உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

கோழிப்பண்ணைக்கு தீவைப்பு

திருக்கோவிலூர் : 

              கோழிப்பண்ணைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
              திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் கிராமத் தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் நாராயணன் (29). கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர் திருமணத் திற்கு சென்றபோது இவருக்கும் மேலக் கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் சிவக்குமாருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு நடந்த அன்று இரவு திடீரென நாராயணனின் கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்துபோனது. முன் விரோதத்தின் பேரில் தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளதாக நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பைக் மோதி வாலிபர் பலி

சிதம்பரம் : 

                நடந்து சென்ற விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.
 
                    சிதம்பரம் அடுத்த தில்லைநாயகபுரத்தை சேர்ந் தவர் புருஷோத்தமன் (25). விடுதலை சிறுத்தை கட்சி புவனகிரி ஒன்றிய முற்போக்கு மாணவர் பேரவை செயலாளர். இவர் நேற்று முன்தினம்  இரவு சிதம்பரத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வண்டிகேட் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் படுகாயமடைந்த புருஷோத்தமன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பைக் ஓட்டிவந்த பள்ளிப்படையை சேர்ந்த பாலமுருகனை கைது செய்தனர்.

Read more »

ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலியால் சாவு

கடலூர் : 

               கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலியால் இறந்தார்.
 
               புதுச்சேரி தட்டாஞ்சாவடி ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் சுசில்குமார் (40). இவர் மனை வியை கொலை செய்த வழக்கில் ஆரோவில் போலீசாரால் வழக்குப் பதிந்து, திண்டிவனம் கோர்ட்டில் கடந்த ஜூலை 28ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு, கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். நேற்று அதிகாலை சுசில்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் சிறைத் துறை டாக்டர் பரிசோதித்து, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனைக்கு வரும் வழியில் சுசில்குமார் இறந்தார். ஏற்கனவே இவருக்கு 2 முறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக சிறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்து, கடலூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் விசாரணை நடத்தினார். மேலும், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior