உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வேப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 01, 2012

வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/c54620e4-afb5-4818-9eb3-6f8d25c3a37f_S_secvpf.gif 



திட்டக்குடி:


         வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 34 பேர் படுகாயமடைந்தனர். மதுரையில் இருந்து சென்னைக்கு பிப்ரவரி 27  ம்  தேதி  இரவு பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. பரமக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.
 
        வேப்பூரை அடுத்த பில்லூர் கைகாட்டி அருகே பிப்ரவரி 28  அதிகாலையில் அந்த பஸ் வந்தபோது திடீரென நிலை தடுமாறியது. டிரைவர் பாலகிருஷ்ணன் அதனை கட்டுப்படுத்த முயன்றும் பயனின்றி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த சசிரேகா, திரவியம் மற்றும் புஷ்பா, அவரது மகன் நாகராஜன் (29) உள்பட 34 பேர் படுகாயமடைந்தனர். ஒரு பயணி காயமின்றி தப்பினார்.
 
      விபத்து குறித்த தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார், நெடுஞ்சாலை இரவு ரோந்து படையினர் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்கும் பணி நடந்தது. 
 
 
 

Read more »

வியாழன், ஆகஸ்ட் 05, 2010

சிறுபாக்கம் பகுதியில் பருவமழை தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்


சிறுபாக்கம்:

              சிறுபாக்கம், வேப்பூர் மானாவாரி விவசாயிகள் நிலத்தினை உழுது, பருவமழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

             சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கழுதூர், அரியநாச்சி, சேப்பாக்கம், பெரியநெசலூர், மங்களூர், மலையனூர், அரசங்குடி, ஒரங்கூர் உள்ளிட்ட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த மானாவாரி விவசாயிகள் தொடக்க காலத்தில் ஆடிப்பட்டத்திற்கு ஏற்றவாறு, தங்களின் மானாவாரி நிலங்களில் வரகு, சோளம், மணிலா பயிர் கள் விளைவித்து வந்தனர்.

                   கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் காலம் தவறிய மழை, கடுமையான வெயில் ஆகியவற்றால் பயிர்களை மாற்றி, பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை விளைவித்து வருகின்றனர். "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப முன்னதாக பயிரிட்ட நிலத்திலுள்ள கழிவுகள், களைகளை அகற்றி 4 முறை டிராக்டர் கொண்டு உழவு செய்து நிலத்தினை தயார் செய்தனர். ஆனால் இந்த ஆண்டும் பருவமழை பெய்யாமல் கடந்த ஒரு மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதால் மானாவாரி விவசாயிகள் பரிதவிப்புடன் பருவமழையை எதிர்பார்த்து காத்துள் ளனர்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

சிறுபாக்கம், வேப்பூர் விவசாயிகள் மஞ்சள் விளைவிப்பதில் ஆர்வம்


சிறுபாக்கம்:

           வேப்பூர், சிறுபாக்கம் விவசாயிகள் போதிய விலை கிடைக்கும் மஞ்சள் பயிரை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

           வேப்பூர், சிறுபாக்கம் உட்பட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் பண தேவைகளுக்காக நீர்ப்பாசன நிலங்களில் ஒரு ஏக் கர் முதல் இரண்டு ஏக்கர் வரை மஞ்சள் பயிர்களான சேலம் 1, ஈரோடு 2, பனங் காளி, எருமதாளி, நுர ஆகிய மஞ்சள் ரக பயிர்களை விளைவித்து வந்தனர்.கடந்த ஆண்டு ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் மார்க்கெட்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு குவிண்டால் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை நல்ல விலைக்கு எடுக்கப்பட்டது. 

               கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குவிண்டாலுக்கு 16 ஆயிரம் வரை மஞ்சளுக்கு விலை வழங்கப்பட்டு வருகிறது.இதனால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் மஞ்சள் விளைவித்த 30 சதவீத விவசாயிகளை தொடர்ந்து தற்போது 90 சதவீத விவசாயிகள் மஞ்சள் பயிர் விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Read more »

திங்கள், ஜூலை 26, 2010

வேலைப்பளு, நோய் தாக்குதல் இல்லை : பூக்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சிறுபாக்கம்:

          வேலைப்பளு மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் பூக்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

             வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன விளை நிலங்களில் அண்மைக் காலமாக குறைவான பருவ மழையைக் கொண்டு காய்கறிகளை விளைவித்து வந்தனர்.ஆனால் பருவநிலை மாற்றத்தாலும், நோய் தாக்குதல், பணியாளர்கள் தட்டுப்பாடு, கொள் முதல் நிலையங்களுக்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாத நிலை ஆகியவற்றால் காய் கறிகளை பயிரிடுவதில் தயக்கம் காட்டி வந்தனர். 

                  கடந்த இரண்டு ஆண்டுகளாக விளை நிலங்களில் உள்ள தரை கிணற்றில் கிடைக்கும் குறைவான நீரைக் கொண்டும் அதிக வேலைப்பளு, நோய் தாக்குதல்கள் இல்லாததாலும் கோழிக் கொண்டை, சம்பங்கி, டில்லி கனகாம்பரம், மல்லிகை, மரிக்கொழுந்து, சாமந்தி உள்ளிட்ட பூக்களை விளைவிக்கின்றனர்.கிடைக்கும் பூக்களை அருகிலுள்ள விருத்தாசலம், சேலம், ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளிலுள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி கணிசமான வருவாயை பெற்று வருகின்றனர். இதனால் விவசாயிகள் அதிகளவு பூக்களை பயிரிவதில் ஆர் வம் காட்டுகின்றனர்.

Read more »

புதன், ஜூலை 21, 2010

வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரிகலெக்டருக்கு மனு

சிறுபாக்கம்: 

           வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரி நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

நேரு இளைஞர் மன்றத் தலைவர் கணேஷ்ராம், கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனு:

              பெரியநெசலூர் ஊராட்சியில் விவசாயத்திற்கும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக விளங்கி வரும் பெரிய ஏரியாகும். இதனைச் சுற்றியுள்ள விளம்பாவூர், களத்தூர், குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி தூர்ந்து காணப்படுவதால் மழைக் காலங்களில் உடனுக்குடன் நீர் வெளியேறுவதால் ஏரி வறண்டு விடுகிறது. இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு அறுவடை காலத் திற்கு நீர் இல்லாமல் அவதியடைகின்றனர். ஏரியின் கண்மாய்கள் தூர்ந்துள்ளதால் அதிகளவு நீரை சேமித்து வைக்க முடியவில்லை. எனவே ஏரியை ஆழப்படுத்தியும், மதகுகள் மற்றும் கண் மாய்களை சீரமைத்துத் தர வேண்டும் என  மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், ஜூலை 20, 2010

இடிந்து விழும் ஆபத்தான நிலையில் விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டடம்

விருத்தாசலம் : 

          விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
 
              விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையின் அருகே விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடலூர்- திருச்சி, விழுப்புரம் - திருச்சி பாசஞ்சர் ரயில்கள் நின்று போகும். இந்த ஸ்டேஷனில் இருந்து நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த டவுன் ஸ்டேஷனுக்கான அலுவலகக் கட்டடம் 1994ம் ஆண்டு கட்டப்பட்டது.  இதில் டிக்கெட் கவுன்டர், அலுவலக அறை, பயணிகள் ஓய்வு அறை உள்ளது. இந்த கட்டடம் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 

           கட்டடத்தின் மேலே ஆலமரம் வளர்ந்து அதன் வேர்கள் கட்டட சுவற்றுக்குள் சென்றதால் ஆங்காங்கே சுவரில் விரிசல் காணப்படுகிறது. இதனால் எப்போது இடிந்து விழும் என தெரியாத அபாய நிலை உள்ளது. மக்கள் தினமும் அலுவலக அறைக்குச் சென்று டிக்கட் எடுக்க பயன்படுத்தும் இந்தக் கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் கட்டடத்தின் மேல் உள்ள மரத்தினை அகற்றி, கட்டடத்தை முறையாக பராமரிக்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior