உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஸ்ரீமுஷ்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீமுஷ்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 05, 2012

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் தேரோட்டம்


ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற ஸ்ரீபூவராகசுவாமி கோயில் தேரோட்டம்.

சிதம்பரம்:


 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயில் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக தொடங்கியது. ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப். 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா மே 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீயக்ஞவராகசுவாமி திருத்தேரில் எழுந்தருளி தேரோடும் நான்கு வீதிகளில் உலா வந்தார். திரளான பக்தர்கள் தேர்திருவிழாவில் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆனால் கடை வீதி அருகே வந்தபோது அங்கிருந்த கட்டட முகப்பின் மீது மோதி தேர் நின்றுவிட்டது. சனிக்கிழமை காலை தேரை நிலைக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தாரின் உதவியுடன் திருத்தேர் அச்சு மற்றும் சக்கரம் பொருத்தப்பட்டு, பழுதுபார்த்து கடந்த ஏப். 25-ம் தேதி திருத்தேர் திருப்பணி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர் நிலைக்கு வருவதில் தடை

தேர் கடைவீதி அருகே வந்தபோது கானூர் செட்டியாருக்கு சொந்தமான கட்டடத்தில் தேரின் மேல்பகுதி இடித்து அதில் சிக்கியது. இதனால் தேர் நிலைக்கு செல்வது தடைபட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளிலிருந்து தேரை நகர்த்தினால் தேரின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடையும் என்பதால் சனிக்கிழமை காலை தேரை சீரமைத்து நிலைக்கு கொண்டு வர கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் சுவாமியுடன் தேர் அதே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

















Read more »

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

ஸ்ரீமுஷ்ணம் வாசவி கப்புள்ஸ் கிளப், நிவேதிதா பதிப்பகம் சார்பில் புத்தக கண்காட்சி

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_398285.jpg

ஸ்ரீமுஷ்ணம் : 

          எழுத்தாளர்களின் பேனா குனிவதால் சமூகம் தலை நிமிர வேண்டும் என எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினர். ஸ்ரீமுஷ்ணம் வாசவி கப்புள்ஸ் கிளப், நிவேதிதா பதிப்பகம் சார்பில் புத்தக கண்காட்சி திறப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. வாசவி கிளப் கப்புள்ஸ் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். நிவேதிதா பதிப்பகம் தேவகி வரவேற்றார். 

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆர்.சி. சம்பத் எழுதிய "அந்த நாள் நினைவுகள்', சபீதா ஜோசப் எழுதிய "வ.உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு' ஆகிய புத்தகங்களை வெளியிட்டு பேசியது :
 

         தமிழகத்தில் புத்தக கண்காட்சிகள் நடத்துவது மிகவும் அரிதான விஷயம். நகரின் வளர்ச்சி என்பது கட்டடங்கள், அடிப்படை வசதிகள் வளர்வதில் இல்லை. நகரில் எத்தனை நூலகங்கள், தனியார் நூலகங்கள் வளர்ந்துள்ளன என்பதை பொறுத்து அமையும். இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் படிப்புக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் நிலை உள்ளது. நகரினை மையமாக வைத்து பள்ளிகளை உருவாக்குகிறார்கள். ஆனால் பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகள் இல்லாமல் நகரினை உருவாக்குவது கிடையாது. குழந்தை பிறக்கும் போது அவற்றை பள்ளியில் சேர்ப்பது குறித்த கவலை இல்லை.
 
       குழந்தை பிறந்த 3 ஆண்டுகள் கழித்து அரசிடம் இருந்து குழந்தையின் பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி குறித்த அறிவிப்பு தபால் மூலம் தெரிவித்து பள்ளியில் சேர்க்க வைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இரவு பகலாக பள்ளிக்கூட வாசலில் தவம் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. வெளிநாடுகளில் விண்ணப்பம் தரும் பழக்கமே இல்லை.  குழந்தைகளின் மனதில் கற்பிக்கும் திறனை வளர்க்க வேண்டும். புத்தகங்களை வாங்கிக்கொடுத்து படிக்க பழக்க வேண்டும்.பெற்றோர்கள் வீடுகளில் பூஜை அறை ஒதுக்குவது போல் புத்தகங்களுக்கு என தனியாக அறை ஒதுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து விரிவாக தெரியப்படுத்த வேண்டும்.
 
          புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களின் பேனா குனிவதால் சமூகம் தலை நிமிர வேண்டும். மனிதனுக்கு அழகு என்பது அறிவும், ஆரோக்கியமும் தான். அழகிய முகம் உடையவர்கள் வரலாற்றிலே இடம் பிடிக்க முடியாது. வீரமாக வாழ்ந்தால் தான் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும். எழுத்தாளர்கள் மனிதர்களுக்காக எழுதுகிறார்கள். ஆகவே அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினார்.

          தொடர்ந்து கவிஞர் இன்பா சுப்ரமணியன் வாசவி வாசகர் வட்டத்தை துவக்கி வைத்தார். இதில் எழுத்தாளர்கள் சம்பத், சபீதா ஜோசப், ஆரிய வைசிய சங்க தலைவர் ராஜேந்திரன், வாசவி கிளப் கப்புள்ஸ் சாசன தலைவர் பத்மநாபன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கழுகுப்பார்வை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். 










Read more »

திங்கள், டிசம்பர் 26, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடலூர் : 

               ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் சிகிச்சை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             ஒரத்தூர், நடுவீரப்பட்டு, ஸ்ரீமுஷ்ணம், ஆயங்குடி, மருங்கூர், பெண்ணாடம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் பல் சிகிச்சை மையங்களில் பல் டாக்டர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் வாரத்திற்கு 6 நாள் பணி வழங்கப்படும். இவர்களுக்கு தினசரி மூன்று மணி நேரத்திற்கு முறையே 500 மற்றும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பல் மருத்துவத்தில் பட்டப் படிப்பும், உதவியாளர் பணிக்கு பல் மருத்துவ பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

            விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூரில் இயங்கி வரும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையில் இயங்கும் மாவட்ட சுகாதார குழும உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடியில் புதிய மின் மாற்றி

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் திறன் மின்மாற்றிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

              ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் முன்னிலை வகித்தார். ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி, சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதன் மூலம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த மற்றும் அதிக மின்அழுத்தம் இல்லாமல் சீரான மின்சார விநியோகம் கிடைக்கும் என மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி தெரிவித்தார்.














Read more »

சனி, ஆகஸ்ட் 13, 2011

ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ். சமுதாய கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

ஸ்ரீமுஷ்ணம்:

              ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ்., சமுதாய கல்லூரி நர்சிங் உதவியாளர்கள் கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.

                கல்லூரி நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ரவிக்குமார், கமல், ஆகியோர் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி செயல் விளக்க பயிற்சி அளித்தனர். முகாமில் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகள், விரிவுரையாளர்கள் வள்ளி சுப்ரமணியன், சதீஷ், சரவணன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





Read more »

புதன், ஆகஸ்ட் 11, 2010

பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணம்:

              பள்ளி மாணவர் இறப் பிற்கு காரணமான நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர்.

              கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் (16). ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குப்பாளையத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை விடுதியில் உள்ள செப்டிக் டேங்க் கழிவை சுத்தம் செய்யும்படி விஜய் உள் ளிட்ட மாணவர்களிடம் வார்டன் கூறினார்.
 
               மின் மோட்டார் இணைப்புடன் கூடிய பைப் மூலம் கழிவுநீரை வெளியேற்ற, மின் இணைப்பு கொடுத்தபோது எதிர்பாராதவிதமாக விஜய் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் விஜய் இறந்தார். மாணவர் விஜய் ஹாஸ்டலில் உள்ள சுவிட்சை போடும் போது மின்சாரம் தாக்கி இறந்ததாக, பள்ளி நிர்வாகத்தினர் சோழத்தரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

                  இதனையறிந்த மாணவரின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிந்து நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பள்ளியின் ஹாஸ்டல் வார்டன்கள் அந்தோணிசாமி, பாக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர். மேலும், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் விஜயலட்சுமி நேரில் சென்று பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior