திருச்சியில் புதிய இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) 60 மாணவர்களுடன் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.
புதிய ஐஐஎம்முக்காக 12 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 27 மாணவர்களும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என திருச்சி ஐஐஎம் இயக்குநர் டாக்டர் பிரபுல்லா அக்னிஹோத்ரி தெரிவித்தார்.
முதல் பிரிவில் 60 மாணவ, மாணவியர்களுடன் ஜூன் 15 ம் தேதி ஐஐஎம் திறக்கப்பட உள்ளது. 20 பேராசிரியர்களுக்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே மேலும் 4 அல்லது 5 பேரைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என அக்னிஹோத்ரி தெரிவித்தார்.