உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 03, 2009

ஒருநாள் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காத கடலூர் நகரச் சாலைகள்

கடலூர், அக். 29:

கடலூரில் ஒருநாள் (புதன்கிழமை இரவு) பெய்த மழையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் படுமோசமாகக் காட்சி அளிக்கின்றன.
கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் தணியும் வகையில், புதன்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்தது.
ஆனால், இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் குண்டும், குழியுமாக உள்ள ஏனைய சாலைகள் அனைத்தும் திடீர் மழையால் உழுதுபோட்ட வயல்போல சகதிக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பலர் சாலைகளில் விழுந்து, சகதியில் புரளும் நிலை ஏற்பட்டது. இரு சக்கரவாகன ஓட்டிகளும் சகதியில் வழுக்கி விழுந்து சாக்கடையை உடலில் பூசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மழைக்கு முன்னரே முடிக்குமாறு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகள் எதுவும் முடிக்கப்படாதாதால் இத்தகைய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஒரு நாள் மழையிலேயே இந்நிலை என்றால், பலத்த மழை பெய்யும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போதே கடலூர் நகர மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மழைக் காலம் தொடங்கிவிட்டதால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தற்போது தொடர வாய்ப்பு இல்லை என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்காகத் தோண்டப்பட்ட மண் முழுவதும் சாலைகளில் கொட்டப்பட்டு, சாலைகளின் மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது.
இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் கூறுகையில், சாலைகள் மோசமானதால், சாலைகளின் தடுப்புக் கட்டை மேலும் மதிற்சுவர்களுக்கு மேலும் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றாததால் 50 செ.மீ. வரை சாலைகளின் மட்டம் உயர்ந்து விட்டது. புதிய சாலைகள் அமைக்கும் போது மேலும் 30 செ.மீ. உயர வாய்ப்பு உள்ளது.
எனவே, சாலைகளில் குவிக்கப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

Read more »

சனி, அக்டோபர் 10, 2009

அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி

அக்டோபர், 09- 2009

கடலூர்:
    
        தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிக்கான இடைத்தேர்தல் 7-ந் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடந்தது.

           கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் தமிழரசன் வெற்றி பெற்றுள்ளார். 

ஓட்டுகள் விவரம் வருமாறு:-

         தமிழரசன்-146 (தே.மு.தி.க.), மங்கையர்க் கரசி-124 (தி.மு.க.). 

லால்பேட்டை பேரூராட்சி
 
           லால்பேட்டை பேரூராட்சி 3-வது வார்டு கவுன் சிலர் பதவிக்கான தேர்தலில் த.மு.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். 

ஓட்டுகள் விவரம் வரமாறு:-
 
         யாசர் அரபாத்-102 (தே.மு.தி.க.), சிராஜுதீன்-85 (சுயே).
 
விருத்தாசலம்

              விருத்தாசலம் நகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் காசிநாதன் 999 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மணிகண்டன் 876 ஓட்டுகள் பெற்றார்.
 
         இதேபோல் விருத்தாசலம் ஒன்றியம் எம்.புதூர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் தேர்த லில் 150 வாக்குகள் பெற்று முருகையனும், எம்.பரூர் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் முருகேசன் 325 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
          

Read more »

ஸ்டிரைக் வாபஸ் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்

நெய்வேலி:

             நெய்வேலி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்திடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

               இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி இரவு 10 மணி முதல் என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் என்.எல்.சி. நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

            அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன், கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், என்.எல்.சி. நிறுவன சேர்மன் அன்சாரி, நிறுவன இயக்குனர்கள் சுரேந்தர்மோகன், பாபுராவ், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பேச்சுவார்த் தையில் கலந்து கொண்டனர்.

             சுமார் 3 மணி நேர பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ரூ.51 ஆயிரம் போனஸ் மற்றும் இன்சென்டிவ் தொகையாகவும், வருகை பதிவின் அடிப்படையில் கூடுதல் ஊக்க தொகையாக ரூ.8160 வழங்கவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டது. மேலும் ஒப்பந்த தொழிலாளர் சீனியாரிட்டி பட்டியலை 2 மாதங்களில் வெளியிடவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக தலா ரூ.500 வழங்கவும் நிர்வாக தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. 

              பேச்சுவார்த்தை உடன் பாட்டை தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். இன்று காலையிலும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior