருந்த வாசுகியிடம் கடலூர் வில்வநகர் பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் குணாளன் (29), ஜெயராமன் மகன் சுரேஷ் (27) ஆகியோர் வாசுகியிடம் அறுவருக்கத்தக்க வகையில் பேசி தகாத உறவுக்கு அழைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுகி கூச்சலிடவே அவரது மகன் பாலமுரளி தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த குணாளன், சுரேஷ் இருவரும் பேனா கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட் டினர்.இது குறித்து பாலமுரளி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப் பதிந்து குணாளன், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Read more »

வியாழன், ஏப்ரல் 29, 2010

மின் தடையால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது! பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி

கடலூர் : 

                      பராமரிப்பு பணிக்காக நேற்று கடலூரில் காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்ததால் அரசு அலுவலகங்களில் பணிகள் முற்றிலுமாக பாதித்தது.
 
                 மின்சாரம் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மின் வாரியம் சென்னை தவிர்த்து மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் தினசரி மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுகிறது.  கடலூர் மாவட்டத்தில் இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரங்களில் மின்சாரமின்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்தடை காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் தேக்கமடைகிறது. அரசு அலுவலகங்களில் போதிய இடப் பற்றாக் குறையினால் ஏற்கனவே புழுக்கத்தில் ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வருவதால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று மணி நேரம் மின்தடையால் கம்ப்யூட்டர்,  ஜெராக்ஸ் மற்றும் பேக்ஸ் போன்ற கருவிகளை இயக்க முடியாததால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் தடைபடுகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் அமர்ந்து வேலை பார்க்க முடியாமல் காற்றோட்டமாக அலுவலகத்தை விட்டு வெளியேறி விடுகின்றனர். இதனால் மின் தடை நேரங்களில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.
 
               இந்நிலையில் கடலூர் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நேற்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக வண்டிப்பாளையம்,  பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், கடலூர் முதுநகர், துறைமுகம், தேவனாம்பட்டினம், புதுப்பாளையம், பீச்ரோடு, வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம் பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப் பட்டது. மாவட்டத்தின் பிரதான அலுவலகமான கலெக்டர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், தாலுகா அலுவலகம், கால் நடை துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் மின் தடை காரணமாக நேற்று பணிகள் முற்றிலுமாக பாதித்தது. நேற்று காலை 11 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அலுவலகங்களில் புழுக்கத்தில் உட் கார முடியாமல் அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சமடைந்தனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
 
                      இதனை அறியாமல் நேற்று பல்வேறு பணி காரணமாக கிராமங்களில் இருந்து வந்த மக்கள் அரசு அலுவலகங்கள் முன் காலை முதல் மாலை வரை காத்திருந்தும் தங் களது பணியை முடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திட மக்கள் அதிகம் வந்து செல்லும் பிரதான அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் மின் தடை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதேபோன்று பரமரிப்பு பணிக்காக ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்துவதையும் விடுமுறை தினங்களில் செய் தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்காது. அதேநேரத்தில் வெகு தொலைவில் இருந்து வரும் கிராம மக்களும் தங்களது பணிகளை எளிதாக முடித்துக் கொண்டு செல்ல முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புதன், மார்ச் 17, 2010

கடலூரில் திடீர் தீ விபத்து ரூ.ஒரு லட்சம் சேதம்

கடலூர்: 
 
                    கடலூர் வண்ணாரப்பாளையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து ஒரு லட் சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன். அதே பகுதியில் கூரை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். வீட்டின் மற்றொரு பகுதியில் அஞ்சலைதேவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று பகல் 12 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு 2 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது நாராயணன் வீட்டில் மின் ஒயரில் தீப்பொறி ஏற்பட்டு கூரை தீ பிடித்து எரிந்தது. சற்று நேரத்தில் தீ அஞ்சலைதேவி வீட்டிற்கும் பரவியது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும்  வீட்டில் இருந்த "டிவி', மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior