உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வேலை வாய்ப்பற்ற இளைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை வாய்ப்பற்ற இளைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 18, 2011

கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் வினியோகம்

கடலூர் : 

         வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் கடந்த 1ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 300 ரூபாய், பிளஸ் 2 விற்கு 375 ரூபாய், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 450 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

             இத்திட்டத்தில் உதவித் தொகை பெற உடல் ஊனமுற்றவர் அல்லது செவித் திறன் குறைந்தவராகவும், தங்கள் கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்த, 40 வயதிற்கு (ஆதிதிராவிடர்கள் 46 வயது) உட்பட்டவராக இருக்க வேண்டும்.தகுதி உடையவர்கள் வேலை நாட்களில் கடலூரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 





Read more »

திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவில் திட்ட அலுவலர்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

          வளர் இளம் பருவத்தினர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

              கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு புவனகிரி, நல்லூர் ஒன்றியங்களில் வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட திட்ட அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சமூகப் பணி, சமூக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

            வயது 2011ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று 25 முதல் 35 வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஊக்கத் தொகை மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 

நேரு யுவ கேந்திரா, 34, 
ராமதாஸ் தெரு, 
புதுப்பாளையம்,
கடலூர் 

                  முகவரிக்கு வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04142-293822 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஐ.டி.ஐ.,யில் குறுகிய கால பயிற்சி

கடலூர்  : 

          வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடலூர் ஐ.டி.ஐ.,யில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: 
                 
                இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அடிப்படை, குறுகியகால பயிற்சி திட்டத்தின் கீழ் எம்.இ.எஸ்., திறமையும் அனுபவமும் கொண்ட பயிற்றுனர்களைக் கொண்டு கடலூர் ஐ.டி.ஐ., யில் பின்வரும் தொழிற் பிரிவுகளில் இலவசமாக பயிற்சி அளிக்கப் படவுள் ளது. இப்பயிற்சி ஆண்டு முழுவதும் அரசிடமிருந்து மாற்று ஆணை பெறப்படும் வரை தொடர்ந்து நடத் தப்படும். அடிப்படை ஆட்டோ மோட்டிங் இரண்டு மற் றும் 3 சக்கர வாகனங்கள் பராமரித்தல், அடிப்படை பற்றவைப்பு, வீட்டு உபகரணங்கள் பழுது, வீட்டு ஒயரிங், அடிப்படை பொருத்துனர், கடைசலர்,  பிளாஸ்டிக் மோல்ட் அசிஸ் டெண்ட், கணினி இயக்குனர் மற்றும் திட்டமிடுதல் பிரிவுகளில் பயிற்சி நடைபெறவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அரசு வழங் கும் இலவச பயிற் சியை பெற்று அதற்குண்டான சான்று பெறும் வாய்ப் பினை பயன்படுத்திக் கொள்ள கடலூர்  அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior